தோழர் நல்லகண்ணு(மார்கழி 12, 1956 / திசம்பர் 36, 1925)
தோழர் நல்லகண்ணு(மார்கழி 12, 1956 / திசம்பர் 26, 1925)

செந்தோழர் நல்லகண்ணு நீடுவாழ்க!

செங்கொடித் தோழர் நல்ல கண்ணு
சிந்தனை ஆற்றல் உள்ளவராம் – அவர்
செங்களம் ஆடிடச் சிறிதும் தயங்கார்
செழுமை நெஞ்ச
நல்லவராம்.

உழைக்கும் மக்கள் உள்ளம் எல்லாம்
உணர்வில் கலந்த உழைப்பாளி – அவர்
அழைத்தால் எதற்கும் அணிய மாவார்
அவரே ஏழைப்
பங்காளி.

அரசியல் என்பதை ஆக்க முள்ள
அறிவு வழிக்குச் சென்றவராம் – போர்
முரசம் போல மூச்சும் பேச்சும்
முயன்றே இங்கே
அடிப்பவராம்.

நெடிய உருவம் நிமிர்ந்த பார்வை
நேர்மை உள்ளம் கொண்டவராம் – தமிழ்க்
குடியில் பிறந்து கொற்றம் ஆளும்
தகுதி எல்லாம்
பெற்றவராம்.

மக்கம் நலனே மனத்தில் என்றும்
மதியோ டவரும் நினைத்திடுவார் – உழைக்கும்
மக்கள் நெஞ்சின் துடிப்பாய் என்றும்
துடிதுடித்தே
வாழ்ந்திடுவார்.

நேர்மை வாய்மை தூய்மை ஏழ்மை
அரசியல் வாழ்வில் கொண்டவராம் – ஆணி
வேர்போல் வேர்வைக் குலத்தைக் காக்கும்
விழுதிடும் ஆல்போல
நின்றவராம்.

புதுவைத் தமிழ்நெஞ்சன்
(புதுவைத்தமிழ்நெஞ்சன்)

(புதுவைத்தமிழ்நெஞ்சன்)