திருமணம் குறித்துத் தந்தை பெரியார் சிந்தனைகள் தொடர்ச்சி : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 19 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 20   2 . திருமணம் தொடர்ச்சி   (3) சாரதா சட்டத்தை மீறுவதான முறையில் மணம் நடைபெறப் போவதாகத் தெரிந்தால் அதைத் தடுக்கும் அதிகாரமும் அவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரமும் நீதிமன்றத்துக்கு இருக்கவேண்டும். (4) பெண்களுக்கும் ஆண்களுக்கும் திருமணம் செய்து வைத்து விடுவதால் சிறுவயதிலேயே அவர்கள் தலைமீது குடும்பப் பொறுப்பு விழுந்து விடுகின்ற காரணத்தால் சுதந்திரம் அற்றுக் கவலை, தொல்லை இவற்றிற்கு ஆளாகிப் போதிய வளர்ச்சியற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள். திருமண அடையாளம்: திருமணத்தில் தாலிகட்டப் பெறுகின்றது. இதுபற்றிப் பெரியார் சிந்தனைகள்: (அ) தாலிகட்டுவது என்பது பெண்களுக்குமட்டும் ஆண்கள் தாலிகட்டுவதால் அதில் ஏதோ…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 12/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 11/17 தொடர்ச்சி)       தனித்தமிழ்க் கிளர்ச்சி 12/17 பல்வகை இன்பம் படைத்துமே காக்கும்நற்செல்வம் தமிழர்க்குச் செந்தமிழே அம்மானைசெல்வம் தமிழர்க்குச் செந்தமிழேல் அத்தமிழ்க்கல்வி பலர்கற்காக் காரணம்என் அம்மானைஅறியாமை காரணம் இன்(று) அகன்றுவிட்ட தம்மானை       (56) அடுத்துமே பள்ளிதனில் அருங்கல்வி பெறாதோர்க்குப்படத்தினால் கல்விதனைப் பரப்பலாம் அம்மானைபடத்தினால் கல்வி பரவுமென்றாற் படத்தைநடத்துபவர் அதில்கருத்து நாட்டவேண்டும் அம்மானைநாட்டின் நம்நாட்டிற்கே நலமுண்டாம் அம்மானை       (57) ஏர்மிகு பல்வளங்கள் இயையத் தமிழர்வாழ்ஊர்தோறும் நூல்நிலையம்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 34

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 33. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 14   அதற்கு மறுநாள் எங்கள் தேர்வு முடிந்துவிட்டது. அடுத்த நாள் ஊர்க்குப் போகத் திட்டமிட்டோம். மாலையில் மாலனும் நானும் கீழ்ப்புறத்துச் சிமெண்டுத் திண்ணையின் மேல் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அதே திண்ணையில்தான் எங்கள் நட்பு அன்று ஒருநாள் வேர் கொண்டது. அன்று சந்திரனுடைய ஒத்திகையை – பெண்ணாக நடித்த திறமையைப் பார்த்து மனத்தில் பாராட்டிக் கொண்டிருந்தேன். அந்த நாள் நினைவுக்கு வந்தது. சந்திரனிடத்தில் அதுவரையில் கண்டிராத திறமையை அன்று அவனிடம் கண்டேன்….

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 9

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 8. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 3 தொடர்ச்சி   “அக்கா! இனிமேல் அண்ணனுக்குக் கை நேரே வராம போயிடுமா?” அழுகையின் விசும்பலோடு சிறிய ஆரஞ்சு சுளைகளைப் போன்ற உதடுகள் துடிக்க பூரணிக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு இப்படிக் கேட்டாள் குழந்தை. அப்போது அகன்று மலர்ந்த அவள் குழந்தைமை தவழும் கண்களில் பயமும் கவலையும் தெரிந்தன. “இல்லை கண்ணே! அண்ணனுக்குக் கை சீக்கிரமே நல்லாப் போயிடும்” என்று சொல்லி குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள் பூரணி. பூக்களின் மென்மைகளையும் பன்னீரின் குளிர்ந்த…

