நீலகிரி மாவட்டத்தில் பெருங்கற்காலச் சிற்பங்கள்!

  உதகமண்டலத்தில் கிடைத்த பெருங்கற்காலச் சுடுமண் சிற்பங்கள்   செய்தியாளர்கள் என்பவர்கள் தம்முன் நடப்பதைப் பதிவு செய்பவர்கள் என்றுமட்டும்தான் பலருக்கும் தெரியும் ஆனால் சில செய்தியாளர்கள் அதையும்தாண்டித் தங்கள் மண்ணின் வளமையையும் மக்களின் பெருமையையும் உலகிற்குப் பறைசாற்றுபவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களில் உதகமண்டலத்தில் உள்ள செய்தியாளர் பிரதீபனும் ஒளிப்படக்கலைஞர் இரகுவும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.   நீலகிரி மாவட்டதின் பல்வேறு சிறப்புகளைத் தேடித்தேடிக் கண்டுபிடித்துச்,செய்தியாகவும் படமாகவும் வெளியிட்டு மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்து வருகிறார்கள்   அந்த வகையில் தற்போதைய அவர்களது பதிவுதான் பெருங்கற்காலச் சுடுமண் சிற்பங்கள். இதுகுறித்து, தொட்டபாலி…

திருப்புவனத்தில் உரோமானிய எழுத்துகளுடன் பானைகள் கண்டெடுப்பு

உரோமானிய எழுத்துகளுடன் பானைகள் தொல்பொருள் ஆய்வில் கண்டெடுப்பு  கீழடிப் பள்ளிச்சந்தையில் ஆய்வு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடிப் பள்ளிச்சந்தைத் திடலில் மத்தியத் தொல்பொருள் துறையினர் நீண்ட அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். மத்தியத் தொல்பொருள் துறைக் கண்காணிப்பாளர் (தமிழகம், கேரளா, ஆந்திரா, கருநாடகம்) தலைமையில் சென்னை பல்கலைகழக ஆராய்ச்சிப்பிரிவு மாணவர்கள் உட்பட 30 பேர் கொண்ட குழு  இரு மாதங்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பண்டைய வணிக நகரமான ‘மதுரை நகரம்’ முற்றிலும் அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்த முழுமையான ஆய்வு இதுவரை நடத்தப்படவில்லை….

திசை காட்டும் திருக்குறள் – பாலகிருட்டிணன் இ.ஆ.ப.

என்பார்வை: திசை காட்டும் திருக்குறள் திருக்குறள் பண்டைய இலக்கியம். ஆனால் எப்போது படித்தாலும் இளமையாய் இருக்கிறது. கி.மு., கி.பி., என்பது எல்லாம் வரலாற்றிலிருந்து வயது சொல்லும் முயற்சியில் குத்தப்படும் முத்திரைகள் தான். ஒருவகையில் 23 ஆம் புலிக்கேசிகளின், வாடகைக் புலவர்களின் வாய்க்கு வந்தது கூட வரலாறு தான். உண்மையில் வரலாற்றுக்குப் பிந்தைய என்ற வரையறைகளைக் கடந்து இயங்குகிறது மனித வாழ்வியலின் பயணமும் பட்டறிவும். படிநிலை வளர்ச்சி திருக்குறள் ஒரு படைப்பிலக்கியமாகவோ பக்தி இலக்கியமாகவோ கருத்தை திணிக்கும் கசாய இலக்கியமாகவோ இல்லாமல் ஒரு பட்டறிவு இலக்கியமாக…

மொழிக்கல்வியும் மொழிக் கலப்பும் – ஏ.ஆதித்தன்

  சிறந்த குடிமக்களை உருவாக்குவதே கல்வியின் அடிப்படை நோக்கம். தன்னம்பிக்கைக்கும், புத்துருவாக்கத்திற்கும் வழிவகை செய்யாத கல்வி, வெற்றிடக் கல்வியாகவே கருதப்படுகிறது. ஆனால், இக்காலத்தில் தனிமனிதப் பொருளாதார முன்னேற்றத்திற்குத் துணைபுரியும் கருவிதான் கல்வி என நம்பப்படுகிறது. மாணவர்களை, வேலைச்சந்தைக்கு பயிற்சி அளிப்பதே கல்வி பயிற்றுவித்தல் எனவும், இதற்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களே கல்வி நிறுவனங்கள் எனவும் நம்பப்படுகிறது. பல்கலைப் பட்டங்கள், அறிவின் தேடலைவிட, அகந்தையின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளன. பட்டங்களை பெருமையாகக் கொண்டாடும் நாட்டில், கல்வியின் தரம் கசப்பாகக் கருதப்படுகிறது. மொழிதான் மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்திச், சமூக…

வாணாள் குறைவது அரசின் பனைமரத்திற்கு அழகா! -குமரி அனந்தன்

வாணாள் குறைவது அரசின் பனைமரத்திற்கு அழகா!   தொல்காப்பியத்தில் ஒரு பொருளைப் பெரிதாகச் சொல்வதற்குப் ‘பனையளவு’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். சிறிய பொருளைத் தினையளவு என்றும் பெரிய பொருளைப் பனையளவு என்றும் ஒப்பிட்டனர்.  திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் முப்பாலிலும் பனை வருகிறது. அறத்துப்பாலில் 104 ஆவது, பொருட்பாலில் 433 ஆவது, இன்பத்துப்பாலில் 1282ஆவது குறள்களில் பனை என்று வருகிறது. ‘கள் உண்ணாமை’ என்றொரு அதிகாரமே எழுதியுள்ளார். திருக்குறள் எழுதப்பட்டதும் பனைஓலையில்தான். மூவேந்தர்களில் சேரமன்னனின் நாணயத்தில் பனைமரம் பொறிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் அரசு மரம் பனைமரம். தொல்காப்பியத்தில்…

