நெடுந்துயர் அகன்றேயோடும் ! – எம்.செயராமன்

வான்முகில் வளாது பெய்கவென வாயார வாழ்த்துப் பாடி வையத்தில் விழாக்கள் தோறும் மனமாரப் பாடி நிற்போம் வாழ்த்தினைக் கேட்டு விட்டு வானுறை தேவர் எல்லாம் வையகம் வாழ்க எண்ணி மாமழை பொழியச் செய்வர் வறண்டு நிற்கும் பூமியெல்லாம் வான் மழையைக் கண்டுவிட்டால் மகிழ்வு கொண்டு வானோக்கி மனதார நன்றி சொல்லும் வயல்நிறையும் குளம் நிறையும் வயலுழுவார் மனம் மகிழும் தினமும் மழை பெய்கவென தீர்மானம் எடுத்தும் நிற்பார் அகமகிழ வைக்கும் மழை ஆபத்தைத் தந்த திப்போ அனைவருமே மழை பார்த்து அலமந்தே நின்று விட்டார்…

பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் ! – எம். செயராம(சர்மா) … மெல்பேண்

       இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்      இல்லையென்று சொல்லுவதில்லை      கருணையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்      காட்சிதர மறுப்பதுமில்லை        ஆணவத்தை அகற்றிப்பாருங்கள் – அவன்       அரவணைக்கக் கரத்தைநீட்டுவான்       நாணயாமாய் நடந்துபாருங்கள் – அவன்       நாளுமெங்கள் அருகில்வந்திடுவான்      உணர்வுகொண்டு பாடிப்பாருங்கள் – அவன்      உள்ளமதில் வந்துநின்றிடுவான்      தெளிவுடனே நாளும்தேடுங்கள்  –…