130./133. வேற்றுமையின் வித்தே சனாதனம்! – இலக்குவனார்திருவள்ளுவன்

(129/133. ஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை!-தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 130./133. வேற்றுமையின் வித்தே சனாதனம்! “வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றிக் கூறுகிறோம். சனாதனத் தருமமும் அதையேதான் கூறுகிறது. இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் வளர சனாதனத் தருமம் வழி முறையாக இருக்கும்” என உயர்ந்த பொறுப்பில் இருக்கும் பெரியர் ஒருவர் முத்து உதிர்த்துள்ளார். அறிந்தே சொல்லப்படும் பொய் என்பதால் அவருக்கு விளக்கம் சொல்லத் தேவையில்லை. தமிழ்நாட்டின் தலைவர்கள் பலரும் அவருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனினும் இதுபோன்ற பொய்களை நம்பும்…

99. சனாதன ஒழுக்கத்தை அருத்த சாத்திரம் கூறுகிறதல்லவா? 100. அருத்த சாத்திரம் பொதுவான நீதி நூலா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 (சனாதனம் – பொய்யும் மெய்யும் 97-98 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 99-100 நீண்ட தொலைவு பயணம் மேற்கொண்ட ஒருவரின் மனைவி அவனுடைய உறவினர் அல்லது பணியாளரிடம் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என அருத்த சாத்திரம் கூறுகிறது. தமிழ் நெறியோ பிறன் மனை விழையாமையையும் கற்பொழுக்கத்தையும் வலியுறுத்துகிறது. மரம் முதலியவற்றால் இரவில் இலிங்கங்களைச் செய்து வைத்து, இது பூமியைப் பிளந்து கொண்டு வெளித்தோன்றிய சுயம்புலிங்கம் என்று எல்லோருக்கும் அறிவித்து அதற்குத் திருவிழா முதலியவற்றைச் செய்யுமுகமாக மக்களிடமிருந்து பொருளை ஈட்டல் வேண்டும். கடவுள், மரம் முதலியவற்றில் தெய்வம் வீற்றிருக்கிறது என மக்களை நம்ப வைப்பதற்காக,…

97. சனாதன நூலாகிய அருத்த சாத்திரம் மக்கள் அனைவருக்கும் உரிய நூல் என்கிறார்களே! 98. அருத்த சாத்திரம் திருக்குறளுக்கும் மூத்த நூல் என்பது பொய்யா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 94-96 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 97-98 மார்க்கு மக்கினீசு என்னும் அறிஞர், ‘அருத்த சாத்திரம் மெளரியர் காலத்து ஆவணமா?’ எனக் கட்டுரை எழுதியுள்ளார்.(Is the Arthasastra a mourian document? by Mark Mcclish) இதில் அருத்த சாத்திரம் மெளரியர் காலத்து நூலல்ல, இதன் ஆசிரியராகக் கூறப்படும் சாணக்கியர் அல்லது கெளடில்யர் சந்திர குப்புத மன்னரின் அமைச்சர் அல்லர், அவருக்குப்பின் பல நூற்றாண்டுகள் கழித்து வாழ்ந்த சிலரால் தொகுக்கப்பெற்றது இந்நூல் என அவர் இதில் நிறுவியுள்ளார். அருத்தசாத்திரத்தைக் கெளடில்யன் என்பான்…