உழவுக்கு வந்தனம் செய்வோம் – கெ.செல்லத்தாய்

உழவுக்கு வந்தனம் செய்வோம்! உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் மனிதனுக்கு மிகவும் தேவை. இவை அனைத்தும் விவசாயத்தின் அடிப்படையில் பெற வேண்டும். உணவு இல்லையென்றால் மனிதனால் உயிர்வாழ முடியாது. உழவன் ‘சேற்றில் கால்வைத்தால்தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும்’.’தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு’ என உழவின் மாண்பைத் திருவள்ளுவர் கூறுகிறார். இன்றைக்கு உழவின் நிலை என்ன? உழவு அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணமும் மனிதர்களாகிய நாம்தானே. மனிதனின் உயிர்மூச்சாக இருந்தது உழவு. அரசுவேலை வேண்டா…

சோகத்தில் மூழ்கிய மீனவஊர்கள்: ‘500 உயிர்களைக் கொடுப்போம்’ எனச் சூளுரை

மீனவர் ஐவர் தூக்கு – மக்கள் கிளர்ச்சி     தங்கச்சிமடம் : இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், பாம்பன் மீனவர் ஐவருக்கு இலங்கை அரசு விதித்த தூக்குத் தண்டனையால் மீனவஊர்கள் சோகமயமாகி உள்ளன. பொய் வழக்கில் சிக்கியுள்ள ஐவரின் உயிரைப் பறிக்க இலங்கை அரசு துடிப்பதாகக் கூறி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். ‘500 உயிர்களை கொடுத்தாவது 5 பேரை மீட்போம்’ எனச் சூளுரைத்தனர்.   கடந்த 2011 இல் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தங்கச்சிமடம் மீனவர்கள் எமர்சன், அகஃச்டசு, வில்சன், பிரசாத்து,…

கரை சேருமா கச்சத்தீவு? – க. இராமையா

  தமிழக அரசியலில், இன்று கொதித்துக் கொண்டிருக்கும் பெரிய சிக்கல், கச்சத்தீவு பற்றியது. ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களின் உயிர்களைக் காவு வாங்கியும், பசியடங்காக் காலனின் கொடுமைக்குக் காரணமான கச்சத்தீவின் சிக்கலுக்கு, அடிப்படை என்ன? தங்கத் தட்டில் வைத்து, கச்சத்தீவைத் தாரை வார்த்தது எப்படி சாத்தியமாயிற்று?   தமிழகத்திற்கும், இலங்கைக்கும் நடுவே, தமிழகத்தின் தென்பகுதியில், இராமேசுவரத்திற்கு அருகில், ஒரு பொட்டு போல, கச்சத்தீவு உள்ளது. இரண்டுக்கும் இடையே உள்ள தொலைவு, 16 கி.மீ., தீவின் பரப்பளவு, 285 ஏக்கர். 20 ஆம் நூற்றாண்டில்,இராமநாதபுரம் சமத்தானத்தைச் சேர்ந்த…

ஊடகர் மீது கை வைக்காதீர்! ஊடகங்கள் மீது கண் வையுங்கள்!

  தினமலர் நாளிதழ்ச் செய்தியாளர் அருள்செல்வனைத் தாக்கியது அருளற்ற செயல்!   கிளர்ச்சிகள் என்பன மக்கள் குறைகளைத் தெரிவிக்கும் வாயில்கள் எனவும் அரசு அவற்றை அடக்கித் துன்புறுத்தாமல் மென்மையாகக் கையாண்டு குறைகளைப் போக்க வேண்டும் என்றும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் குறிப்பிடுவார். ஆனால், கிளர்ச்சிகள் என்றாலே அரசை அழிக்கும் ஆயுதமாகவும் கிளர்ச்சியாளர்கள் என்றாலே நாட்டின் பகைவர்கள் என்றும் கருதும் போக்கு எல்லா நாட்டிலும் உள்ளது வருந்தத்தக்கதே! இதனால், மக்களின் உற்ற தோழனாக இருக்க வேண்டிய காவல்துறை ஆளும்கட்சியின் அடிவருடிபோல் நடந்துகொண்டு மக்களுக்குத் தீங்கிழைத்து, அரசிற்கும்…

தொண்டிக் கடற்கரையில் தோண்டத் தோண்ட .. 500க்கும் மேற்பட்ட தெய்வப் படிமங்கள்

திருவாடானை: தொண்டி, நம்புதாளை கடற்கரையில், 500க்கும் மேற்பட்ட கடவுள் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அவை, பூப்பதனிடுதல் முறையில், முகலாயர்களிடம் இருந்து பாதுகாக்கப்பட்டவையா எனக் காவல்துறையினர்  ஆராய்ந்து வருகின்றனர்.இராமநாதபுரம், தொண்டி கடற்கரையில், 21.01.14 நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, இப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றவர்கள், அங்கே, சிறிய  கடவுள் சிலைகள் கிடப்பதைக் கண்டனர்.  அவர்கள், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சார்புஆய்வாளர் இந்திரா  முதலான காவலர்களும்  மீனவர்களும், கடலில் இறங்கி, மேலும் சிலைகள் இருக்கின்றனவா எனத் தேடினர். இதில்,கடவுள் மந்திர எழுத்து பொறித்த செப்புத்தகடுகள், படிகலிங்கம், பச்சை நி…