தலைப்பு-பொய்தீர்ஒழுக்கம்-தி.வே.விசயலட்சுமி ; thalaippu_neritrhandhaay_vahzi_thi.ve.visayalatchumi

பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி!

  1. பொய்தீர் ஒழுக்க நெறிபுகன்ற வள்ளுவனார்

செய்தார் குறள்நூல் செறிந்து.

 

  1. குற்றமிலா வாழ்நெறியைக் கூறும் குறள்நூலைப்

பற்றியே வாழ்வோம் பணிந்து.

 

  1. எம்மொழிக்கும் இல்லாத ஏற்றமிகு இன்குறளால்

செம்மொழிக்குச் சேரும் சிறப்பு.

 

  1. வேதத்தின் வித்தாய் விளங்கும் குறளமுதின்

நீதியை நெஞ்சே நினை.

 

  1. வள்ளுவர் உண்மையை விள்ளுவர் பொய்ம்மையைத்

தள்ளுவர் சீர்அள் ளுவர்.

 

தி.வே.விசயலட்சுமி : thi.ve.visayalatchumi

-புலவர் தி.வே.விசயலட்சுமி

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6 – 10)