தமிழாராய்ச்சிக்குதவும் தமிழ் முனைவர் குழுமம்
தமிழ் முனைவர் குழுமம் வணக்கம். தமிழில் உயர்கல்வியை மேம்படுத்தும் பொருட்டு ஒரு முகநூல் குழுவைத் தொடங்கியுள்ளேன். குழுவின் நோக்கம்: 1) தமிழகக் கல்லூரிகளில் உள்ள முனைவர், ஆய்வுநிறைஞர் (எம்.பில்.) பட்ட வகுப்பு மானவர்கள் ஆய்விற்கு உதவுதல் 2) பல்வேறு கல்லூரி, பல்கலைகழகப் பாடத் திட்டங்களை மேம்படுத்த நெறியுரை வழங்குதல் 3) தமிழகத்தில் ஆய்வுகள் அடிப்படையிலான உயர்கல்வி அமைய முயற்சி செய்தல் குழுவில் இணையப் பின்வரும் தகுதி உள்ளவர்கள் மட்டுமே வரவேற்கப்படுகிறார்கள்! 1) முனைவர் பட்டம் பெற்றவர்கள். 2) இயற்பியல், பொறியியல், தமிழ்,…
ஆரியத்தை உயர்த்துவதும் தமிழைத் தாழ்த்துவதும் வழக்கமாகிவிட்டது
ஆரியத்தை உயர்த்துவதும் உண்மையான உயர்வுடைய தமிழைத் தாழ்த்துவதும் வழக்கமாகிவிட்டது தூயதமிழ்ச் சொற்களை ஆரிய மொழிச் சொற்கள் எனத் திரித்துக் கூறுவதும், தமிழர்க்கே உரிய நாகரிகத்தையும் பண்பாட்டையும் ஆரியர்க்குரியன என அறங்கோடி அறைவதும் இன்னும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றமை மிக மிக வருந்துவதற்குரியது. உண்மைக்குப் புறம்பான புனைந்துரை எழுதி ஆரியரே மேலோராய்த் தமிழர்க்கு நாகரிகம் கற்பித்தனர் எனக் கூறுவோரை உயர்ந்த வரலாற்று ஆசிரியர் என்பதும் காய்தல் உவத்தல் இன்றிஆராய்நது தமிழர் நாகரிகச் சிறப்பை உரைப்போரைக் குறுகிய நோக்கமுடைய குறுமதியாளர் எனக் குற்றம் கூறி இகழ்வதும்…
உயிர்த்தமிழில் பாடி வைப்பேன்! – கவிஞர் கலைக்கூத்தன்
நினைக்கிறதை உயிர்த்தமிழில் பாடி வைப்பேன்! நீடுலகில் தான்வாழும் வரையென் அன்பு மனைக்கிழத்தி மேடைகளில் முழங்கி நிற்பாள்! மக்களெலாம் முத்தமிழ் பயின்று போற்றும் வினைக்கென்றே வளர்த்திடுவேன்! இம்மா ஞாலம் வெல்தமிழன் சிறப்புணரக் கேட்ட பின்பு எனைக்கொன்று விடுபடைப்பே! புலமை மூத்தோன் என்சிதைக்குத் தமிழ்ப்பாடித் தீமூட் டட்டும்! – கவிஞர் கலைக்கூத்தன் (மும்பையில் வாழ்ந்து மறைந்த கவிஞர்) http://www.tamillemuriya.com/LemArticleFull.php?as=534
தமிழ்க்கருத்துகளை ஆரியமாக ஏமாற்றிய வடமொழியாளர் – பரிதிமாற்கலைஞர்
தமிழரிடத்திருந்த பல அரிய செய்திகளையும் ஆரியர், மொழி பெயர்த்து வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர். வடமொழி தமிழ்நாட்டில் வெகுநாள் காறும் இயங்கியும் அதற்குத் தமிழ் மொழியைத் தன் வழியிலே திருப்பிக் கொள்ளுதற்குற்ற ஆற்றலில்லாது போயிற்று. வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை யுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்மநூற் பயிற்சி மிக்குடையாராயும், கலையுணர்ச்சி சான்றவராயு மிருந்தமைபற்றித் தமிழரது திவ்விய தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர்; தமிழர்களிடத்தில்லாதிருந்த ‘அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்’ என்ற நால்வகைச்சாதி முறையை மெல்லமெல்ல…
