தலைப்பு-உலகாள்வோம் உயிர்த்தமிழால் - thalaippu_ulagaalvoamthamizhaal

 

உலகாள்வோம் உயிர்த்    தமிழால்!

 

         பாரெங்கும் நிலைத்திட்ட பொங்குதமிழ் -அன்று

சங்கம்பல கண்டிட்ட மதுரத்தமிழ்

அகத்துடன் புறம்தந்த தீந்தமிழ் -என்றும்

அணியாக நிலைத்திட்ட பைந்தமிழ்

இன்பமுடன் நாம் தமிழைப் படித்திட்டால் -இனி

உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே !

 

         காவியம்பல தந்திட்ட முத்தமிழ் -நமக்குள்

கவிகள்பல புகுத்திட்ட பூந்தமிழ்

கவிபாட  இனித்திட்ட தேன்தமிழ் -நம்மையெல்லாம்

கவிஞனாய் இங்குப் பாடவைத்த அருந்தமிழ்

இன்பமுடன் நாம் தமிழைப் படித்திட்டால் -இனி

உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே !


   தமிழ்த்தாயைத் தாலாட்டும்  பத்துப்பாட்டு-எங்கும்

தமிழ்மொழியை வளர்க்கின்ற  எட்டுத்தொகை

தமிழ்த்தாய்க்குப் புகழ்சேர்க்கும் பதினெண்கீழ்க்கணக்கு-நித்தம்

தமிழ்மொழியும் வளர்கிறது குறுந்தொகையால்!

இன்பமுடன் நாம் தமிழைப் படித்திட்டால்-இனி

உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே !


இவ்வுலகம் போற்று  மின்னாநாற்பது-தமிழ்

இன்பத்தேனாய் இனிக்கிறது  இனியவைநாற்பதால்

ஏற்றம்பெற்றாள்  தமிழ்த்தாயும் ஏழுசீரால் -குறளுடன்

எட்டாவது  அதிசயமே  தமிழில்தானே!

இன்பமுடன் நாம் தமிழைப் படித்திட்டால்-இனி

உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே !

 

  – குறள்நதி

திருவேற்காடு

பேசி 9941648450

தரவு : முதுவை இதயத்து