நாட்டிய நங்கையர் அறிவதற்கெனச் சிறந்து விளங்கிய கலைகளில் சில

  வேத்தியல், பொதுவியல் என்றிரு திறத்துக் கூத்தும், பாராட்டும், தூக்கும், துணிவும், பண்ணியழ்க் கரணமும், பாடைப் பாடலும், தண்ணுமைக் கருவியும், தாழ்தீங் குழலும், கந்துக் கருத்தும்,மடைநூற் செய்தியும், சுந்தரச் சுண்ணமும், தூநீ ராடலும் பாயற் பள்ளியும், பருவத்து ஒழுக்கமும், காயக் கரணமும், கண்ணியது உணர்தலும் கட்டுரை வகையும், கரந்துறை கணக்கும், வட்டிகைச் செய்தியும், மலராய்ந்து தொடுத்தலும், கோலம் கோடலும், கோவையின் கோப்பும் காலக் கணிதமும், கலைகளின் துணிவும், நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும் கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை…

தொடர்சொற்பொழிவு : மணிமேகலை நிறைவும் பெரியபுராணம் தொடக்கமும்

  வேனில் விழா வாணாள் உறுப்பினர் அட்டை வழங்கல் விருது வழங்கல் சித்திரை 27, 2016 / மே 10, 2015 சென்னை (தலைநகர்த் தமிழ்ச்சங்க வளாகம்)

காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 50 – 82

  (வைகாசி 18, 2045 / 01 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) 50. கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை – சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை,      பதிகம் 24-25   51.  மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனனென் –  சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை, பதிகம்  97-98     52. தென்தமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய் – சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை, ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்தகாதை, 139   53. தண்தமிழ் வினைஞர் தம்மொடு கூடிக் கொண்டுஇனிது…

மொழித் தொண்டர்கள்: சீத்தலைச் சாத்தனார் – -புலவர்மணி இரா. இளங்குமரன்

  இறைவன் அடியார்களுள் வன்தொண்டர் உளர்; மென் தொண்டரும் உளர். வன் தொண்டர் எனப் பெயர் பெற்றார் சுந்தர மூர்த்தி நாயனார். அவர் வன் தொண்டருக்குச் சான்றானார்! மணிவாசகரும் இராமலிங்கரும் மென்தொண்டருக்குச் சான்றாளர்கள். மொழித் தொண்டர்களினும் இவ்வாறு வன் தொண்டரும் உளர்; மென் தொண்டரும் உளர். மொழிப் பிழை செய்தாரைத் தலையில் குட்டிய பிள்ளைப் பாண்டியனும் காதைக் குடைந்து, அறுத்த வில்லியும்வன் தொண்டர்கள். சாத்தனாரோ மென் தொண்டர். மொழிக்குறை செய்தாரின் நிலைக்கு இரங்கி நொந்து தம் தலையில் எழுத்தாணியால் இடித்துக் கொண்டார் அல்லவா! கெய்சர்…