திருக்குறள் சுட்டும் தீமைகள்

  முன்னுரை

     உலகப் பொதுமறையான திருக்குறள் ஏறத்தாழ 2000 வருடங்களுக்கு முன்பு தெய்வப் புலவரான திருவள்ளுவரால் எழுதப்பட்டது என்பது தமிழர்களான நமக்குத் தெரியும். அதே திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அவ்வதிகாரங்களில் மொத்தம் 3 அதிகாரங்கள் தீமையான குற்றச் செயல்கள் ஒட்டி எழுதப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரையில் அந்த 3 அதிகாரங்களில் உள்ள சில திருக்குறள்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் சில எடுத்துக்காட்டுகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ளன.

குற்றச் செயல்களை விளக்கும் அதிகாரங்கள்

1.குற்றம் கடிதல் (44)

2.கூடா நட்பு (83)

3.சூது (94)

இந்த மூன்று அதிகாரங்களில் இரண்டினைச் சிறிய விளக்கத்தோடு காண்போம்.

     கூடா நட்பு என்பது மனமார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது. இந்த நட்பானது ஒரு கேடு செய்வதற்குச் சரியான வாய்ப்பு கிடைக்கும்போது அதனைப் பயன்படுத்தி நல்லவர்களைக் கெடுப்பதாகும். இவ்விளக்கமானது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பிடப்படுகிறது.

      இவ்வகை நட்பைப் பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதில் குறிப்பிடப்படுபவர்கள் மு.வரததாசனார்,  சாலமன் பாப்பையா ஆகியோராவார்.

 மு.வரததாசனார்:
       அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டடையாகும்.

சாலமன் பாப்பையா:

       மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.

  சூது  என்பது கெட்டதேயே நினைத்தல் ஆகும். இதில் பல குற்றச் செயல்கள் அடங்கியுள்ளன. அவை;

1. ஆணவம்

     மகாபாரத இதிகாசத்தில் துரியோதனன் தன்னுடைய வீரத்தைக் கண்டு ஆணவம் கொள்வது இதற்குச் சான்று. இதனால்  பஞ்ச பாண்டவர்களைச் சூதாட்டத்தில் தன் மாமா சகுனியுடன் சேர்ந்து தோற்கடித்து வனவாசம் அனுப்புகிறான். அவனின் ஆணவக் கொடுமையால் மக்கள் துன்பப்பட்டார்கள். பல தவறுகள் செய்த துரியோதனன் இறுதியில் போரில் மாண்டதைக் கீழுள்ள இக்குறள் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.

 வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

  நன்றி பயவா வினை (439) 

  1. ஏமாற்றுதல்

     ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் அரசு பொற்கொல்லன் பாண்டிய மன்னனின் மனைவியின் காற்சிலம்பைத் திருடிவிடுகிறான். திருட்டை மறைக்க தன் மனைவியின் சிலம்பை விற்க வந்த அப்பாவி கோவலனிடம் நெருங்கிய நண்பனாகிறான். இறுதியாகக் கோவலனை ஏமாற்றி தூக்குத் தண்டணைக்கு பழியாக்குகிறான். இச்சூழலை இத்திருக்குறளுடன் ஒப்பிடலாம்.

  சொல்வணக்கம் ஒன்னார்கள் கொள்ளற்க வில்வணக்கம்

  தீங்கு குறித்தமை யான். (827)

  1. சூதாட்டம்

     சூதாட்டம் என்பது தீய விளையாட்டுகளில் ஒன்றாகும். இதனால் நிறைய தீமைகள் உண்டு. மகாபாரதத்தின்  சூதாட்டம் இதன் சான்று. திருவள்ளுவர்  குறளை இப்படி எழுதியுள்ளார்.

   சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்

   வறுமை தருவதொன்று இல். (934)

மலேசிய நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள்

                 சில எடுத்துக்காட்டுகள் 

எடுத்துக்காட்டு 1:

  1. சூதாட்டம்

     மலேசியாவில் உள்ள நிறைய சூதாட்ட மையங்களில் காவல் துறையினரால் நடத்தப்பட்ட சோதனைகளில் நிறைய பேர் பிடிப்பட்டுள்ளனர்.

  1. மனிதக் கடத்தல்

     பாலியல் வணிகத்திற்காகப் பெண்கள், சிறுவர்கள் கடத்தப்படுகிறார்கள்.

  1. போதைப் பொருள் கடத்துதல்

     போதை மருந்து கடத்தல் என்பது அபினி(heroin)  எனும் முதன்மையான மருந்து ஆகும். போதைப்பொருள் கடத்தல்களுக்கு எதிராக போரிட 1980களில் அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கையே தூக்குத் தண்டனையாகும்.

  1. மற்றவை
  • திருடுவது
  • கடன் அட்டை மோசடி
  • சீருந்து, ஊர்திகள் திருட்டு
  • கணிணி விளையாட்டுகள்
  • தங்க நகைகள் வாங்குவது

முடிவுரை

எனவே தீமைகளை விளக்கி நல்லதைப் பேணுவோம்.

 மேற்கோள்கள்

1.திருக்குறள் – நருமதா பதிப்பகம்.

2.http://www.tamillexicon.com/thirukkural/porutpaal/natpiyal/kootaanatpu/

  1. https://www.youtube.com/watch?v=dF6nlYAznjA

4.மலேசியாவில் குற்றச் செயல்கள் – விக்கிபீடியா

    பேரரசி முத்துக்குமார்

மாரா இளநிலை அறிவியல் கல்லூரி,

பாரிட்டு பேராக்கு (parit perak, malaysia) 

மின்னஞ்சல்: tmkt5powerstudy@gmail.com