இலக்குவனாரின் ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’யின் சிறப்புகள்

  தொல்காப்பிய ஆராய்ச்சி என்ற இந்நூலில் பரவிக்கிடக்கும் இலக்குவனாரின் கருத்துகளில் சில: ஆரியம்தான் தமிழை நோக்கித் தன் எழுத்தமைப்பை ஆக்கிக் கொண்டிருக்கவேண்டுமேயன்றி, தமிழ், ஆரியத்தை நோக்கி அமைத்துக் கொண்டது அன்று. (இலக்குவனார் 1971:44). இந்திய மொழிகளின் வரிவடிவ எழுத்துகளின் தாய் தமிழ் நெடுங்கணக்கின் வரிவடிவமே எனில் மிகையாகாது. (இலக்குவனார் 1971:45). மேலைநாட்டு ஆராய்ச்சியாளர்கள் எழுத்துகளின் பிறப்புபற்றிக் கூறும் கருத்துகள் தொல்காப்பியர் கூறும் கருத்துக்களோடு ஒற்றுமையுடையனவாக இருக்கின்றன. (இலக்குவனார் 1971:65). தொல்காப்பியப் பொருட்படலம் இலக்கியம் விளக்கும் இலக்கணமாகும்(science of Literature) என்பதை அறிந்து போற்றிப் பயில்வோமாக….

வல்லினம் மிகுதலும் மிகாமையும் தமிழுக்குரிய சிறப்பே!

வல்லினம் மிகுதலும் மிகாமையும் தமிழுக்குரிய சிறப்பே!   ஒரு சொல் அதன் பொருளை வேறுபடுத்திக் காட்ட உதவுவன வேற்றுமை உருபுகளாகும். வேற்றுமை உருபுகளை நேரடியாகப் பயன்படுத்தும் பொழுதும் மறைமுகமாகப் பயன்படுத்தும் பொழுதும் வல்லின எழுத்துகள் மிகுந்து வருவது தமிழின் சிறப்பாகும். அவ்வாறு மிகுந்து வராவிடில் பொருளே மாறுபடும். எனினும் சிலர், அவ்வாறு எழுதத் தேவையில்லை; இயல்பாக எழுதலாம் எனத் தவறாகக் கூறி வருகின்றனர். “இலக்கணம் இல்லாச் செய்தி கரையற்ற ஆறு ஆகும்” என அறிஞர்கள் கூறுவதிலிருந்தே இலக்கணத்தின் சிறப்பை உணரலாம். இலக்கணத்தின் ஒரு கூறுதான்…

தன்மொழியைப் புறக்கணிப்பவன் ஆயிரம் மடங்கு குற்றம் புரிந்தவன் – பாரதியார்

தேசத்தின் உயிர், மொழியே!   ஒரு தேசத்திற்கு உயிர் அத்தேசத்தின் மொழியாகும். சுய பாசையைக் கைவிடுவோர் மூடத்தனமாகவோ பைத்தியம் பிடித்தோ தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். தற்கொலை செய்து கொள்ள யத்தனித்தால் அரசாங்கச் சட்டத்தின் படி குற்றமாகுமானால் தன்னையும், தன்னுடைய சன சமூகத்தையும் கொல்ல ஆரம்பித்து, தேச மொழி உதாசீனம் செய்பவன் ஆயிரம் மடங்கு அதிக குற்றங்களைப் புரிபவனாகிறான். சுப்பிரமணிய பாரதியார்

தமிழில் தேசியக் கல்வி – பாரதியார்

தமிழில் தேசியக் கல்வி   தமிழ்நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவகாரங்களும் தமிழ் மொழியில் நடத்த வேண்டுமென்பது பொருள்.   ஆரம்ப விளம்பரம் தமிழில் பிரசுரம் செய்யப்பட வேண்டும் பாடசாலைகள் தாபிக்கப்பட்டால் அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமின்றி பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலேயே பெயர் சொல்ல வேண்டும்.  ‘ஃச்லேட்டு’, ‘பென்சில்’ என்று சொல்லக் கூடாது. பாரதியார் : ஞானபாநு, செப்டம்பர் 1915

