தோழர் தியாகு எழுதுகிறார் 212 : “ஐம்பது பவுனும் ஐந்நூறு தலைக்குத்தும்”

(தோழர் தியாகு எழுதுகிறார் 211 : ஒட்டிய மண்ணும் ஒட்டாத மணலும் – தொடர்ச்சி) “ஐம்பது பவுனும் ஐந்நூறு தலைக்குத்தும்” இடையன்குடியின் பழங்குடிகளான நாடார்கள், அவர்களின் பனையேறும் தொழில், அவர்கள் வாழ்ந்த குடிசைகள்… இவை எல்லாவற்றையும் பற்றி இரா.பி. சேதுப்பிள்ளை எழுதுவதைப் படித்த பின்… இன்றைக்குள்ள இடையன்குடியைப் பார்க்கும் போது வியப்பாக இருந்தது. “இத்தகைய செம்மணற்பரப்பிற் சிறந்தோங்கி வளரும் பனைமரங்கள் கண்களைக் கவர்ந்து குளிர்விக்கும் செழுமை வாய்ந்தனவாம். பிளந்த கள்ளியும் விளிந்த முள்ளியும் நிறைந்த தேரியினில் கற்பகத்தருவெனத் தழைத்துச் செழித்து வளரும் பனைகளே அந்நிலத்தில்…

தோழர் தியாகு எழுதுகிறார் 211 : ஒட்டிய மண்ணும் ஒட்டாத மணலும்

(தோழர் தியாகு எழுதுகிறார் 210 : நடந்தார் வாழி காலுடுவெல்! – தொடர்ச்சி) ஒட்டிய மண்ணும் ஒட்டாத மணலும் இனிய அன்பர்களே!தேரிக்காடு என்று முதன்முதலாக எப்போது கேள்விப்பட்டேன், தெரியுமா? கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் கரும்பொன்ம ஈரயிரகை (Titanium dioxide) ஆக்கம் செய்யும் தொழில் அமைக்க (இ)டாடா குழுமம் மாநில அரசோடு புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொண்டிருப்பதாகச் செய்தி வந்தது. தேரிக்காட்டில் கடலோரத்திலிருந்து தொடங்கி பலநூறு சதுரக்கல் பரவிக் கிடக்கும் தாது மணலைத் தோண்டியள்ளி வேதிச் செயல்வழிகளின் ஊடாகப்…

தோழர் தியாகு எழுதுகிறார் 210 : நடந்தார் வாழி காலுடுவெல்!

(தோழர்தியாகு எழுதுகிறார் 209 : “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” – தொடர்ச்சி) நடந்தார் வாழி காலுடுவெல்! இரா.பி. சேதுப்பிள்ளை எழுதிச் செல்கிறார்:  “இவ்வாறு கிறித்து சமயம் பரவி வரும் பொழுது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பருவந்தவறிப் பெய்த பெருமழையால் பொருனையாறு கரைபுரண்டு எழுந்து பல சிற்றூர்களைப் பாழாக்கியது. ஆற்றுவெள்ளம் அடங்கிய பின்பு கொள்ளைக் காய்ச்சலென்னும் கொடிய நோய் விரைந்து பரவியது. வெள்ளத்தால் வீடிழந்து உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி வருந்திய மக்கள் காய்ச்சலுக்கிரையாகிக் கழிந்தார்கள். இந்நோய் கிருத்தவ நாடார்கள் வசித்த ஊர்களில் நூற்றுக்கணக்கான மாந்தரைச் சூறையாடினமையால்…

தோழர்தியாகு எழுதுகிறார் 209 : “செந்தமிழுக்குச்  சேதுப்பிள்ளை”

(தோழர்தியாகு எழுதுகிறார் 208 : இடையன்குடி – காலுடுவெல்லுக்கு முன் – தொடர்ச்சி) “செந்தமிழுக்குச்  சேதுப்பிள்ளை” இனிய அன்பர்களே! இரா.பி. சேதுப்பிள்ளை பற்றி முதலில் எப்போது படித்தேன்?             அறிஞர் அண்ணாவின் சொல்வன்மைக்குச் சான்றாக ஒரு நிகழ்வைச் சொல்வதுண்டு: ஒரு முறை அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பொது மேடையில் இரா.பி. சேதுப்பிள்ளை அண்ணாவிடம், “எதிர்பாராமல் அளிக்கும் தலைப்பில் உடனே பேசுவீர்களா?” என்று கேட்டார்.. “பேசுவேன்” என்று அண்ணா கூறினார். உடனே சேதுப்பிள்ளை அதே மேடையில் “ஆற்றங்கரையினிலே” என்னும் ஒரு தலைப்பை வழங்கினார். ‘அண்ணா எப்படிப் பேசுவாரோ?’ என…