உலகாள்வோம் உயிர்த் தமிழால்! – குறள்நதி
உலகாள்வோம் உயிர்த் தமிழால்! பாரெங்கும் நிலைத்திட்ட பொங்குதமிழ் -அன்று சங்கம்பல கண்டிட்ட மதுரத்தமிழ் அகத்துடன் புறம்தந்த தீந்தமிழ் -என்றும் அணியாக நிலைத்திட்ட பைந்தமிழ் இன்பமுடன் நாம் தமிழைப் படித்திட்டால் -இனி உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே ! காவியம்பல தந்திட்ட முத்தமிழ் -நமக்குள் கவிகள்பல புகுத்திட்ட பூந்தமிழ் கவிபாட இனித்திட்ட தேன்தமிழ் -நம்மையெல்லாம் கவிஞனாய் இங்குப் பாடவைத்த அருந்தமிழ் இன்பமுடன் நாம் தமிழைப் படித்திட்டால் -இனி உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே ! தமிழ்த்தாயைத் தாலாட்டும் பத்துப்பாட்டு-எங்கும் தமிழ்மொழியை வளர்க்கின்ற எட்டுத்தொகை…
தமிழில்லா அறமன்றம் யாருக்காக? – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழில்லா அறமன்றம் யாருக்காக? நீதிக்காகக் குரல் கொடுப்பவர்கள் தண்டிக்கப்படலாமா? தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கான நீதிமன்றங்களின் செயல்பாடுகள் தமிழில் அமைவதுதானே உண்மையான அறமாகும். குற்றஞ்சாட்டப்பட்டவர், எதிர்த்தரப்பார், இரு தரப்பினரின் சான்றுரைஞர்கள் எனனத் தொடர்புடையவர்கள் தங்கள்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு, பிற செய்திகளைப்பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ள அவர்களுக்குப் புரியும்படித் தமிழில் அமைவதுதானே முறையாகும். ஆனால், இதற்கு மாறான நிலை நம்நாட்டில் நிலவுகின்றதே! தமிழக உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடுமொழியாக இருக்க வேண்டும் என இந்திய அரசியல்யாப்பின்படிதான் நாம் வேண்டுகிறோம். இந்திய அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 348(2) இன்படி, …
தமிழுக்காக வாதாடினால் சிறையா? வழக்குகளைத் திரும்பப் பெறுக! – திருமாவளவன்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ் வழக்குமன்ற மொழியாகப் போராடி வரும் வழக்குரைஞர் பீட்டர் இரமேசு குமாருக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர். இராமசுப்பிரமணியன், கே.இரவிசந்திரபாபு ஆகியோர், 6 மாதச்சிறைத்தண்டனையும் நீதிமன்ற அவமதிப்புச்சட்டத்தின்கீழ்த் தண்டனை பெற்றவர்கள் எந்த நீதிமன்றத்திலும் வழக்குரைஞராகச் செயல்படமுடியாது என்பதன் அடிப்படையில் வழக்குரை உரிமைப் பறிப்பும் விதித்துள்ளனர். எனினும் மேல் முறையீட்டிற்காக இத் தண்டனையை 15 நாள் நிறுத்தி வதை்துள்ளனர். இது குறித்து, விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் உயர்நீதி மன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு…
எங்கள் தமிழ் மொழிக்கு ஈடேது மில்லை! – பிரகாசம்
