யாதும் ஊரே யாவரும் கேளிர் 3/8 – கருமலைத்தமிழாழன்
(யாதும் ஊரே யாவரும் கேளிர் 2/8 – தொடர்ச்சி) யாதும் ஊரே யாவரும் கேளிர் 3/8 அவையோர் வணக்கம் மாநாட்டை அமைத்தளித்த முத்துசிதம்பர சான்றோரை மாநாட்டில் பங்கேற்ற மாத்தமிழ் பேராளர் மன்றில் கவிபாடும் கவிஞர்கள் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன் கவியரங்கக் கவிதை ஈரமண்ணாய் மனம்கசிந்து வீட்டுப் பக்கம் இருப்போரின் துயரினிலும் பங்கு கொண்டு வேரடியாய் அன்புதனில் கிளைய ணைத்து வெறுப்பின்றிக் கூட்டமாக ஒன்றி ணைந்து தூரத்தே அடிபட்டு வீழ்ந்த வர்க்கும் துடிதுடித்தே ஓடிப்போய் உதவி செய்தும் பாரத்தைப் பிறருக்காய் சுமந்து நின்ற…