பாடு சிட்டே பாடு ! பண் பாடு ! : காட்சி 29 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

காட்சி – 29 அங்கம்    :     ஆண்சிட்டு, பெண்சிட்டு இடம்      :     மரக்கிளை நிலைமை  :     (ஊடல் கூடல்) (சிட்டுகள் சின்ன சிரிப்பாலே சிறகால் அடித்து முகம் மலர்ந்து மெட்டுகள் போட்டு கீச் சீச் பண்பாடி ஆட்டம் போட்டுவிட) (கவிஞரும் அன்பும் கண்டதனைக் கண்களால் சிமிட்டிப் பேசியபின் புவியைப் பார்த்து மேல் நோக்கி புன்னகை வீசிய பொழுதினிலே)   (காட்சி முடிவு)  –  தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன்

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 28 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(அகரமுதல 82, வைகாசி 24, 2046 / சூன் 07, 2015 தொடர்ச்சி) காட்சி – 28 அங்கம்    :     அன்பரசன், கவிஞர் இடம்      :     குடிலின் முன்வாசல் நிலைமை  :     (ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு நினைவாய்க் கவிஞரின் உள்ளத்தைக் கக்கவே வைக்க இவ்வொரு காட்சியோ! இன்னும் தூண்ட அவிழ்த்தே விரித்தார்! பட்டப்பகலாய்) கவி  :     பார்த்தாயா தம்பி! பணம் பேசும் பேச்சை! சொல்லால் சொல்ல வழியும் உண்டா? அன் :     பரம்பரையாகக் கொள்ளயடித்தே வருவோரை நாம் தான் செய்வது என்ன? கவி  :    …

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 27 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

காட்சி – 27 அங்கம்    :     அருண்மொழி, பூங்குயில் இடம்      :     அருண்மொழி இல்லம் நிலைமை  :     (பூங்குயில் ஒப்பனை கண்டு அருண் தாங்கா இன்பம் அடைகின்றான்) அருண்    :     பணியாளும் வந்து பல நாழி ஆச்சு! அணியவே இன்னும் நாழிதான் என்ன? பூங்       :     முடியள்ளி முடிக்கும் போதுதான் வந்தான்! துடிப்பதும் ஏனோ? துரிதமே வருவேன்! அருண்    :     ஆகா! என்ன! தேவியே! தேவி! ஓகோ! விண்மீன் வானுடை கட்ட! எங்கும் இன்பம் பொழிகின்ற நிலவாய்! தங்கமுகத்தாலே பார்த்தென்னைச் சிரிக்க! தேவியே! கண்ணே!…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 26 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(வைகாசி 10, 2046, மே 24, 2015 தொடர்ச்சி) காட்சி – 26   அங்கம்    :     கவிஞர், அன்பரசன் இடம்      :     குடிலின் முன்வாசல் நிலைமை  :     (நகையைக் கண்டு நகைத்த கவிஞர் நகைக்கோர் வழியை உரைக்கின்றார்) கவி  :     தாலிக்குத் தவியாய் தவித்தே ஒருவன் பாவியாய் இங்கே வாழ்ந்திடும் போது! பல வேலிக்கு சொந்தக்காரனின் வீட்டில் குவிந்தே கிடக்கும் கொடுமையைப் பாரேன் அன் :     இந்நிலை எதனால் புலவீர்? விந்தையுமன்றோ? கேட்க! கவி  :     போர்முனை அறியா ஒருவர்! இங்கே! இராணுவ…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 23 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொடர்ச்சி) காட்சி – 23 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     மரக்கிளை நிலைமை  :     (பள்ளி செல்லும் பிள்ளைகள் பற்றி செல்லப்பேடு வினவுது இங்கே) ஆண்   :  என்னப்பேடே! பார்க்கின்றாய்? என்னவோ நாட்டில் நடந்ததுபோல்! பெண்   :  பெற்றோர் தவிக்கும் திங்களென கற்றோர் பலரோ சொல்கின்றார்! ஆண்   :  எங்கும் பள்ளி தொடங்குகின்ற திங்களன்றோ? இத்திங்கள்! பெண் :   வித்தகனாக்கத் தன் பிள்ளையை! அத்தனை துன்பமா? பெற்றோர்க்கு! ஆண்  …

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 22 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(சித்திரை 13, 2046 / ஏப்பிரல்26, 2015 தொடர்ச்சி) காட்சி – 22 அங்கம்    :     கவிஞர், அன்பரசன் இடம்      :     குடிலின் முன்வாசல் நிலைமை  :     (இன்றைய நாட்டு நிலையை நன்றே கவிஞர் செப்புகின்றார்) அன் :     கவிஞரே! கருத்துப் பெட்டகமே! புவியின் உண்மை நிலைதான் என்ன? கவி  :     இன்றைய நாட்டின் நிலைமைதனை நன்றே உரைக்கிறேன்! கேட்டு விடு! சிந்தனை எல்லாம் சோற்றிற்கே – நாளை செலவிட வேண்டும் இந்நாட்டில் – சோறு வெந்ததும் சோற்றுப் பந்திக்கே – நாம் முந்திட…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 21 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

