பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை? – மறைமலை இலக்குவனார், தினத்தந்தி
பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை? 2018-ஆம் ஆண்டு பிறந்தது முதல் அடுக்கடுக்காகப் பெண்கள் படும் துன்பங்களைக் காணும்போது, “பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை?” என்னும் கேள்வியே மனத்தில் எழுகின்றது. பாலியல் வன்முறை, வரதட்சணைக் கொடுமை, காதலராலும் கணவராலும் கொடுமை, படுகொலை, நாத்தனார், மாமியார் கொடுமைக்கு ஒரு படி மேலாகப் பெற்ற மகனாலே கொலை செய்யப்படும் கொடூரம், பணம் கேட்டு மிரட்டும் பேரனால் சாவு, காவல்துறைக் கெடுபிடியால் சித்திரவதை, அலுவலகத்தில் அவமானம், சக ஊழியரால் துன்பம் என்று எண்ணற்ற சோதனைகள் பெண்களை நிம்மதியாக…
மறைமலை இலக்குவனார் நூல்கள் அறிமுக விழா – படங்கள்
செம்மொழிச்சுடர், In Defense of Classical Tamil என்னும் முனைவர் மறைமலை இலக்குவனார் நூல்கள் அறிமுக விழா சென்னை கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் ‘செவ்வாய்தோறும் செந்தமிழ்’ என்னும் ்தலைப்பில் இவ்வாண்டிற்கான முதல் இலக்கியக் கூட்டம் மார்கழி 18,2048 செவ்வாய் சனவரி 02,2018 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனாரின் செம்மொழிச்சுடர், In Defense of Classical Tamil ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா நடைபெற்றது. சிவலாயம் செ.மோகன் தலைமையில் நீதிபதி இரா.சுரேசுகுமார், தேர்ந்த இலக்கியவாதி போல் சிறப்பாக அறிமுக உரை யாற்றினார்….
உறக்கம் வருமோ? சொல்வீர்! – மறைமலை இலக்குவனார்
உறக்கம் வருமோ? சொல்வீர்! எரிக்கும் வறுமைத் துயர் தாளாமல் எரியில் மூழ்கிச் சாகத் துடிக்கும் தமிழ்க்குடி மக்களின் அவலம் ஒருபுறம்; கல்வி பயின்றிடப் பொருளைத் தேடிக் கழுத்தை நெரித்திடும் வங்கிக் கடனால் அல்லலுற்றிடும் மாணவர் ஒருபுறம்; விரும்பிய கல்வியை வேண்டிப் பெற்றிட வழியில்லாமல் வாடி வதங்கித் தற்கொலைக் குழியில் அமிழ்ந்து அழிந்திடும் பச்சிளங் குருத்துகள் படுதுயர் ஒருபுறம்; வாடிய பயிரைக் கண்டது,ம் வருந்திச் சாவூர் சென்றிடும் உழவர் ஒருபுறம்;; வேலை தேடியே சாலையில் நின்றிடும் இளைஞர் துன்ப ஓலம் ஒருபுறம்; துயருறும் மக்கள்…
நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 2/2 – சந்தர் சுப்பிரமணியன்
(நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 தொடர்ச்சி) நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 2/2 11)? இன்றைய அவசரகதி உலகில் சிற்றிதழ்களுக்கு – பொதுவாக இதழ்களுக்கு வாசகர்கள் உள்ளார்களா? அல்லது குறைந்து வருகிறதா? வாசகர்களின் ஆர்வம் குறைந்துள்ளது என்று சொல்லவியலாது ஏனெனில், ஆனந்த விகடன் போன்ற பதிப்பகங்கள், வெகுவாக அறியப்படாத எழுத்தாளர்களின் நூல்களைக்கூட பத்தாயிரம் படிகளுக்கு மேல் பதிப்பிடுகின்றன. ஆனால் வாசகர்கள் எதை விரும்பிப் படிக்கிறார்கள் என்பதே கேள்விக்குரியது. ஊன்றிக்கற்க வேண்டிய இலக்கியங்களைக் கற்காமல்,…
நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 – சந்தர் சுப்பிரமணியன்
நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 பெரும்பேராசிரியர் திரு இலக்குவனார் அவர்களின் புதல்வர் பேராசிரியர் திரு மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு, அண்மையில் தமிழக அரசு திரு.வி.க. விருது வழங்கிச் சிறப்பித்தது. பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களுடன் இலக்கியவேல் ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட காணல். 1.? அண்மையில் தமிழக அரசால் திரு.வி.க. விருது உங்களுக்கு வழங்கப்பட்டது. என் சார்பிலும் இலக்கியவேல் வாசகர்கள் சார்பிலும் வாழ்த்துகள். அது குறித்து நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா? அரசு பல்வேறான விருதுகளை…
வாழிய பெரும! வண்டமிழ் போன்றே! – இளங்குமரனார்க்கு வாழ்த்து : மறைமலை இலக்குவனார்
வாழிய பெரும! வண்டமிழ் போன்றே! அகவை தொண்ணூறு நிறைந்த ஆசான் இளங்குமரனார்க்கு அகங்கனிந்த வாழ்த்து வாழிய பெரும! வண்டமிழ் போன்றே! புலவர்மணி,முதுமுனைவர் இளங்குமரனார்க்கு வாழ்த்து (பிறந்த நாள் தை 17, 1958 / சனவரி 30, 1927) பளிங்கெனத் துளங்கிடும் பண்புசால் உள்ளம்; உளங்கவர் முறுவல் விளங்கிடும் திருமுகம்; தமிழ்நலன் காத்தல் தம்கடன் என்றே தளரா துழைத்திடும் தறுகண் உறைவிடம்; மறைமலை யார்போல் நிறைவுறு புலமை; பாவாணர் நெறியில் ஓய்விலா ஆய்வு; இலக்குவர் வழியில் இயங்கிடும் தமிழ்மறம்; இனம்,மொழி பேணிட இன்றமிழ் மக்களை…
தமிழ்த்தாய்க்கு யார் ஆறுதல் சொல்வது? – மறைமலை இலக்குவனார்
தமிழ்த்தாய்க்கு யார் ஆறுதல் சொல்வது? தமிழ்ச்சொற்களெல்லாம் தேம்பித்தேம்பி அழுகின்றன. சொற்களுக்கும் பொருள்களுக்கும் சோடிப்பொருத்தம் பார்த்துச் சோடித்துவைத்த கவிஞர் மறைந்துவிட்டார். அவர் உருவாக்கிய கவிதைகளெல்லாமே காமதேனுக்கள். கேட்ட பொருளும் கேட்காத பொருளும் நினைக்கும் பொருளும் நினைக்காத பொருளும் வாரிவாரி வழங்கும் வள்ளற்பசுக்களாக அவர் படைத்த கவிதைகள் வரலாறு படைத்துக்கொண்டிருக்கின்றன. அந்தப் படிமச்சிற்பியின் படிமப்பட்டறை இழுத்து மூடப்பட்டுவிட்டதே! உயிர்த்துடிப்பு மிக்க படிமச்சிற்பங்களைப் படைத்து உலகெல்லாம் உலாவரச்செய்த அவருடைய ஆற்றலைக்கண்டு தேவலோகத்து மயன் தற்கொலை செய்த கதை பழங்கதை. அவர் மேடையேறிய கவியரங்குகளெல்லாமே இலக்கிய…
உள்ளமெல்லாம் தமிழுணர்வு பொங்கச் செய்யும் உயரியநூல் திருத்தமிழ்ப்பாவை – மறைமலை இலக்குவனார் அணிந்துரை
உள்ளமெல்லாம் தமிழுணர்வு பொங்கச் செய்யும் உயரியநூல் திருத்தமிழ்ப்பாவை – அணிந்துரை வெல்க தமிழ்! பாவலர் வேணு.குணசேகரன் அவர்கள் இயற்றிய ‘திருத்தமிழ்ப்பாவை’ உங்கள் கைகளில் தவழ்கிறது. திருமாலைத் தொழுது ஏத்தும் இறைபடியார்க்குத் ‘திருப்பாவை’ எத்துணைச் சிறப்பு வாய்ந்ததோ, சிவபெருமானை வழுத்தும் இறையன்பர்க்குத் ‘திருவெம்பாவை’ எவ்வளவு சிறப்பு மிக்கதோ, அவ்வளவு சிறப்பும் சீர்மையும் கொண்டதாகத் தமிழன்பர் அனைவரும் கொண்டாட வேண்டிய நூல் இந்தத் ’திருத்தமிழ்ப்பாவை’ என்பதனை இந்நூல் கற்று முடிந்தவுடன் நீங்கள் உணர்வீர்கள். இன்றைய காலச்சூழல் ஒரு விந்தையான சூழல் என்பதனைத்…
பாட்டின் இயல்பு என்ன? 2 /3 – மறைமலையடிகள்