தோழர்தியாகு எழுதுகிறார் 208 : இடையன்குடி – காலுடுவெல்லுக்கு முன்

(தோழர்தியாகு எழுதுகிறார் 207 : தமிழ்மணக்கும் காலுடுவெல் இல்லம் – தொடர்ச்சி) இடையன்குடி – காலுடுவெல்லுக்கு முன் இராபருட்டு காலுடுவெல் குறித்தும் அவரது மொழியியல் ஆய்வு, அதன் முடிவுகள் குறித்தும் அண்மைக் காலத்தில்தான் நிறைய படித்தேன். அரசியல் வகுப்புக்காகப் படித்தமையால் சற்று ஆழ்ந்தே படித்தேன் எனலாம். மொழிநூல் அறிஞர் காலுடுவெல் ‘திராவிடம்’ என்ற சொல்லை ஆண்டார் என்ற ஒரே காரணத்துக்காக  உடனடி அரசியல் தேவைகளுக்காக அவரைக் கொச்சைப்படுத்தும் போக்குகள் தலைதூக்கியிருக்கும் இத்தருணத்தில் காலுடுவெல்லை முறையாக அறிந்து கொள்வதும் அறியச் செய்வதும் தேவை எனக் கருதுகிறேன்….

தோழர்தியாகு எழுதுகிறார் 207 : தமிழ்மணக்கும்காலுடுவெல் இல்லம்

(தோழர்தியாகுஎழுதுகிறார் 206 : வேண்டும்சித்திரவதைத்தடுப்புச்சட்டம் 2/2-தொடர்ச்சி) தமிழ் மணக்கும் காலுடுவெல் இல்லம்  அயல்நாட்டுப் பயணங்களில் வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பார்க்கப் பெரிதும் விருப்பப்படுவேன். உள்நாட்டிலும் பார்க்க வேண்டியவை பலவும் இருப்பதைக் கால்ந்தாழ்ந்துதான் உணர்ந்தேன். ஆனால் அயல்நாடோ உள்நாடோ அதற்காக யாரையும் தொல்லைப்படுத்தக் கூடாது என்று கவனமாக இருப்பேன். நமக்குள்ள ஆர்வத்தில் கொஞ்சமாவது அவர்களுக்கும் இருக்க வேண்டும். இன்றேல் ஒன்றும் செய்ய முடியாது. அமெரிக்கப் பயணத்தில் நான் சென்று பார்த்தவைபற்றி ஒரு நூலே எழுதலாம், அவ்வளவு செய்திகள் உண்டு. சிக்காகோவில் மே நாள் நினைவுச் சின்னத்தைத்…

தோழர் தியாகு எழுதுகிறார் 206 : வேண்டும் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் 2/2

(தோழர் தியாகு எழுதுகிறார் 205 : வேண்டும் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் 1/2 – தொடர்ச்சி) வேண்டும் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் 2/2 இரண்டு, காவல்துறை , ஆய்தப் படைகளைச் சேர்ந்தவர்கள் குற்றவாளிகள் என்று உறுதியாகத் தெரிந்தாலும் ஆட்சித் தலைமையில் இருப்பவர்கள் அந்தக் குற்றவாளிகளைக் காப்பாற்றவே முற்படுகின்றார்கள். காவல்துறையின் மனவுறுதியை (morale of the police) பாதுகாப்பது என்று காரணமும் சொல்லப்படுகிறது.  மூன்று, புலனாய்வின் தேவை அல்லது உடனுக்குடன் நீதி செய்தல் என்ற பெயரில் காவல்துறையின் சித்திரவதையை நியாயப்படுத்தும் மனநிலை பொதுச் சமூகத்தில் காணப்படுகிறது….

தோழர் தியாகு எழுதுகிறார் 205 : வேண்டும் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் 1/2

(தோழர் தியாகு எழுதுகிறார் 204 : கொல்லன் தெருவில் ஊசி விற்றேன்! – தொடர்ச்சி) வேண்டும் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் 1/2 நேற்று 26/06 காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் சித்திரவதை எதிர்ப்புப் பரப்புரையைப் பசுமைவழிச் சாலையில் இடம் பெற்றுள்ள மாநில மனிதவுரிமை ஆணையத்திலிருந்தே தொடங்கியது மிகப் பொருத்தமாக அமைந்தது. மாநில மனிதவுரிமை ஆணையத்தின் தலைவர் நீதியர் எசு. பாசுகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராசு, மாநில மனிதவுரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், நீதியர் இராச இளங்கோ, அசீதா, பிரிட்டோ,…

தோழர் தியாகு எழுதுகிறார் 204 : கொல்லன் தெருவில் ஊசி விற்றேன்!