எல்லை யென்பதில்லை எங்கள் தமிழ் மொழிக்கு ஈடேது மில்லை- எங்கள் தமிழ்மொழி போன்றொரு தாயு மில்லை தமிழ்மொழி போன்றொரு தந்தையு மமில்லை தமிழ்மொழி போன்றொரு அறிவொளியு மில்லை தமிழ்மொழி போன்றொரு இலக்கியமு மில்லை தமிழ்மொழி போன்றொரு வளமு மில்லை தமிழ்மொழி போன்றொரு முதுமை யில்லை தமிழ்மொழி போன்றொரு புதுமை யில்லை தமிழ்மொழி போன்றொரு வண்மை யில்லை தமிழ்மொழி யேநாளும் ஆளும் அச்சமில்லை தமிழ்மொழியை போற்றுவோம் தயக்கமு மில்லை. பிரகாசம் http://siragu.com/?p=19900
சீராட்டும் என் தமிழ் மொழி! – வேதா
அன்புப் பெற்றோர் ஆசையாய்க் குலவி என்பிலும் உறைய ஊற்றிய மொழி என் தமிழ் மொழி மனத்தில் தேன் பாய்ச்சும் தினம்தினமாய். திக்குத் தெரியாத காட்டிலும் மனம் பக்குப் பக்கென அடித்த போதும் பக்க பலமாய் மரக்கலமாய் நான் சிக்கெனப் பிடிக்கும் என் தமிழ் மொழி. பிற மொழிக் கடலில் நான் நிற பேதம், பல பேதத்தில் புரளும் திறனற்ற பொழுதிலும் என் தமிழ் பிறர் உதட்டில் தவழ்ந்தால் மனமுரமாகும். கைகாட்டி, நீர்த் தெப்பம், வாழ்வின் வழிகாட்டி என்று என்னை நிதம்; தாலாட்டி மகிழ்வில் நாளும்…
உயிர் நாவில் உருவான உலகமொழி – ஃகிசாலி
உயிர் நாவில் உருவான உலகமொழி நம் செம்மொழியான தமிழ் மொழியே மென்மையும் தொன்மையும் கலந்த தாய் மொழியே நீ தானே தனித்துத் தவழும் தூய மழலை தேன் மொழியே இலக்கணச் செம்மையில் வரம்பே இல்லா வாய் மொழியே மும்மைச் சங்கத்தில் முறை சாற்றும் இயற்கை மொழியே இலக்கணப் பொருளின் அணிச்சிறப்பாய் அளவெடுத்த செய்யுள் மொழியே நம் தாய் மொழியாம்! – ஃகிசாலி http://www.eegarai.net/t74296-topic
இசை, தமிழோடு இயைந்து கிடப்பதை இசைவாணர் மறந்தனர் – அண்ணா
இசை, தமிழோடு இணைபிரியாமல் இயைந்து கிடப்பதை இசைவாணர் மறந்தனர் இப்பொழுதுதான் தமிழ்க் கலையுணர்ச்சி, தமிழரிடம் புகுந்திருக்கிறது. பல வழிகளில் தமிழ்க் கலைகளை வளர்க்க முயன்று வருகின்றனர். இம்முயற்சியில் இசைக் கலை வளர்ச்சியும் ஒன்று. இசைக் கலை தமிழுக்குப் புதிதன்று. தமிழோடு பிறந்தது; தமிழோடு வளர்ந்து, இன்றும் தமிழோடு இணைபிரியாமல் இயைந்து கிடக்கின்றது. இவ்வுண்மையை இசைவாணர் மறந்தனர். ஆதலால் இடைக்காலத்தில் மழுங்கி விட்டது. பேரறிஞர் அண்ணா: தமிழரின் மறுமலர்ச்சி: பக்கம்.18-19
பிழைப்பு மொழிக்காய் உயிர்ப்பு மொழி துறப்பாயோ? – செந்தமிழினி பிரபாகரன்
உருச் சிதைந்த சிந்தனையில் தாய் மொழி தகர்த்து பிற மொழியால் முலாமிடும் செருக்கெடுத்த தருக்கருக்கு ஏதடா முகம்? முகமிழந்த முண்டங்கள் முகவரியும் தொலைத்த பின்னால் எதற்கடா வாழ்வு? ஏதடா வனப்பு? பிறப்பதில் பெறுவதல்ல இன அடையாளம்! பேறாய் பெற்ற தாய் மொழியே எம் முக அடையாளம்! மூத்த மொழி சரிந்து போக சொத்தை தமிழனாய் பார்த்திருப்பாயோ? தமிழன்னைக்கோர் துயர் என்றால் உனக்கென்று நினையாயோ? நேற்று வந்த மொழியெல்லாம் சேற்று வெள்ளமாய் அள்ளி செல்ல காற்றடித்தால் தொலைந்து போகும் துரும்போடா தமிழா நீ? பண்டைத் தமிழர்…
