இனமே சாகும்! – பாரதிதாசன்

தமிழர்க்கு அழைப்பு தமிழரெல்லாம் தமிழரையே சார்தல் வேண்டும் தமிழரல்லார் தமைச்சார்தல் தீமை செய்யும்! தமிழர்க்குத் தமிழர் தாம் இடர்செய் தாலும் தமிழர்பொது நலமெண்ணிப் பொறுக்க வேண்டும தமிழரெல்லாம் தமிழரன்றோ! தமிழர் அல்லார் தமிழரல்லார் என்பதிலும் ஐய முண்டோ? தமிழர்க்குத் தமிழரல்லார் இதுவரைக்கும் தமைமறந்தும் ஒரு நன்மை நினைத்த துண்டோ? தமிழனொரு தமிழனுக்குத் தீமை செய்தால் தனிமுறையிற் செய்ததென அதைம றந்து தமிழரது பொதுநலத்துக் குயிருந் தந்து தமிழரது பண்பை நிலைநிறுத்த வேண்டும், தமிழனுக்குத் தனிமுறையில் செய்த தீமை தமிழர்க்குச் செய்ததென நினைத்தல் நன்றா? தமிழரெலாம்…

உலகப் பண்பாடுகள் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளே!

உலகப் பண்பாடுகள் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளே!    நடுநிலக் கடலைச் சூழ்ந்து வாழ்ந்த மக்களினம் இந்திய தீவக்குறையில் தோன்றியது என்றே தீர்மானிக்கலாம்… இத்தீவக்குறை, தென்னிந்தியாவை ஆப்பிரிக்காவோடு இணைந்திருந்ததும், சிந்துகங்கை ஆறுகளின் பள்ளத்தாக்கு அமையாத காலத்தில் கடலில் மூழ்கியதுமான குமரிக் கண்டத்தில் இருந்ததாகும். இம்மாநிலமே திராவிடரின் மூலத் தாயகமாகும். …..   …..   ….. எனவே, திராவிடப் பண்புகள் இந்திய நாகரிகத்தில் மட்டும் காணப்படவில்லை; சிறந்த நாகரிகச் சிறப்பினை அடைந்திருந்த கிரீக்கு, சுமேரியா, பாபிலோனியா, பாலினீசியா போன்ற நாடுகளிலும் மற்றும் பண்டை உலகின் நாகரீக நாடுகள் பலவற்றிலும்…

ஆரியர் இந்தியா வந்தபின்பே தமிழரைப் பார்த்து எழுதினர்

ஆரியர் இந்தியா வந்தபின்பே தமிழரைப் பார்த்து எழுதினர்   ஆரியர் இந்தியாவிற் புகுந்த பின் தமிழர் உடைய நாகரிக அவர் தாங்கருதிய பொருளை எழுத்திலிட்டுப் பொறித்தலுங் கண்டு தாமும் தம்முடைய பாட்டுக்களைப் பண் அடைவுபட வகுத்தஞான்று எழுதுமுறை கண்டறிந்தார். இது  என்னும் பண்டிதர் விளக்குமாற்றானும் நன்கு அறியப்படும். – தமிழ்க் கடல் மறைமலையடிகள்  

ஆரியர்களுக்கு இலக்கிய இலக்கணம் தெரியாது!

ஆரியர்களுக்கு இலக்கிய இலக்கணம் தெரியாது!   ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள். ஆரியர்களுக்கு முதன்முதலில் இலக்கியம், இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது. (எழுத்துக்களை வகைப்படுத்தியவர்கள் தமிழர்களே.)  மறைமலை அடிகள் : தமிழின் தனிச்சிறப்பு  

தமிழரே உயர்ந்த பண்பாட்டு நிலையினர்

தமிழரே உயர்ந்த பண்பாட்டு நிலையினர்    இந்தியாவில் இன்றைக்குப் பேசப்படும் மொழிகளில் தமிழ் மிக முற்பட்ட காலத்திலேயே உயர்ந்த வளர்ச்சி நிலையை அடைந்திருக்கிறது. இது சமற்கிருதத்தின் தாக்கமின்றி வளர்ந்ததுடன் இதனைப் பேசுவோர் நீண்ட காலத்திற்கு முன்னரே உயர்ந்த பண்பாட்டு நிலையை அடைந்து இருந்தனர். – பி.டி.சீனிவாச ஐயங்கார் : (The Past in the Present)

ஆரியர் இயல்பு – பேராசிரியர் மு.வ

ஆரியர் இயல்பு – பேராசிரியர் மு.வ தம்மை உயர்வாகக் கருதிக் கொண்டு பிறரைத் தாழ்த்தும் மனப்பான்மை எல்லோரிடமும் உள்ளது. எனினும், ஆரியர்க்கு அது மிகுதி எனலாம். அவர்கள் சென்று தங்கிய இடங்களில் எல்லாம் அங்குள்ளவர்களோடு கலந்து பழகி அவர்களின் நாகரிகப் பழக்க வழக்கங்களையும் கலைகள் முதலியவற்றையும் தம்முடையனவாக ஆக்கிக் கொண்டு உயர்வெல்லாம் தமக்கே என்றும் அங்கு வாழ்வோர் அனைவரும் காட்டு மிராண்டிகள் என்றும் தூற்றும் இயல்பினராக விளங்கினர். ஆரிய திராவிட நாகரிகம்.   இன்று ஆரியம் என்று போற்றப்படுபவை எல்லாம் உண்மையாகவே ஆரியர்க்கு உரியவை…

“பணிந்து போகத் தமிழன் என்ன நனைந்த கோழியா?” – (இ)லீ குவான் (இ)யூ

“பணிந்து போகத் தமிழன் என்ன நனைந்த கோழியா?” – சிங்கப்பூர் முன்னாள் தலைமையர் (இ)லீ குவான் (இ)யூ உணர்ச்சிப்பெருக்கம்!     “சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடி ஒழிந்து விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத்தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் சிங்களவர்கள், தமிழர்களை நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள்” எனக் குறிப்பிட்டுள்ள சிங்கப்பூரின் முன்னாள் தலைமையர் (இ)லீ குவான் (இ)யூ, “தமிழர்களுக்குத்தனி நாடே தீர்வாகும்!” எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் அதிபர் மகிந்த ராஜபக்ஷவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்….