தந்தை பெரியார் 141ஆவது – அறிஞர் அண்ணா 111ஆவது பிறந்தநாள் விழா
ஆவணி 28, 2050 சனிக்கிழமை 14.9.2019தஞ்சாவூர்: மாலை 5.00 – 8.30 மணி பெசண்ட்டு அரங்கம், தஞ்சாவூர் தந்தை பெரியார் 141ஆவது – அறிஞர் அண்ணா 111ஆவது பிறந்தநாள் விழா – செட்டம்பர் 21, 22 அமெரிக்காவில் நடைபெறும் பெரியார் பன்னாட்டு மாநாட்டில் பங்குபெறும் வழக்குரைஞர் சி.அமர்சிங்கு, அ.கலைச்செல்வி, மா.அழகிரிசாமி ஆகியோருக்குப் பாராட்டுவிழா வரவேற்புரை: பா.நரேந்திரன் (தஞ்சை மாநகரத் தலைவர்)தலைமை: வெ.செயராமன் (தஞ்சை மண்டலத் தலைவர்)முன்னிலை: இரா.செயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்),இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), மு.ஐயனார் (தஞ்சை மண்டலச் செயலாளர்),அ.அருணகிரி (தஞ்சை…
திராவிடர் கழக மாநில மாநாடு, தஞ்சாவூர்
மாசி 11& 12,, 2050 / 23 & 24 .02.2019, திலகர் திடல், தஞ்சாவூர் திராவிடர் கழக மாநில மாநாடு சமூக நீதி மாநாடு
அனைத்துலக 16ஆவது சைவத்தமிழ் மாநாடு, தஞ்சாவூர்
ஆடி 05, 2049 சனி 21.07.2018 முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை அனைத்துலக 16ஆவது சைவத்தமிழ் மாநாடு, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக இலக்கியத்துறை மொரிசியசு மாணிக்கவாசகர் திருக்கூட்டம் திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம்
இன்றைய தேவை குறுஞ்சொற்களே! 3/3 . இலக்குவனார் திருவள்ளுவன்
(இன்றைய தேவை குறுஞ்சொற்களே! – 2/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே! 3/3 நெடுமையும் குறுமையும் துறைதோறும் கலைச்சொல், சொல்லாக அமையாமல், பொருள்விளக்கத் தொடராக இருப்பதற்குச் சில எடுத்துக்காட்டு காண்போம். ? centrifuge வெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருட்களைச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம் இங்கு ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்ட பொருள்விளக்கத்தை அப்படியே தமிழில் தந்துள்ளார்களே தவிர, உரிய கலைச்சொல்லை உருவாக்கவில்லை. பொறியின் செயல்பாடு , தோற்ற அடிப்படையில் சுழற்சல்லறைப்பொறி எனலாம். எனினும் இன்னும் சுருக்கமாகப் பிரிவை எனலாம். அல்லது பிரிவை எனக் குறிப்பிட்டு, பிரிவை –…
இன்றைய தேவை குறுஞ்சொற்களே! 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(இன்றைய தேவை குறுஞ்சொற்களே! – 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே! 2/3 தெரிபொருளும் புரி பொருளும் சொல் இடத்திற்கு ஏற்பப் பொருளைப் பெறுகின்றது என்பதை மறந்து நாம் ஏற்கெனவே அறிந்த பொருளையே பொருத்திப் பார்க்கும்பொழுது சொல்லாக்கம் தவறாய் அமைகிறது. இத்தவறு நேரக்கூடாது என விழிப்புடன் இருக்கையில் சொல் விளக்கமாய் அமைந்து விடுகிறது. அதையே மற்றொரு வகையாகவும் கூறலாம். ஒவ்வொரு சொல்லும் வெளிப்படையாகத் தெரிவிக்கும் பொருள் ஒன்று உண்டு. அதே சொல் உணர்த்திப் புரிய வைக்கும் பொருள் பல உண்டு….
இன்றைய தேவை குறுஞ்சொற்களே! . இலக்குவனார் திருவள்ளுவன்
இன்றைய தேவை குறுஞ்சொற்களே! ‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக்’ கலைச்சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு பான்மை கூட்டுச்சொற்களாக அமைகின்றன. சொலலாக்கம் கூடியவரை தனிச்சொற்களாக அமைக்கப்பட வேண்டும். இவையும் மூன்று அல்லது நான்கு எழுத்துகளுக்கு உட்பட்டக் குறுஞ்சொற்களாய் இருத்தல் வேண்டும். நெடுஞ்சொல் அஞ்சி அயல்மொழியிலுள்ள குறுஞ்சொல்லையே எடுத்தாளக் கூடாது என வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். எளிமையும் வழமையும் அயற்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை உருவாக்குகையில் பெரும்பாலானவை பொருள் விளக்கமாக அமைகின்றன. இதனால் வினைவடிவம், பெயர் வடிவம் போன்று வெவ்வேறு சொல்வடிவங்களில் இதுபோன்ற சொற்களைக் கையாளுகையில்…
4 நாள் கல்வெட்டுப் படிப்புப் பயிற்சி – தஞ்சாவூர்
தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சை 4 நாள் கல்வெட்டுப் படிப்புப் பயிற்சி ஆடி 5-8, 2048 / சூலை 18 – 21 கங்கை கொண்ட சோழபுரம் இவ்வாண்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் 2017 ஆம்…
ஓவியர் புகழேந்தியின் ‘நானும் எனது நிறமும்’ தஞ்சாவூரில்வெளியீடு!
