திரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி ! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி ! அறிவுக்குப் பொருந்தாக் கதையாக இருப்பினும் தீபாவளியைக் கொண்டாடுவோர் இருக்கின்றனர். அதே நேரம், தீபாவளியை எளிமையாகக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்துவோரும் தீபாவளியைக் கொண்டாடாதவர்களும் உள்ளனர். விசய நகரப் பேரரசான இந்துப் பேரரசு தமிழ்நாட்டில் கி.பி. 15ஆம் நூற்றாண்டு நுழைந்தது. அப்பொழுது முதல்தான் தீபாவளி இங்கே கொண்டாடப்படுகிறது. அவ்வாறு தமிழகத்திற்கு இறக்குமதியான ஒரு பண்டிகைதான் தீபாவளி. நேரடியாகப் புகாமல் இருக்கின்ற விழாவை மாற்றி அமைக்கும் வகையில் புகுந்துள்ளது. பரதகண்டம் முழுவதும் இருந்த கார்த்திகை நாளே தீபாவளியாக மாறியுள்ளது….

செல்வி முல்லை அமுதன் கார்த்திகாவின் நூல் அறிமுகமும் இசைப் படையலும்

‘சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்‘ நூல் அறிமுகமும் இசைப் படையலும்  தமிழும் இசையும் இணைந்து அரங்கேறிய இனிமையான நிகழ்வு ஒன்று 22/10/2016 சனிக்கிழமை மாலை ஈசுட்டுஃகாமிலுள்ள அட்சயா மண்டபத்தில் நிறைவேறியது. எழுத்தாளர் முல்லைஅமுதன் – செயராணி  இணையரின் மூத்த புதல்வி கார்த்திகா,  “சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்” என்ற நூலை அரங்கேற்றியதுடன், இசைக்கலைமணி, கலாவித்தகர்..திருமதி.சேய்மணி சிறிதரன் அவர்களிடம் தான் கற்றுத் தேர்ந்த இசையையும்  படையலிட்டார். முற்பகுதியில் நூல் அறிமுகம், பிற்பகுதியில் இசைப்படையலும் இடம்பெற்றது.  தொடக்கத்திலிருந்து நிகழ்ச்சி முடியும் வரை  அவையோர் இருந்து  களித்து மகிழ்ந்தமை…

கார்த்திகை மாதம்..கனவுகள் ஊர்வலம் போகும் மாதம்! – மு.வே. (இ)யோ

இது மாவீரர் மாதம் கார்த்திகையில்.. கடலடிக்கும்..ஓசை.. காதைப் பிளக்கும்.. வாடைக் காற்றில் பனை ..அடித்து மேளங்கள் கொட்டும்.. விளை நிலங்கள் எங்கும்.. தினை வெடித்துப் பறக்கும்.. சம்பா நெற்கதிர்கள்.. தலை சாய்த்து -புலி வீரர்களை வணங்கும்.. இளங் குமரி.. வடலியிலே.. ..காகங்கள் அமர்ந்திருந்து.. கட்டிய முட்டிகளில்.. கள்ளடித்து.. ..மயங்கி.. புல்லரிக்கும் ..பாடல்களை பாடும்….! கருவேல மரங்களும்.. முல்லைகளும் முருங்கைகளும்.. தெருவோர வாகை மரங்களும்.. முள் முருக்கைகளும் .. பொன்னலரிச் செடிகளும் பெரு மழையைக் கண்டு.. நாணி..நெளிந்து..நடனம் ஆடிக்.. காதலால்.. சிலிர்த்து.. தழைத்து..மகிழ்ந்து.. பூக்களைச் சொரியும்…