திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 030. வாய்மை
(அதிகாரம் 029. கள்ளாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 030. வாய்மை தீமை இல்லாதவற்றைச் சொல்லலும், பொய்த்தல் இல்லாது வாழ்தலும். வாய்மை எனப்படுவ(து) யா(து)?எனின், யா(து)ஒன்றும், தீமை இலாத சொலல். எச்சிறு அளவிலேனும், தீமை இல்லாதன சொல்லலே வாய்மை. பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். யார்க்கும் குற்றம்இலா நன்மையான பொய்யும், வாய்மையின் இடத்தது. தன்நெஞ்(சு) அறிவது, பொய்யற்க; பொய்த்தபின்,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 029. கள்ளாமை
(அதிகாரம் 028. கூடா ஒழுக்கம் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03. துறவற இயல் அதிகாரம் 029. கள்ளாமை உள்ளத்தாலும், பிறரது பொருள்களை எள்அளவும் திருட எண்ணாமை. எள்ளாமை வேண்டுவான் என்பான், எனைத்(து)ஒன்றும், கள்ளாமை காக்க,தன் நெஞ்சு. இகழ்ச்சியை விரும்பாதான், எந்த ஒன்றையும் திருட எண்ணான். உள்ளத்தால் உள்ளலும் தீதே, “பிறன்பொருளைக், கள்ளத்தால் கள்வேம்” எனல். “பிறரது பொருளைத் திருடுவோம்” என்று, நினைப்பதும் திருட்டே.. களவினால் ஆகிய…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 028. கூடா ஒழுக்கம்
(அதிகாரம் 027. தவம் தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 028. கூடா ஒழுக்கம் அழுக்கான, கடைப்பிடிக்கக் கூடாத ஒழுக்கக் கேட்டோடு கூடாமை. வஞ்ச மனத்தான் படிற்(று)ஒழுக்கம், பூதங்கள் ஐந்தும், அகத்தே நகும். வஞ்சகன்தன் பொய்ஒழுக்கம் கண்டு, மெய்வாய்கண் மூக்குசெவி நகும். வான்உயர் தோற்றம் எவன்செய்யும்? தன்நெஞ்சம், தான்அறி குற்றப் படின். மனம்அறிந்த குற்றத்தார்க்[கு] உயர்தவக் கோலத்தால் என்ன பயன்? வலியில் நிலைமையான் வல்உருவம்,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 027. தவம்
(அதிகாரம் 026. புலால் மறுத்தல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 027. தவம் தம்துயர் பொறுத்தல், துயர்செய்யாமை, தூயநல் அறச்செயல்கள் செய்தல். உற்றநோய் நோன்றல், உயிர்க்(கு)உறுகண் செய்யாமை, அற்றே, தவத்திற்(கு) உரு. துயர்பொறுத்தல், உயிர்கட்கும் செய்யாமை தூய தவத்தின் இலக்கணம். . தவமும், தவம்உடையார்க்(கு) ஆகும்; அவம்,அதனை அஃ(து)இலார், மேற்கொள் வது. மெய்த்தவத்தார் தவக்கோலம் சிறப்பு; பொய்த்தவத்தார் தவக்கோலம் பழிப்பு. துறந்தார்க்குத்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 026. புலால் மறுத்தல்
(அதிகாரம் 025. அருள் உடைமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. துறவற இயல் அதிகாரம் 026. புலால் மறுத்தல் அசைவம் உண்ணாமையும், பிறஉயிர்க் கொலையை எண்ணாமையும் அருள். தன்ஊன் பெருக்கற்குத், தான்பிறி(து) ஊன்உண்பான், எங்ஙனம் ஆளும் அருள்….? உடலைப் பெருக்க, உடலுண்பான் எங்ஙனம் அருளை ஆள்வான்….? பொருள்ஆட்சி, போற்றாதார்க்(கு) இல்லை; அருள்ஆட்சி, ஆங்(கு)இல்லை ஊன்தின் பவர்க்கு. காப்பாற்றாதார்க்குப், பொருளும், புலாலைத் தின்பார்க்கு, அருளும் இல்லை. படைகொண்டார்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 023. ஈகை