(பாட்டின் இயல்பு என்ன? 1/3 தொடர்ச்சி) பாட்டின் இயல்பு என்ன? 2/3 சுருங்கச் சொல்லுங்கால் எங்கெல்லாம் நமதுணர்வைக் கவர்கின்ற பேரழகு உலக இயற்கையிற் காணப்படுமோ அங்கெல்லாம் பாட்டு உண்டென்பது தெளியப்படும். ஆயினும், ஒரு நல்லிசைப் புலவனால் இயற்றப்படுகின்ற பாட்டுப்போல அது நூலினிடத்தே காணப்படுவதில்லையே யெனின்; நன்கு வினாயினாய், ஒரு நூலின்கண் எழுதப்பட்டு, உலக இயற்கையின் அழகை நமதுள்ளத்திற் தோன்றக் காட்டி நமக்கு உவப்புணர்வு பயக்குஞ் சொல்லின் தொகுதியான பாட்டு நூலின்கண் எழுதப்படுகின்ற வடிவுடைய பருப்பொருளாகும்; உலக இயற்கையின் அழகோடு ஒருங்கொத்து நின்று, கண்…
பாட்டின் இயல்பு என்ன? 1/3 – மறைமலையடிகள்
பாட்டின் இயல்பு என்ன? 1/3 முல்லைப்பாட்டு என்பதைப் பற்றித் தெரிய வேண்டுவன எல்லாம் ஆராயும்முன், பாட்டு என்பது எத்தகையது? என்று ஆராய்ந்து அறிந்து கொள்ளல் வேண்டும். பின்றைக் காலத்துத் தமிழ்ப் புலவர் பாட்டென்பது இன்னதென்றே அறியாராய்ப் புதுப்புது முறையாற் சொற்களைக் கோத்துப் பொருள் ஆழமின்றிச் செய்யுள் இயற்றுகின்றார். பண்டைக் காலத்துத் தண்டமிழ்ப் புலவரோ பாட்டு என்பதன் இயல்பை நன்கறிந்து நலமுடைய செய்யுட்கள் பலப்பல இயற்றினார். இங்ஙனம் முற்காலத்தாராற் செய்யப்பட்ட பாட்டின் இயல்பொடு மாறுபட்டுப் பிற்காலத்தார் உண்மை பிறழ்ந்து பாடிய செய்யுட்களைக் கண்டு மாணாக்கர்…
தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 3/3 – மறைமலை இலக்குவனார்
(தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3 தொடர்ச்சி) தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 3/3 தி.மு.க.ஆட்சிப் பொறுப்பேற்றது, அரசு இலச்சினையில் விளங்கும் ‘சத்ய மேவ சயதே’ என்னும் இந்தித்தொடரை உடனே அகற்றி “வாய்மையே வெல்லும்” என்னும் தொடரை அறிமுகப்படுத்துமாறு அறிவுறுத்தியவர் இலக்குவனாரே. சத்தியம் என்பதனை உண்மை என்றே மொழியாக்கம் செய்திருக்கவேண்டும் எனச் சிலர் குறிப்பிட்டனர். ஆனால் மூதறிஞர் இராசாசி ‘வாய்மை’என்பதே பொருந்தும் எனக் கூறினார். தி.மு.க.ஆட்சிப் பொறுப்பேற்று விட்டதால் உடனே அனைத்துக் கல்விநிறுவனங்களிலும் தமிழையே பயிற்சிமொழியாக ஆக்கவேண்டும் என இலக்குவனார் வலியுறுத்திய…
தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3 – மறைமலை இலக்குவனார்
(தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 1/3 தொடர்ச்சி) தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3 1933-ஆம் ஆண்டில் திருவையாறு அரசர் கல்லூரிப் புலவர் மாணாக்கராக இருந்தபோதே ‘எழிலரசி’என்னும் குறுங்காப்பியத்தை இயற்றி வெளியிட்டார் இலக்குவனார். 1930களில் புரட்சிக்கவிஞர் படைத்த கவிதைகளிலும் குறுங்காப்பியங்களிலும் வடமொழியின் வாடை தூக்கலாக இருந்தது. ஆனால் இலக்குவனாரின் “கதைபொதி பாட்டு” முற்றும் தனித்தமிழாலேயே இயன்றது. 1936-இல் தஞ்சை நாட்டாண்மைக் கழகப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியேற்ற இலக்குவனார் தாம் பணியாற்றிய பள்ளிகளிலெல்லாம் தொல்காப்பியர் விழா, திருவள்ளுவர் விழா, இளங்கோவடிகள் விழா, ஔவையார்…