திருமணம் குறித்துத் தந்தை பெரியார் சிந்தனைகள் தொடர்ச்சி : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 18 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 19   2 . திருமணம் தொடர்ச்சி   (9) அறிவோடு சிக்கனமாக வாழவேண்டும். வரவிற்குமேல் செலவிட்டும் பிறர் கையை எதிர்ப்பார்ப்பதும், ஒழுக்கக்கேடான காரியங்களுக்கு இடங்கொடுப்பதுமான காரியங்கள் இன்றி வரவிற்குள் செலவிட்டுக் கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும். (10) மணமக்கள் இருவரும் நண்பர்களாக நடந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை அன்புருவாக இருக்க வேண்டும். மணமக்கள் தங்களுக்காகவே என்று இராமல் மற்றவர்க்காகவே வாழ்கின்றோம் என்று எண்ணவேண்டும். (இ) சீர்த்திருத்தத் திருமணம்: இதுபற்றியும் ஐயாவின் சிந்தனைகளை உங்கள் முன்வைக்கிறேன்: (1) கல்யாணம் என்றால் சுதந்திர வாழ்க்கை, சமத்துவ வாழ்க்கை என்று இருக்க வேண்டுமேயொழிய அடிமை…

ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கெனத் தனிப்பட்ட வரலாறு உண்டு

(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 4சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான் (4) ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கெனத் தனிப்பட்ட வரலாறு உண்டென்பதும் அது தனியே ஆராயப்படவேண்டியதென்பதும் இந்நூற்றாண்டின் பிற்பாதியிலேயே அழுத்தம் பெற்றது. தமிழ் இலக்கியம் தமிழ் நாட்டு இலக்கியமாகவே நோக்கப்பட்டு வந்த நிலை மாறி தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஈழத்தின் பங்கும் வற்புறுத்தப்பட்டது இதன் பின்னரேயாகும். எனினும் ஈழத்தவர், ஈழத்து இலக்கியம் என்ற பற்றுணர்வு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே ஆரம்பித்துவிட்டது எனலாம். ஈழத்துத் தமிழரின் சமய பண்பாட்டுத்…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 11/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி  : 10/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க் கிளர்ச்சி : 11/17   தடமொழியாம் நம்முடைய தமிழ்ப்போர்வை தாம்போர்த்திவடமொழியைச் சிலமனிதர் வளர்க்கின்றார் அம்மானைவடமொழியைச் சிலமனிதர் வளர்க்கின்றா ரெனிலவர்கள்படையின்றிச் சூழ்ச்சியால்நம் பதவிகொள்வார் அம்மானைபதவிகொள இனிவிடின்நாம் பதராவோம் அம்மானை       (51) கடல்சூழும் இவ்வுலகில் கவினியநம் தமிழர்க்குஉடல்பொருள் ஆவிகள் ஓண்தமிழே அம்மானைஉடல்பொருள் ஆவிகள் ஓண்டமிழே யாமாயின்அடல்வேண்டும் தமிழை அழிப்பவரை அம்மானைஅடல்தவறாம் இனிஅவரே அழிந்திடுவார் அம்மானை       (52) தமிழ்நாட்டில் தமிழையே தாய்மொழியாக் கொண்டசிலதமிழரே முன்தமிழைத் தாழ்ந்ததென்றார் அம்மானைதமிழரே முன்தமிழைத் தாழ்ந்ததென்றா ராமாயின்தமிழ்க்…

திருமணம் குறித்துத் தந்தை பெரியார் சிந்தனைகள் : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 17 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 18 2 . திருமணம் வழக்கமாக நடைபெறுவது: (1) திருமணம் என்பது-வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்றால் ஒரு பெண்ணும் ஓர் ஆணும் சேர்ந்து உலக வாழ்வு வாழ்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளுகிற ஒப்பந்தம் (contract) என்பதாக இருக்க வேண்டுமே தவிரத் திருமணம் என்றால் ஆண் வீட்டாருக்குச் சம்பளம் இல்லாமல் வெறும் சோற்றுச் செலவோடு மட்டுமே ஒரு வேலைக்கு ஆள் (பெண்) சம்பாதிப்பதாக இருக்கக்கூடாது. (2) ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதுதான் வாழ்க்கை. வாழ்க்கை நடத்த ஆணும் பெண்ணும் –…

