தாய்மொழிநாளில் பேரா.மறைமலை காணுரை – ‘சன்’ தொலைக்காட்சி

சன் தொலைக்காட்சிக்குப் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் அளித்த நேர்காணல் – உரை வடிவில்   இந்த ஆண்டு ‘உலகத் தாய்மொழி நாள்’ (மாசி 09, 2047-பிப்பிரவரி 21, 2016) அன்று பேராசிரியர் மறைமலை இலக்குவனார் சன் தொலைக்காட்சியின் ‘விருந்தினர் பக்கம்’ நிகழ்ச்சியில் ‘உலகத் தாய்மொழி நாள்’ குறித்து அளித்த நேர்காணலின் உரை வடிவம்.   தொகுப்பாளர்: ஒவ்வோர் ஆண்டும் பிப்பிரவரி 21ஆம் நாள் ‘உலகத் தாய்மொழி நாள்’ கொண்டாடுகிறோம். உலக நாடுகள் எல்லாமே இந்த நாளை மிகச் சிறப்பாகக் கடைப்பிடிக்கின்றன. இந்த நாளை…

சன்தொலைக்காட்சியின் சூரிய வணக்கத்தில் பேரா. மறைமலை

  சன் தொலைக்காட்சியில் மாசி 10, 2047 / பிப். 22.02.2016 திங்கட்கிழமை ஒளிபரப்பாகும் சூரிய வணக்க நிகழ்ச்சியில் காலை 8.00 மணிக்குப் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் செவ்வி / பேட்டி ஒளிபரப்பாகிறது.   http://www.sunnetwork.in/ இணையத் தளத்திலும் காணலாம்.

சேதுக்காப்பியம் 7ஆம் காண்டம் வெளியீட்டு விழா, சென்னை

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் படைப்பாக்கமான சேதுக்காப்பியம் 7 ஆம் காண்டம் நூல் வெளியீடு   தை 25, 2017 / பிப்.09,2016 மாலை 5.30 சென்னை 600 005   தலைமை :  அறிஞர் ஔவை நடராசன் தொடக்கவுரை: பேரா.மறைமலை இலக்குவனார் நூல் வெளியிடுநர்: பேரா.அ.இராமசாமி

ஏணிப் படியாய் உயர்த்திய சான்றோர்! – மறைமலை இலக்குவனார்

இழுக்கு நிறைந்த போலிச் சடங்கும் அழுக்குப் படிந்த மூடத் தனங்களும் அழுத்தி வைத்த அடிமை வாழ்வே ஆண்டவன் கொடையென மயங்கிய நாளில் ஆதவன் உதயமாய் விடியல் அளித்தார்; நாணத் தக்க சாதிப் பீடையால் கூனிக் குறுகிக் கிடந்த தமிழரை ஏணிப் படியாய் உயர்த்திய சான்றோர்; பெரியார் பெருமை உரைக்கவும் இயலுமோ? -மறைமலை இலக்குவனார்

நன்றி மறவேன் என்றும்! – இலக்குவனார் மறைமலை

  சொந்தக் கதை 01 எண்ணிப் பார்த்தால் எனக்கே நகைப்பாம் அறுபது  அகலுது  வருவது எழுபது எண்களில்  மட்டுமே இந்த மற்றம் எனக்குள் எந்த மாற்றமும் இலையே! பிறந்தேன் எனல்பிழை பெற்றனர் என்னை; இலக்குவர் மலர்க்கொடி இணையர் அன்பால் உலகினில் தோன்றினேன் என்செயல் என்ன? வந்தேன் வளர்ந்தேன் வண்டமிழ்ச் சூழலில்! கல்வியால் பதவியும் பதவியால் செல்வமும் மேலும் மேலும் மேன்மையும் தேடிய அறிஞர் நிறைந்த அருந்தமிழ் நாட்டில் கல்வியும் பதவியும் செல்வமும் கொண்டே தமிழின் உரிமை மீட்கும் பணியில் தளரா(து) உழைத்தவர் என்னருந் தந்தை…

