(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1211-1220) தொடர்ச்சி)


ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!

(திருவள்ளுவர், திருக்குறள்,)

காமத்துப்பால்
அதிகாரம் 123. பொழுதுகண்டு இரங்கல்

 

  1. மாலை, பிரிந்தார் உயிர் பறிக்கும் வேல். (1221)
  2. மாலைப்பொழுதின் துணைவரும் என் தலைவர் போல் கொடியவரோ?(1222)
  3. பிரிவால் வாடும் என்னைப் பனியால் வாட்டுகிறதே மாலை! (1223)
  4. காதலர் இல்லாதபொழுது கொலையாளிபோல் வருகிறதே மாலை! (1224)
  5. காலைக்குச் செய்த நன்மை என்ன? மாலைக்கு இழைத்த தீங்கு என்ன? (1225)
  6. மாலை கொடியது என்பதை மணந்தவர் பிரியாக்காலை அறியவில்லை. (1226)
  7. வேளைதோறும் அரும்பி, மொட்டாகி மாலை மலரும் காதல்நோய் (1227)
  8. குழலிசையும் மாலையைக் கொல்லும் படையாகும். (1228)
  9. அறிவை மயக்கும் மாலை, ஊரையும் மயக்குமோ? (1229)
  10. பொருள்தேடிப் பிரிந்தவருக்காக மாயா உயிர் மாய்கிறதே.(1230)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தாெடரும்)