விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 1-இலக்குவனார் திருவள்ளுவன்

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 1 விருது பெறுபவரை விருதாளர் என்பர். இவரோ தான் நிறைய விருதுகளைப் பெற வேண்டும் என்பதற்காகத் தன் பெயரையே விருதாளர் என மாற்றிக் கொண்டவர். தான் சூட்டிய பெயருக்கேற்ப சிறுகதைகளுக்காகவும் புதினங்களுக்காகவும் நிறைய விருதுகள் பெற்றுப் பாராட்டு பெறுபவர். அண்மையில் இவர் எழுதிய ‘வேர்களை மறக்கா விழுதுகள்’ என்னும் புதினம் சிறந்த புதினத்திற்காக அனைத்து இந்திய விருதினைப் பெற்றது. இதற்காகப் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் புகழ்பெற்ற ‘வி’ தொலைக்காட்சி நிறுவனத்தினர் இவரைப் பாராட்ட இவர் வீட்டிற்கு…

கண்ணுக்குத்தெரியும் கடவுள்கள் – தங்கர்பச்சான்

  நாட்டில் உள்ளத் துறைகளிலேயே முதன்மையானதாகக் கருதப்படுவது ஊடகத்துறை. மக்களாட்சியில் வாழ்கின்ற மக்களுக்கு வழிகாட்டுவதுடன் சமூகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய பொறுப்பும் கடமையும் அவற்றுக்கு உண்டு. நாம் தேர்ந்தெடுத்த அரசு நமக்கு அரணாக இருக்க வேண்டியதுபோல் ஊடகங்களும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் அரணாக இருக்க வேண்டும். கற்றவர்களும் பாமரர்களும் நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள ஊடகங்களையே நம்பி இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையின் மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்து கொண்டு வருவதுபோல் ஊடகங்களின் மீதும் இழந்து வருவது பெரும் கவலைக்குரியது. சமூகத்தின் சீர்கேடுகளை அலசும் ஊடகங்கள் தாங்கள் வழி…