தமிழை மாய்த்திட வந்தனர் வடமொழிக் குரியவர்! – பாவேந்தர் பாரதிதாசன்

இரகசியச்சொல் ஏடா தூதா இங்குவா தனியே என்உதடு நின்செவி இரண்டையும் ஒன்றுசேர் இரகசி யச்சொல் இயம்பு கின்றேன் உற்றுக் கவனி; உயர்ந்த செய்தி இறந்தது வடமொழி என்று தமிழர் இயம்பி வந்த துண்டா இல்லையா? இறந்தது மெய்தான் என்னும் தமிழர் இப்படிச் சொன்ன துண்டா? ஆமாம்! மெய்யை எதற்கு விளம்பினார் தமிழர்? வடமொழி இறந்த தென்றதால் தமிழை மாய்த்திட வந்தனர் வடமொழிக் குரியவர்! வீணை ஒலிக்கெதிர் வேண்டா அழுகைபோல் கருங்குயில் இசைக்கெதிர் கழுதைகத் தல்போல் நங்கையர் மொழிக்கெதிர் நரியின் ஊளைபோல் இன் தமிழ்ப் பயிற்சிக்…

வட இந்திய மொழிகளின் தொடர் அமைப்பு, தமிழோடுதான் ஒத்துள்ளது! – மு.வ.

வட இந்திய மொழிகளின் தொடர் அமைப்பு, சமற்கிருதத்தோடு அல்லாமல் தமிழோடுதான் ஒத்துள்ளது! இந்திய நாடு முழுதும் மிகப் பழங்காலத்தில் ஒரு மொழி பேசப்பட்டு வந்தது. அதைப் பழந்திராவிட மொழி என்று (Proto -Dravidian) என்று கூறுவர். வட இந்திய மொழிகள் பலவற்றிற்கும் தென்னிந்திய திராவிட மொழிகளுக்கும் வாக்கிய அமைப்பு முறையில் (Syntax) இன்று வரையில் ஒற்றுமை இருந்து வருவதற்குக் காரணம், மிகப் பழங்காலத்தில் இருந்து வந்த ஒருமைப்பாடே ஆகும். வட இந்தியாவில் பிராகிருதம், பாலி முதலிய மொழிகள் செல்வாக்குப் பெற்ற பிறகு, பழந்திராவிட மொழி…

நந்தமிழர் நாடெல்லாம் தமிழே பேசும்! – பாவலர் கருமலைத் தமிழாழன்

விடியலென நீயெ ழுந்தால் ! அஞ்சியஞ்சி வாழ்கின்ற அவலம் நீங்கும் அதிகார ஆர்ப்பாட்ட அல்லல் நீங்கும் விஞ்சிநிற்கும் கையூட்டின் நஞ்சு நீங்கும் விளைந்திருக்கும் ஊழல்முட் புதர்கள் நீங்கும் கெஞ்சிநின்று கால்வீழும் கொடுமை நீங்கும் கேடுகளே நிறைந்திருக்கும் ஆட்சி நீங்கும் கொஞ்சுமெழில் இன்பமுடன் நலங்கள் வாழ்வில் கொலுவேறும் விடியலென நீயெ ழுந்தால் ! செந்தமிழே கோலோச்சும் ! துறைகள் தோறும் செழிக்கின்ற ஆட்சியாகும் ! செவ்வாய் செல்லும் சிந்தனையின் அறிவியலும் தமிழே யாகும் சிரிக்கின்ற மழலைவாய் அம்மா வாகும் சந்தமிகு தமிழ்வழியில் கல்வி யாகும் சதிராடும்…

தமிழ் – உயர்தனிச்செம்மொழி ! : மௌலவி ஏ உமர் சஃபர் மன்பயீ

உலகினரை வியக்க வைக்கும் செம்மொழியே !   எத்தனையோ வழிகளெல்லாம் உலவிவந்தும் – என்னை இசுலாத்தின் வழியினிலே வைத்தவனே ! எத்தனையோ மொழிகளெல்லாம் உலகிருந்தும் – என்னை எழிலான தமிழ்மொழியில் வளர்த்தவனே ! எத்தனையோ அன்னையர்கள் பிறந்திருந்தும் – எனக்கு இனிதான தமிழ்தாயைத் தந்தவனே ! அத்தனையும் உன்கருணை ! உன் புகழே !! – நான் அதற்காக காலமெல்லாம் புகழுகின்றேன் ! அலஃகம்து லில்லாஃக் …. சொல்வதற்கு இயல்பான செந்தமிழே ! – ஏழு சுரங்களுக்குள் இசையான பைந்தமிழே ! நல்ல நெறி…