(தோழர் தியாகு எழுதுகிறார் 203 : நெல்லையில் ஊடகச் சந்திப்பு – தொடர்ச்சி) கொல்லன் தெருவில் ஊசி விற்றேன்! நெல்லை வரும் போதெல்லாம் சுடலைமாடன் தெருவில் தோழர் தி.க.சி.யைப் பார்த்துப் பேசாமல் திரும்ப மாட்டேன். என்னோடு உரையாடும் அந்தக் குறுகிய நேரத்தில் தன் மகிழ்வுகளையும் மனக்குறைகளையும் கொட்டித் தீர்த்து விடுவார். அவரது மனநிலையை அகவை முதிர்ந்த தந்தை தன் மகன் போன்ற ஒருவரைப் பார்க்கிற உணர்வு என்று சொல்ல முடியாது. நான் நெல்லை வரும் செய்தி கிடைத்ததிலிருந்தே வழி மேல் விழி வைத்து என்னை…

தோழர் தியாகு எழுதுகிறார் 203 : நெல்லையில் ஊடகச் சந்திப்பு

(தோழர் தியாகு எழுதுகிறார் 202 : எப்படிச் செத்தார் புளியங்குடி தங்கசாமி? – தொடர்ச்சி) நெல்லையில் ஊடகச் சந்திப்பு இனிய அன்பர்களே! சாத்தான்குளத்துக்காகத்தான் நெல்லைப் பயணம் என்றாலும், பென்னிக்குசு-செயராசு நினைவேந்தல், சாத்தான்குளக் காவல்நிலையப் பார்வை ஆகியவற்றை முடித்துக் கொண்டு அதே நாள் மாலை தங்கசாமியின் காவல் சாவுக்கு (புளியங்குடி காவல்நிலையமா? பாளையங்கோட்டை நடுவண் சிறையா?) நீதிகோரிப் போராடப் புளியங்குடியும் செல்ல வேண்டியதாயிற்று. மறுநாள் (23/06/2023) மதியம் 11 மணியளவில் நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடக சந்திப்புக்கு அன்பர் பீட்டர் ஏற்பாடு செய்திருந்தார். கடந்த சில…

தோழர் தியாகு எழுதுகிறார் 202 : எப்படிச் செத்தார் புளியங்குடி தங்கசாமி?

(தோழர் தியாகு எழுதுகிறார் 201 : சாத்தான்குளம் பென்னிக்குசு செயராசு – தொடர்ச்சி) எப்படிச் செத்தார் புளியங்குடி தங்கசாமி? தென்காசி மாவட்டம் புளியங்குடி நடுக்கருப்பழகுத் தெருவைச் சேர்ந்த தங்கசாமி (த/பெ மாடசாமி) சென்ற 11.06.2023 அன்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றவர் அன்று இரவு வீடு திரும்பவில்லை. அவர் வெளியூர் வேலைக்குச் செல்வதும், அங்கேயே தங்கி விடுவதும் வழக்கமே என்பதால் குடும்பத்தினர் – அம்மாவும், தம்பி ஈஸ்வரனும் – நண்பர்களும் பெரிதாக அலட்டிக் கொண்டார்களில்லை. தங்கசாமி மறு நாளும் வரவில்லை, அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பும்…

தோழர் தியாகு எழுதுகிறார் 201 : சாத்தான்குளம் பென்னிக்குசு செயராசு

(தோழர் தியாகு எழுதுகிறார் 200 : மோதி வாயில் கொழுக்கட்டை!-தொடர்ச்சி) சாத்தான்குளம் பென்னிக்குசு செயராசு 22/06/2023 அன்று சாத்தான்குளம் பென்னிக்குசு செயராசு மூன்றாம் ஆண்டு நினைவுநாள். ஏற்கெனவே உங்களுக்குச் சொன்ன படி, பென்னிக்குசு செயராசு குடும்பத்தினர் நான் அந்த நாளில் சாத்தான்குளத்தில் தங்களோடு இருக்க வேண்டும் என்று விரும்புவதாகச் சில நாள் முன்பு என்றி திபேன் வாயிலாக அறிந்தேன். செயராசின் மருமகன் அகட்டினும் இதை உறுதி செய்த போது, எப்படியும் போய் விடுவது என்று முடிவெடுத்தேன். அதே ஊரைச் சேர்ந்த நண்பர் இசக்கிமுத்து அழைத்து…