(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.23. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 24. நன்றி யறிதல் நன்றியென் பதுபிறர் நல்கிடு முதவி. மற்றவர்கள் நமக்குச் செய்தவையை நினைவு கூர்தலே நன்றி ஆகும். உறவினர் முதலியோ ருதவுதல் கடனே. உறவினர் முதலியவர்களுக்கு உதவுதல் நம் கடமை ஆகும். பிறர்செயு முதவியிற் பெரிதொன் றின்றே. பிறர் நமக்குச் செய்யும் உதவியைவிட பெரியது ஒன்றுமில்லை. உதவியிற் சிறந்த துற்றுழி யுதவல். துன்பம் ஏற்பட்ட சமயத்தில் செய்யப்படும் உதவியே சிறந்த உதவி ஆகும். உயர்ந்தது கைம்மா றுகருதா துதவல். உதவியில் உயர்ந்தது பதிலுக்கு…