பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 10 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 09 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 10. முயற்சியால் துன்பம் வென்று இன்பம் காண்க! பணத்தினைப் பெருக்கி வாழ்வில் உயர என்ன செய்ய வேண்டும்? கல்வியறிவும், தொழில் ஈடுபாடும் இருந்தால் மட்டும் போதுமா? “நல்லன எண்ண வேண்டும்”, “எண்ணிய முடிய சோம்பலை நீக்க வேண்டும்”, முயற்சி வேண்டும்; காலம் அறிந்து செயல்பட வேண்டும்; முடியும் மட்டும் வினையாற்ற வேண்டும் அல்லவா? இவற்றைப் பல பாடல்கள் வழி வலியுறுத்துபவர்தானே பாரதியார்! “எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும்…
திருக்குறள் அறுசொல் உரை – 067. வினைத் திட்பம் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 066. வினைத் தூய்மை தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 067. வினைத் திட்பம் செயல்வெற்றிக்கு மிகவும் தேவையான செயல்உறுதி மேலாண்மைத் திறன்இயல் வினைத்திட்பம் என்ப(து), ஒருவன் மனத்திட்பம்; மற்றய எல்லாம் பிற. செயல்உறுதி என்பது மனஉறுதி; மற்றவை, எல்லாம் வேறு. ஊ(று)ஒரால், உற்றபின் ஒல்காமை, இவ்இரண்டின் ஆ(று)என்பர் ஆய்ந்தவர் கோள். வரும்முன் காத்தலும், வந்தபின் தளராமையும் ஆய்வாளர் கொள்கை. கடைக்கொட்கச், செய்தக்க(து) ஆண்மை; இடைக்கொட்கின்,…
