இலக்குவனார் போலே இன்னொருவர் இதுவரையில் இல்லை – பாவரசு முனைவர் வதிலை பிரதாபன்
இலக்குவனார் போலே இன்னொருவர் இதுவரையில் இல்லை அன்னைத்தமிழ் அரும்புதல்வர் அவனிதனில் நிறைந்திருக்க திண்ணைதனில் காத்திருந்து தன்வழியென வீற்றிராது உணர்வுடைத்த உளத்தோடு உயிரெனவே உரமூட்டும் தமிழினமே தரணியிலே தகைமையெனச் சான்றுடைத்து ஆக்கமும் ஊக்கமுமாய் ஆண்டாண்டு ஒளிர்ந்திட்ட அன்பறமும் அறிவொளியும் அமைந்தநல் தொன்மையாய் சிந்தைகுளிர் சொல்லுடைத்து செவ்விதழில் சிறப்புடைத்த வண்டமிழின் வாழ்விற்கு வளமுடைத்து காத்திடவே மொழிகளது வரிசையிலே முக்கனிகள் தோற்றோட தென்றலது மென்மையிலே புயல்கூட வெட்கமுற ஆழ்மனத்துச் சிந்தையிலே ஆக்கமுற நிறைந்தவளாய் அறிவார்ந்த இனத்தோரின் அகங்குளிர வேண்டுமென உளமார்ந்த உழைப்பாலே உரமிட்டுத் தமிழ்காத்த தகைமைசார் தமிழரிடை தானுமுண் டெனக்கூறும் நிலைதனையே…
