குறள் கடலில் சில துளிகள் 5. நுட்பமாய்க் கேட்பவர் பணிவாய்ச் சொல்வார் – இலக்குவனார்திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 4 – இலக்குவனார்திருவள்ளுவன் – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 5. நுட்பமாய்க் கேட்பவர் பணிவாய்ச் சொல்வார்! நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 419) நுட்பமான கேள்விச்செல்வத்தைக் கேட்டு அறியாதவரால், பணிவான சொற்களைக் கூற இயலாது என்கிறார் திருவள்ளுவர். தீவிரமாகக் கேட்பவர்(active listener) அடுத்தவர் என்ன சொல்கிறார என்பதை அடக்கத்துடன் கேட்கும் இயல்பைப்பெற்று விடுகிறார் எனக் கல்வி உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அடக்கத்துடன் கேட்பவர்கள்,…
குறள் கடலில் சில துளிகள் 4. அறிவுரைகளைக் கேட்பனவே செவிகள். பிற துளைகள் – இலக்குவனார்திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 3 – இலக்குவனார்திருவள்ளுவன்-தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 4. அறிவுரைகளைக் கேட்பனவே செவிகள். பிற துளைகள்! கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 418) கேள்விச்செல்வத்திற்கு இடம் தராத காதுகள் ஓசையை மட்டும் கேட்கும் செவிட்டுத்தன்மை உடையனவே என்கிறார் திருவள்ளுவர். புறச்செவி உள்ளே நடுச்செவி உள்ளது. இதில் செவிப்பறை குழி உள்ளது. செவியில் அமைந்த இயற்கைத் துளை என்னும் அறிவியல் உண்மைபோல் அதில் நற்பொருள்ள ஒலி…
குறள் கடலில் சில துளிகள் 3 – இலக்குவனார்திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 2 – இலக்குவனார்திருவள்ளுவன்-தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 3 கேள்விச்செல்வத்தால் அறியாமையைப் போக்கு! பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 417) நுட்பமாக ஆராய்ந்து மிகுதியான கேள்விச்செல்வம் பெற்றவர்கள் தவறாக உணரந்தாலும் அறியாமையானவற்றைச் சொல்ல மாட்டார்கள் என்கிறார் திருவள்ளுவர். உளவியலறிஞர்கள். கவனித்துக் கேட்டல் அறிவாற்றலையும் ஒழுக்க நடத்தையையும் உள்ளடக்கியது. ஆதலின் அறியாமையை வெளிப்படுத்த மாட்டார்கள் என்கின்றனர். காலிங்கர், “ ‘பிழைத்தும்-உணர்ந்தும்’ எனப் பிரித்துத் ‘தப்பியும்’ ‘குறிக்கொண்டும்’…
குறள் கடலில் சில துளிகள் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
குறட் கடலிற் சில துளிகள் 1 ஒழுக்கமுடையார் அறிவுரைகளை ஊன்றுகோலாகக் கொண்டு சிறந்திடுக! இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 415) வழுக்கும் சேற்று நிலத்தில் நடக்க உதவும் ஊன்றுகோல்போல் வாழக்கையில் வழுக்க நேரும் பொழுது ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் உதவும் என்கிறார் திருவள்ளுவர். ஆள்வோர் வழிதவற நேரும் பொழுது ஒழுக்கமுள்ளவர்கள் சொற்கள் நல்வழி காட்டும் என்கின்றனர் அரசியலறிஞர்கள். ஆள்வோருக்கு மட்டுமல்ல யாவருக்குமே இது பொருந்தும். கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார் அறிவிலராகலின், அவர் வாய்ச்சொல்…