கணிணித்தமிழ் வளர்ச்சி இரண்டாம் மாநாடு (மார்ச்சு 30, மாநிலக்கல்லூரி, சென்னை) மின்மடல் இழை அன்புள்ள தமிழ் ஆர்வலர்களே, வரும் கணிணித்தமிழ் வளர்ச்சி இரண்டாவது மாநாட்டில் ‘ தமிழ்மொழித்தொழில்நுட்பத்தின் வளர்ச்சி’ என்பதே மையக் கருத்தாக அமைகிறது. எனவே மாநாட்டிற்குமுன்பே அதுபற்றி இதுவரை நடைபெற்றுள்ள வளர்ச்சிகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். தமிழகத்தில்மட்டுமல்லாமல், உலகின் பல பகுதிகளில் தமிழ்மொழித் தொழில்நுட்பத்தில் பலர் ஈடுபட்டுவருகின்றனர். அவைபற்றியெல்லாம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் இந்த மின்மடல் இழை தொடங்கப்படுகிறது. மொழித்தொழில்நுட்பம் ( Language Technology)  பேச்சுத்தொழில்நுட்பம் (Speech Technology) ஒளிவழி எழுத்துணர்த் தொழில்நுட்பம் (Optical…