மருத்துவமாமணி கண்ணப்பன் போற்றி விழாக்கள்

மருத்துவமாமணி கண்ணப்பன் அவர்களின் 81-ஆம் பிறந்தநாள் விழா & 5-ஆம் நினைவுநாள்   மறைமலை இலக்குவனார், திருக்குறள் மோகனராசு,பெங்களூர் மருத்துவர் நாகேசு, பால.சீனிவாசன் ஆகியோர் பாராட்டப்பட்டனர். வாசுகி கண்ணப்பன் விழாவைச் சிறப்பாக நடத்தினார். இசைப்பாவலர் இரமணன், பா.ச.க.தலைவர் இல.கணேசன், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா.தாண்டவன், மு.சிவச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்

கண்ணப்பர்விழா இன்று(13.12.2015) நடைபெறுகிறது.

பேரா.மருத்துவர் முதுமுனைவர் கண்ணப்பரின் 81 ஆம்  பிறந்தநாள் விழா,  5 ஆம்  ஆண்டு நினைவு நாள் மறைமலை இலக்குவனார் முதலானவர்க்கு விருது வழங்கும் விழா இசைப்பொழிவு நூல் வெளியீடு கார்த்திகை 27, 2046 / திசம்பர் 13, 2015 சென்னை

இணையவெளியில் பாரதியார் விழா – மறைமலை இலக்குவனார்

இணையவெளியில் பாரதியார் விழா திசம்பர் 11: பாட்டுக்கொரு புலவர் பாரதியார் பிறந்தநாள். மழைத் தொல்லையில் வெளியே விழாவுக்குப் போகமுடியவில்லை. வீட்டிலேயே கணினிமுன் அமர்ந்து கொண்டாடுவோம். பாரதியாரைப் பற்ரிய உங்கள் கவிதையை, கட்டுரையை ஒருங்குறி எழுத்தில் வடித்துக் கவிதை விக்கிக்கு அனுப்புங்கள். உங்கள் முகநூல் கணக்கைக் கொண்டு கவிதை விக்கியில் சிக்கலின்றி நுழையலாம் .உடனடியாகத் தரவேற்றம் செய்யலாம். உங்கள் பேச்சைக் கூட எம்பி4 கோப்பில் பத்து மணித்துளிகளுக்கு மிகாமல் அனுப்பலாம். வாருங்கள். உலகப்பெரும் பாவலன் பாரதியின் புகழ் பரப்புவோம். – முனைவர் மறைமலை இலக்குவனார்

பெருங்கவிக்கோவின் சேதுகாப்பியம் வரலாற்று ஆவணம் – மறைமலை இலக்குவனார்

பெருங்கவிக்கோவின் சேதுகாப்பியம் 3 மறுமலர்ச்சிக் காண்டம் நூலிற்கு முனைவர் மறைமலை இலக்குவனாரின் அணிந்துரை பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் நாடறிந்த நற்றமிழ்ப்பாவலர். உலகைப் பலமுறை (49 தடவை) வலம் வந்த ஒரே தமிழறிஞர். ‘கெடல் எங்கே தமிழின் நலம்!அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!’ எனும் புரட்சிக்கவிஞரின் ஆணையைத் தம் வாழ்நாள்பணியெனக் கொண்டு செயலாற்றும் தமிழ்மறவர். கரிகாற்பெருவளத்தானையும் சேரன் செங்குட்டுவனையும் நிகர்த்த தமிழ் மறம் கொண்ட தமிழ் உரிமைப்போராளி. ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்’என்னும் திருநாவுக்கரசரின் வாக்கையேற்றுத் தமிழ்ப்பகை கடியும் தறுகண்மை மிக்கவர். தமிழுக்குச் செம்மொழித்தகுதிப்பேறு வழங்கவேண்டுமென அற்றைத்…