சீறிப் பாய்வேன் தமிழாலே! – இராம.குருநாதன்

கவிதைக்கு அழிவில்லை காற்றும் மழையும் அழித்தாலும்- என் கவிதைக் கனலுக் கழிவில்லை ஊற்றாய்ப் பெருகும் எண்ணத்தை- இனி உறைக்குள் போட மனமில்லை மண்ணும் மலையும் சரிந்தாலும்- என் மானிடப் பார்வைக் கழிவில்லை விண்ணும் கடலும் திரண்டாலும்- என்னுள் விரியும் கவிதைக் கழிவில்லை வெட்டிப் பொழுது போக்குவதை- நான் வீணில் என்றும் கழித்ததில்லை கொட்டிக் கிடக்கும் எனதுணர்ச்சி- களத்தில் கூர்மை வாளாய்க் களமிறங்கும் சொல்லும் பொருளும் உள்ளவரை- என்னுள் தொடரும் சமூகச் சிந்தனைகள் வெல்லும் என்கவி எனச்சொல்லி வித்தகம் பேச அறியேன்நான் அல்லும் பகலும் கண்டவற்றை-என்…

எல்லாச் சொல்லும் தமிழ் குறித்தனவே! – இலக்குவனார் திருவள்ளுவன்

       உணவுப் பொருளாயினும் நாம் பயன்படுத்தும் பிற பொருளாயினும் நாம் தூய்மையையே விரும்புவோம். கலப்படம் கேடு தரும் என்பதை நாம் நன்கு உணர்ந்துள்ளோம். ஆனால் தாய்மொழியாகிய தமிழ் மொழியிலும் கலப்படம் கூடா என்பதை நாம் உணருவதில்லை. கலப்படச் சொற்களும் கலப்பட நடையும் நம்மை வாழ்விக்கும் எனத் தவறாக எண்ணி நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு காலத்தில் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பேசப்பட்டு வந்த தமிழ்மொழி இத்தகைய கலப்பினால்தான் தன் பரப்பினை இழந்து துன்புறுகின்றது என்பதையும் புரிந்து கொள்வதில்லை. அதே நேரம் தூய…

தமிழைப் பேச்சுமொழியாக நிலைக்கச் செய்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழைப் பேச்சுமொழியாக நிலைக்கச் செய்க!   தமிழ், தமிழர்களுக்கான கல்விமொழியாகவோ, ஆட்சிமொழியாகவோ, அலுவலக மொழியாகவோ, வழிபாட்டு மொழியாகவோ, வணிக மொழியாகவோ, கலை மொழியாகவோ இல்லை என்பது இக்காலத்தில் வாழும் நம் அனைவருக்கும் இழிவு சேர்க்கும் நிலையாகும். இவை எல்லாவற்றிலும் மோசமான துயர நிலை என்பது தமிழ் தமிழர்களின் பேச்சுமொழி என்ற நிலையையும் இழந்துவருவதுதான்.   தமிழ், தமிழ்நாட்டின் மொழியாக நிலைப்பதற்குக் குறைந்தது மக்களின் பேச்சுமொழியாகவாவது இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் தமிழில் பேசுவோர் சிறுபான்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ‘‘தமிழை வீட்டில் பேசுகிறோமே! எதற்குத் தமிழ்மொழிக்…

தொப்புள்கொடி உறவுதனை விடுதல் நன்றா? – குருநாதன்

அழிந்துவரும் மொழியா? ‘அழிந்துவரும் மொழிகளிலே தமிழும் ஒன்றாம்’ ஐ.நா. வின் இக்கூற்றைச் செவிம டுப்பீர்; கழிந்துவரும் வாழ்க்கையிலே தமிழைக் காக்க கட்டாயம் போர்த்தொடுப்பீர்; உலகில் மற்ற மொழியறிவு பெறுவதற்குத் தடையா சொன்னோம் மூத்தமொழி தாய்மொழியைப் போற்றச் செய்வோம்; விழிப்புணர்ச்சி இல்லையெனில் கெடுப்ப தற்கு விரைவாக வந்திடுமே வீணர்க் கூட்டம்! ஐந்திணையின் அழகுதனை எடுத்து ரைத்த அழியாத இலக்கியத்தை இழக்கப் போமோ? செந்தமிழைப் பேரறிஞர் பலரும் காத்த செழிப்பான வரலாறு அழிதல் நன்றா? பைந்தமிழில் பேசுதற்கு நாணு கின்றோம்; படித்தறிந்து போற்றுதற்குத் தமிழைப் போல எந்தமொழி…