பணம் செல்லாமை : இன்னலுக்கு ஆளாக்கப்படுபவர்களையே பொன்மாலை சூட்டச்செய்யும் நரேந்திரர்(மோடி) 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்

[பணம் செல்லாமை : இன்னலுக்கு ஆளாக்கப்படுபவர்களையே பொன்மாலை சூட்டச்செய்யும் நரேந்திரர்(மோடி) 1/2 தொடர்ச்சி] பணம் செல்லாமை : இன்னலுக்கு ஆளாக்கப்படுபவர்களையே பொன்மாலை சூட்டச்செய்யும் நரேந்திரர்(மோடி) 2/2   சுவிசு நாட்டு வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் இருந்து  72,80,000 கோடிஉரூபாய்  மதிப்பிலான தாலர் பணம்  அந்நாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதது.   இந்தியாவிலிருந்து மொரிசியசு முதலான நாடுகளுக்குக்கருப்புப்பணம் சென்று வெள்ளைப்பணமாக  மீண்டும் இந்திய  முதலீடாக மாறுகிறது என்றும் பொருளியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்   நைசீரியா, கானா, பாக்கித்தான், சிம்பாவே, வடகொரியா, சோவியத்து ஒன்றியம்,…

அரசின் கல்விக்கொள்கை இலெனின்கள் உயிர்களைப் பறிக்கின்றது! உள்ளம் தவிக்கின்றது! -இலக்குவனார் திருவள்ளுவன்

அரசின் கல்விக்கொள்கை இலெனின்கள் உயிர்களைப் பறிக்கின்றது! உள்ளம் தவிக்கின்றது!   அனைவருக்கும் கல்வி தருவது  அரசின்  கடமை. ஆனால், கல்வி வணிகமயமாக்கப்பட்டதால் கற்போர் பெரும்பாடு படவேண்டியுள்ளது. பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப் பாரை உயர்த்திட வேண்டும் என்கிறார் பாரதியார். ஆனால் பாரை உயர்த்துவதாகக் கூறும் அரசாங்கங்கள், கட்டணமில்லாக் கல்வியைத் தர மறுக்கின்றனவே! கல்லா ஒருவரைக் காணின்  கல்வி நல்காக் கசடர்க்குத்  தூக்குமரம் அங்கே உண்டாம்  எனக் கனவு கண்டார் பாரதிதாசன். ஆனால், கல்வியை வணிகக் கொள்ளையரிடம் ஒப்படைத்துவிட்டுக், கற்பவர்க்குத் தூக்குமரத்தைக் காட்டுகின்றனரே!…