பொறியியல் கல்வியைப் பரவலாக்கிய முன்னோடி சேப்பியார் காலமானார்!  சத்தியபாமா பல்கலைக்கழக வேந்தரும் பல கல்வி நிறுவனங்களின்  நிறுவனரும் வணிக நிறுவனங்களின் உரிமையாளருமான  சேப்பியார் என அறியப்பெறும் ஏசுஅடிமைபங்கிஇராசு உடல் நலக்குறைவால் ஆனி 04, 2047 / சூன் 18, 2016 சனி இரவு காலமானார்.   கல்விநிலையங்கள் வணிக நிறுவனங்களாக மாறிய அவலத் தொடக்தக்திற்குக் காரணமாக இருந்தாலும் ஏழை எளிய குடும்பங்களிலிருந்தும் பொறியாளர்கள்  உருவாவதற்கு  இவரே முதற் காரணம்.  புனிதர் சோசப்பு பொறியியல் கல்லூரி,  சேப்பியார் பொறியியல் கல்லூரி, பனிமலர் பொறியியல் கல்லூரி, சத்யபாமா…