so.padmanaban02

அருவினை ஏதுமில்லை

அசைவிலா ஊக்கம் பெற்றால்

திருவினை யாய்முடியும்

திருக்குறள் நூல் கற்றால்!

– அருவினை

விதிசதி எல்லாம்சாயும்

மதிவழி நாம்உழைத்தால்

கதிஎன வள்ளுவத்தைக்

கருத்தினில் நாம்பதித்தால்!

– அருவினை

பிரிவினை உணர்வகற்று

உறவினை வளர்ப்பதற்கே

நிறப்பகை தனையகற்று

அறப்பகை செழிப்பதற்கே!

உதிக்கின்ற செங்கதிர்போல்

உலகிற்கே ஒளியூட்டும்

நதிநீரைப்போல் நடந்து

நமக்கெல்லாம் பயன்கூட்டும்!

– அருவினை

உருவத்தில் அறிவுமில்லை

உயரத்தில் உயர்வுமில்லை

பருவத்தில் பூப்பதெல்லாம்

பயன்தரும் என்பதில்லை!

சிரிப்பதும் அழுவதுவும்

செயற்கையா? இயற்கையன்றோ!

பிறக்கிறோம் பெண்வயிற்றில்

பிறகிங்கு வேற்றுமை ஏன்?

– அருவினை

thirukkural_padam03-திருக்குறள் கவிஞர் சொ.பத்மநாபன்

98408 43981