kuruvigal

(அகரமுதல 82, வைகாசி 24, 2046 / சூன் 07, 2015 தொடர்ச்சி)

காட்சி – 28

அங்கம்    :     அன்பரசன், கவிஞர்

இடம்      :     குடிலின் முன்வாசல்

நிலைமை  :     (ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு நினைவாய்க்

கவிஞரின் உள்ளத்தைக் கக்கவே வைக்க

இவ்வொரு காட்சியோ! இன்னும் தூண்ட

அவிழ்த்தே விரித்தார்! பட்டப்பகலாய்)

கவி  :     பார்த்தாயா தம்பி! பணம் பேசும் பேச்சை!

சொல்லால் சொல்ல வழியும் உண்டா?

அன் :     பரம்பரையாகக் கொள்ளயடித்தே

வருவோரை நாம் தான் செய்வது என்ன?

கவி  :     திருடனாய்ப் பார்த்து திருந்திட வேண்டும்; கயவர்

திருந்தாதபோது திருத்திட வேண்டும்! எந்த

நீதி நூல் பலவும் நெறிநூல் பலவும்! சந்து

வீதிகள் பலவாய்த்! தொண்டர்கள் பலராய்! இங்கு

ஆயிரமாயிரம் தோன்றினால் கூட! பழைய

பாயிரம்போலப் பயனற்றுப் போகும்!

 

(காட்சி முடிவு)

(பாடும்)

– ஆ.வெ.முல்லை நிலவழகன்

mullainilavazhakan