அரசியல் புதிய நிலைமைகள் தாக்கம் இலக்கியத்திலும் எதிரொலித்தது

(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 4சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான் அத்தியாயம் 3 ஈழத்துத் தமிழிலக்கியத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு தனித்து ஆராயப்பெறும் தகுதிகள் கொண்டது. வரலாற்றைப் பொறுத்தவரையிலும் பல முதன்மையான நிகழ்ச்சிகள் இந்நூற்றாண்டில் நடைபெற்றன. 1802ஆம் ஆண்டு இலங்கை பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்றநாடானமை, 1831ஆம் ஆண்டு இலங்கைக்கு முதலாவது அரசியற் சீர்திருத்தம் வழங்கப்பட்டமை, சுதேசிகள் இலங்கையரசியலிற் பங்குபற்றும் நிலையேற்பட்டமை, ஆங்கிலக் கல்வி நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டமை, பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டமை, நாட்டின் பல்வேறுபகுதிகளையும் இணைக்கும் வண்ணம்…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 10/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 9/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 10/17 முடியுடை மூவேந்தர் முன்னாண்டா ரம்மானைமுடியுடை மூவேந்தர் முன்னாண்டா ரெனிற்பின்னர்அடிமையில் நம்தமிழர் ஆழ்ந்ததேன் அம்மானைஆழ்ந்ததோ ஒற்றுமையின் அகன்றதால் அம்மானை       (46) புலவர் அன்று தொடங்கி அருந்தமிழ்நற் புலவோர்கள்சென்ற இடமெல்லாம் சிறப்புற்றா ரம்மானைசென்ற இடமெல்லாம் சிறப்புற்றா ராமாயின்இன்று முதற்பெருமை இலாததேன் அம்மானைநன்று சொனாயினியும் நழுவவிடா ரம்மானை       (47) வரிசை பலசெய்து வண்தமிழ்நற் புலவோர்கள்அரசர் அடங்கிமிக அரசாண்டார் அம்மானைஅரசர்…

ஆட்சிமுறை குறித்த பெரியார் சிந்தனைகள் : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 16 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 17 1. ஆட்சிமுறை. இதுபற்றித் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளைக் காண்போம். (1) ஆட்சிமுறை என்பது யார் நம்மை ஆள்வது என்கின்ற விஷயமல்ல. நமது மக்களுக்கு எந்த மாதிரி அரசியல் முறை இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமாகக் கருதப்பெற வேண்டியது. (2) “ஓர் இணைச்செருப்பு 14 ஆண்டுக்காலம் இந்த நாட்டை ஆண்டதாக உள்ள கதையை மிகுந்த விசுவாசத்தோடு படிக்கும் மக்களுக்கு மனிதனே அல்லாமல் இழிவான மிருகம், நாய், கழுதை, ஆண்டால்கூட அஃது அதிகமான அவமானம் என்றோ குறை…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 9/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 8/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க் கிளர்ச்சி  : 9/17   திருமணம் காதலனும் காதலியும் கருத்தொன்றிக் கலந்ததமிழ்க்காதல் மணமேயக் காலத்தில் அம்மானைகாதல் மணமேயக் காலத்தி லாமாயின்ஈதல் கிழவனுக்கின் றேற்றதோ அம்மானைசாதல் கிழமணத்தின் சாலவுநன் றம்மானை       (41) நந்தமிழ் மக்கள்செய் நல்லதொரு திருமணத்தில்செந்தமிழினால் நிகழ்ச்சி செய்யவேண்டும் அம்மானைசெந்தமிழி னால்நிகழ்ச்சி செய்யவேண்டு மாமாயின்வந்தவட மொழிபோகும் வழியென்ன அம்மானைவந்தவழி யேபோகும் வடமொழிதான் அம்மானை       (42) தமிழர்தம் திருமணத்தில் தக்கமண நிகழ்ச்சிகளைத்தமிழ்ப்பெரியார் நிகழ்த்துதலே…