  (சித்திரை 06, 2046 / ஏப்பிரல் 19, 2015 தொடர்ச்சி)   காட்சி – 21 (நாடகக்காட்சி – 7) அங்கம்    :     அருண்மொழி, பூங்குயில் இடம்      :     அருண்மொழி இல்லம் நிலைமை  :     (அருண்மொழி பாடலைக் கேட்ட பூங்குயில் அன்புக் கணவனை ஐயம் கொள்ள திருவளர்ச் செல்வனோ திருத்தியதோடு இன்பத்தைப் பொழியவும் செய்கிறான் ஆங்கே) அரு       :      பொழிபிறை நனி நெற்றி! தோழி!                                                                 எழில் இதழ் கனிக்கொவ்வை! தோழி! வழிகின்ற குழல் அருவி! தோழி! பொழிகின்ற வாய் அமுதம்! தோழி! விழி…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 20– ஆ.வெ.முல்லை நிலவழகன்

(பங்குனி 29, 2046 / ஏப்பிரல் 12, 2015 தொடர்ச்சி)   காட்சி – 20 அங்கம்    :     அன்பரசன், கவிஞர் இடம்      :     குடிலின் முன்வாசல் நிலைமை  :(நாடகக் காட்சி முடிவுபெற “காணோமே எனது பெண்ணைத்தான்” கேட்டது மகளிர் பகுதியிலே அழுகுரல் புலம்பலுமாகவே) காவலர் நிலைமையை சீர்செய்ய அமைதி அமைந்தது ஆங்கே பாவலர்சிறிதும் இவற்றையயெல்லாம் பார்க்காது! ஏதோ! நினைத்திருந்தார் அன்ப   :  மொழிவீர்! என்ன சிந்தனை? மொழியாதிருத்தல் நன்றில்லையே? கவி     :  விழி நீர் சொட்டக் கண்டதனை விளக்கமாய் எடுத்தே உரைக்கின்றேன்!…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 19– ஆ.வெ.முல்லை நிலவழகன்

 (பங்குனி 22, 2046 ஏப்பிரல் 05, 2015 தொடர்ச்சி)   காட்சி – 19   அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :      மரக்கிளை நிலைமை  :     (பேடும் சிட்டும் மனமொன்றி ஈடுபடல் நல் இன்பத்தில்) பெண் :     சீழ்க்கை ஒலியும்! கைத்தட்டலும் வானை முட்டுது! பார்த்தாயா? ஆண் :     வாழ்வில் காண இன்பத்தை வாழ்த்தொலி மூலம் கண்டுவிடும் ஒருவகைக் கூட்டமாய் இருக்கலாம்! என்றே ஆண்சிட்டு விடையிறுக்க (குறுநகை கொண்டு பேடையும் சிட்டின் கழுத்தை நீவியது)   (காட்சி…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 18– ஆ.வெ.முல்லை நிலவழகன்

(பங்குனி 15, 2045 / மார்ச்சு 29, 2015 தொடர்ச்சி)   காட்சி – 18 (நாடகக் காட்சி – 6) அங்கம்    :     அருண்மொழி, பூங்குயில் இடம்      :     பள்ளியறை நிலைமை  :     (கூடலிலே இன்பம் திளைத்த மனமோ தேடியே அதனை நினைக்கச் செய்ய இன்ப நினைவினை அசையாய்ப் போட்டு மென்று உதிர்க்கிறான் வெளியில் அதனை அருண்    :      வெள்ளி ஒளிக் கிண்ணத்திலே பாலின் சுவையிருக்க! கள்ளியவள் கன்னத்திலே கனியின் சாறிருக்க! மதியென வந்தாள்! மதியே நானென்று! சதிரென மொழிந்தாள் சதிரே…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 17– ஆ.வெ.முல்லை நிலவழகன்

(பங்குனி 8, 2045 / மார்ச்சு 22, 2015 தொடர்ச்சி)   காட்சி – 17 அங்கம்      :      ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்       :      குருவிக்கூடு நிலைமை   : (தேர்தல் பற்றிய கருத்துரையைப் பேடைக்கு    நேர்பட சிட்டு உரைக்கின்றது!) ஆண் :      சின்னப்பேடே! சிரிப்பென்ன?                                                                                                            என்ன! கொஞ்சம் சொல்லிவிடேன் பெண் :      தேர்தல் தேர்தல் எனப் பலரோ                     வேர்வை வடியப் படித்திட்டார்!                      சோர்வே எதுவும் இல்லாது                       கூர்மையாய் சுவரில் எழுதிட்டார்!            …