மூதாளர் – இலக்குவனார் திருவள்ளுவன்   மூதாய், மூதாளர், மூதாளரேம், மூதாளன், மூதிலாளர், மூதிலாளன், மூதிற்பெண்டிர், மூதின் மகளிர், முதலான சொற்கள் மூலம் புலவர்கள் மூத்தோரைக் குறிப்பிடுகின்றனர். இவற்றுள், மூதாளன், மூதாளர் என வரும் இடங்கள் வருமாறு : நரைமூ தாளர் நாயிடக் குழிந்த (மருதன் இளநாகனார் : புறநானூறு : 52.14) நரைமூ தாளர் கைபிணி விடுத்து (அகநானூறு :366.10) பெருமூ தாளர் ஏமஞ் சூழப் (முல்லைப்பாட்டு : 54) முழு(து)உணர்ந்(து) ஒழுக்கும் நரைமூ தாளனை (பதிற்றுப்பத்து: 76.24) இவற்றின் அடிப்படையில்,…