(அதிகாரம் 022. ஒப்புரவு அறிதல் தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 023. ஈகை ஏழையர்க்கு, வேண்டியன எல்லாம், கொடுக்கும் பயன்கருதாத் தனிக்கொடை. வறியார்க்(கு)ஒன்(று) ஈவதே ஈகை,மற்(று) எல்லாம், குறியெதிர்ப்பை நீர(து) உடைத்து. எதையும் எதிர்பார்க்காமல், ஏழையர்க்குக் கொடுப்பதே, ஈகை ஆகும். 222.நல்ஆ(று) எனினும், கொளல்தீதே; மேல்உலகம் இல்எனினும், ஈதலே நன்று. நல்செயலுக்காக் கொள்வதும் தீதே; மேல்உலகு இல்எனினும், கொடு. 223. “இலன்”என்னும், எவ்வம் உரையாமை ஈதல், குலன்உடையான் கண்ணே உள. “இல்லாதான்”எனச் சொல்லும் முன்னர் ஈதல்,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 022. ஒப்புரவு அறிதல்
(அதிகாரம் 021. தீ வினை அச்சம் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 022. ஒப்புரவு அறிதல் பொதுநல உணர்வோடு, இருப்பதைப் பகிர்ந்து கொடுத்துதவும் பேர்அறம். 211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்(டு), என்ஆற்றும் கொல்லோ உலகு? எதிர்பார்ப்பைக் கருதாத மழைக்கு, இவ்உலகு, எந்நன்றி செய்யுமோ? 212. தாள்ஆற்றித் தந்த பொருள்எல்லாம், தக்கார்க்கு, வேளாண்மை செய்தல் பொருட்டு. உழைத்துப் பெற்ற பொருள்எல்லாம், தகுதியர்க்கு எல்லாம் உதவவே. 213. புத்தேள் உலகத்தும், ஈண்டும், பெறல்அரிதே, ஒப்புரவின் நல்ல பிற. பொதுக் கொடையைவிடப்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 021. தீ வினை அச்சம்
(அதிகாரம் 020. பயன் இல சொல்லாமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 021. தீ வினை அச்சம் தீயைப் போன்று சுட்[டு]அழிக்கும் தீய செயல்களுக்கு அஞ்சுதல். 201. தீவினையார் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர், தீவினை என்னும் செருக்கு. தீயோர், தீச்செயல்களுக்கு அஞ்சார்; தூயோர் அவற்றிற்கு அஞ்சுவார். 202. தீயவை, தீய பயத்தலால், தீயவை, தீயினும் அஞ்சப் படும். தீயைவிடத், தீமைதரும் தீய செயல்களைச் செய்தற்கு, அஞ்சுக. 203. அறிவினுள் எல்லாம் தலைஎன்ப, தீய, செறுவார்க்கும் செய்யா விடல்….
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 020. பயன் இல சொல்லாமை
(அதிகாரம் 019. புறம் கூறாமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 020. பயன் இல சொல்லாமை எதற்குமே பயன்படாத வீண்சொற்களை என்றுமே சொல்லாத நல்பண்பு. 191. பல்லார் முனியப், பயன்இல சொல்லுவான், எல்லாரும் எள்ளப் படும். வெறுப்பினை ஊட்டும் வீண்சொற்களைச் சொல்வாரை, எல்லாரும் இகழ்வார். 192. பயன்இல, பல்லார்முன் சொல்லல், நயன்இல, நட்டார்கண் செய்தலின் தீது. நண்பரிடம் விரும்பாதன செய்வதைவிட, வீண்சொல் கூறல் தீது. 193. நயன்இலன் என்பது சொல்லும், பயன்இல, பாரித்(து) உரைக்கும் உரை….
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 019. புறம் கூறாமை
(அதிகாரம் 018. வெஃகாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 019. புறம் கூறாமை ஒருவர் இல்லாத பொழுது அவரைப் பற்றிக் கோள்கூறாமை. 181. அறம்கூறான், அல்ல செயினும், ஒருவன், புறம்கூறான் என்றல் இனிது. அறத்தைக் கூறாது, தீமைகளைச் செய்யினும், கோள்கூறாமை இனிது. 182. அறன்அழீஇ, அல்லவை செய்தலின் தீதே, புறன்அழீஇப், பொய்த்து நகை. பின்னே பழிப்பும், முன்னே பொய்ச்சிரிப்பும், அறஅழிப்பினும் தீது. 183. புறம்கூறிப், பொய்த்(து)உயிர் வாழ்தலின், சாதல், அறம்கூறும் ஆக்கம் தரும். பழிசொல்லும் பொய்வாழ்வைவிட, இறத்தல்,…