பங்குனி 12, 2048 / 25.03.2017 மாலை 5.00 தஞ்சாவூர் (பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள பெசண்ட்டு அரங்கு) ஓவியர் கு. புகழேந்தியின் ‘நானும் எனது நிறமும்’ – தன் வரலாற்று நூல் வெளியீடு! தலைமை : தஞ்சை அ. இராமமூர்த்தி முன்னிலை : முனைவர் நல். இராமச்சந்திரன், திரு. துரை. பாலகிருட்டிணன் நூல் வெளியீடு : முனைவர் சுப. உதயக்குமார் பெறல்: …
காவிரித் தாய் காப்பு முற்றுகை, தஞ்சாவூர்
காவிரித் தாய் காப்பு முற்றுகை இடம் : தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வல்லம் சாலை) காலம் : தி.பி.2048 பங்குனி-15, 28.03.2017 செவ்வாய் காலை 10 மணி முதல் தமிழ்நாடு அரசே செயல்படு; இந்திய அரசைச் செயல்பட வை! இந்திய அரசே! காவிரித்தீரப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை நீக்காதே! காவரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு! புதிய ஒற்றைத் தீர்ப்பாயத்திற்குக் காவிரி வழக்கை அனுப்பாதே! விளைநிலங்களில் எங்கேயும் எரிநெய்மம்(பெட்ரோலியம்), எரிவளி, நிலக்கரி எதுவும் எடுக்காதே! தமிழ்நாடு அரசே! மேற்கண்டகோரிக்கைகளைச் செயல்படுத்த இந்திய அரசை வலியுறுத்து; அரசியல் அழுத்தம் கொடு! காவிரிச்சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலமாக அறிவித்திடு! ஆறுகளைக்காலி செய்யும் மணல் விற்பனையை முற்றாக நிறுத்து! கட்டுமானப் பணிகளுக்கான மணல் எடுப்பது குறித்து, பரிந்துரை வழங்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்திடு! உச்சவரம்பின்றி அனைத்து உழவர்களின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்! தண்ணீரின்றிப் பயிர்அழிந்த நிலங்களுக்கு காணிக்கு(ஏக்கருக்கு) உரூ. 25,000 உதவித்தொகை வழங்கு! இதில் 5 காணிக்கு(ஏக்கருக்கு) மட்டும் என்ற வரம்பை நீக்கு! தண்ணீரின்றிப் பயிர் செய்யாமல் தரிசாகப் போடப்பட்ட நிலங்களுக்கு காணிக்கு(ஏக்கருக்கு) உரூ.15,000 உதவித்தொகை வழங்கு! உழவுத்தொழிலாளர்குடும்பம் ஒன்றுக்கு ரூ.25,000 துயர் துடைப்பு நிதி வழங்கு! தண்ணீரின்றிப் பயிர் அழிந்ததைக் கண்டு பதைத்து நஞ்சருந்தியும், மாரடைப்பு ஏற்பட்டும் இறந்த உழவர் குடும்பத்திற்கு உரூ.15,00,000இழப்பீடு வழங்கு! காவிரித் தாய் காப்பு முற்றுகை மேற்கண்ட கோரிக்கைகளுக்காகக், கட்சி சார்பின்றிக் காவிரி உரிமை மீட்புக் குழு, 28.03.2017 முதல் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்துகிறது. அனைவரும் வாருங்கள்! செய்தித் தொடர்பகம், காவிரி உரிமை மீட்புக் குழு இணையம்:www.kaveriurimai.com பேசி: 94432 74002, 76670 77075
தேர்தல் ஆணையம் வெட்கித் தலைகுனிய வேண்டும்! – மரு.இராமதாசு
தேர்தல் ஆணையம் வெட்கித் தலைகுனிய வேண்டும்! – மரு.இராமதாசு இடைத்தேர்தலில் திமுகவும் அதிமுகவும் பழைய வேட்பாளர்களை மீண்டும் நிறுத்தத் தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டதற்கு வெட்கி தலைகுனிய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மரு.இராமதாசு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வரும் நவம்பர் 19 அன்று தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். 2016 சட்டமன்றத் தேர்தலின்போது தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பணம் ஆறாக ஓடியதாகவும், இதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அவர்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙீ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙி] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙீ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள (இன்று ஒரத்தநாடு என்றும் சொல்லப்படுகின்ற) உரத்தநாட்டிலும் அரசர்மடம் (இராசாமடம்) என்னும் ஊரிலும் உண்டுறைப் பள்ளிகள் உள்ளன. அரசர் மடத்தில் பேராசிரியரின் மாமா வீரபத்திரர் அவர்களின் இரு மக்கள் பயின்று வந்தனர். அங்குச் சென்று கல்வி கற்கும் தணியா ஆர்வத்தில் பேராசிரியர் இருந்தார். பேராசிரியரின் தொடக்கப்பள்ளி ஆசிரியரான தமையன் முறையினரான சதாசிவம்(பிள்ளை) அவர்கள் விண்ணப்பம் அனுப்ப…
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டுவிழா, தஞ்சாவூர்
உலகத்தமிழர் பேரவை 9 ஆம் மாநாடு ஆனி 31 – ஆடி 01 & 02, 2047 / சூ லை 15, 16 & 17, 2016 கருத்தரங்கம் மகளிர் அரங்கம் நூல்கள்-இதழ்கள் கண்காட்சி மலர் வெளியீடு விருது வழங்கல் தனித்தமிழறிஞர்களைச் சிறப்பித்தல் பழ.நெடுமாறன்