சட்டச் சொற்கள் விளக்கம் 916 – 920 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 911 – 915 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 916 – 920 916.  assistance, need; need assistance   உதவி தேவை  தேவை உதவி   பணியில் அல்லது ஒரு சூழலில் உதவி அல்லது ஆதரவு தேவை எனக் கேட்பதையும் அவ்வாறு உதவி தேவையா எனக் கேட்பதையும் குறிக்கிறது. இவ்வாறு உதவி வேண்டுமா எனக் கேட்பது ஒரு கண்ணியமான வழி.   தனியர், குழு, மக்கள், நாடுகள் முதலியன ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்நோக்கும்போது …

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-2 : இலக்குவனார் திருவள்ளுவன்

(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-1 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 2 எப்போதுமே தனித் தமிழ் என்று சொன்னாலே, பிராமண எதிர்ப்பாகவும், இறை மறுப்பாகவும் கருதி எதிர்க்கருத்துகளைக் கூறுவோர் உளர். தன்மானம், தன்மதிப்பு முதலியவை பற்றிப் பேசும் திராவிட இயக்கத்தார் தமிழுக்கும் குரல் கொடுப்பதால் அவ்வாறு தவறான கருதுகையும் பரப்புரையும் நேர்ந்துள்ளன. உண்மையில் காலங்காலமாக இறை ஏற்பாளர்களும் தமிழுக்குக் குரல் கொடுத்தே வந்துள்ளனர். இறைநெறி இலக்கியக் காலங்களிலும் திருமுறைப் புலவர்களும் பிறரும் தமிழை உயர்த்தியே கூறி வந்துள்ளனர். இறைவன் படைத்தது…

குறள் கடலில் சில துளிகள் 2 – இலக்குவனார்திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 2 நல்லன கேட்டு நற்பெருமை உறுக! எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 416) சொல்லப்படும் அளவைப் பொருட்படுத்தாமல் நல்லவற்றைக் கேட்க. அஃது அந்த அளவிற்கேனும் சிறந்த பெருமை தரும் என்கிறார் திருவள்ளுவர். பெருனார்டு பரூச்சு (Bernard M. Baruch) என்னும் அரசியலாளர், “நான் அறிந்த பெரும்பாலான வெற்றியாளர்கள், கேட்பதில் கருத்து செலுத்தியவர்களே” என்கிறார். “எனைத்தானும்”…

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 74-76

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 71-73-தொடர்ச்சி) 74. மரக்கவிப் புலவர் சென்ற நூற்றாண்டிலே மரக்கவிப்புலவர் என்று ஒருவர் வாழ்ந்தார். அவர் எதனைப் பாடினாலும் மரத்தை வைத்துப் பாடுவது வழக்கம். – – ஒருமுறை, மன்னர் ஒருவரைப் பார்த்துப் பாடிப் பரிசில் பெற எண்ணிச் சென்றார். அப்போது மன்னர் அங்கு இல்லை. வேட்டைக்குப் போயிருந்தார். மன்னர் திரும்பி வரும்வரை காத்திருந்த புலவர், அவர் வந்த பின்பு தாம் இயற்றிய கவிதையைப் பாடினார். ‘மரமது மரத்திலேறி மரமதைத் தோளில்வைத்துமரமது மரத்தைக் கண்டு மரத்தினால் மரத்தைக்குத்திமரமது வழியே…

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-1 : இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 1 மொழிப்போர் நமது பாடத்திட்டத்தில் இடம் பெறாததால்தான் இன்றைய தலைமுறையினருக்கு மொழிப்போராளிகள் குறித்தோ, இந்தி முதலான பிற மொழித்திணிப்புகளின் கொடுமை குறித்தோ தமிழ்க்காப்பு உணர்வு தேவை என்பது குறித்தோ ஒன்றும் தெரியவில்லை. இனி ஒரு மொழிப்போர் தோன்றாத அளவிற்கு இந்தித்திணிப்புகளும் பிற மொழித்திணி்பபுகளும் இலலாதவாறு ஆவன செய்ய மொழிப்போர் வரலாற்றை அனைவரும் அறிய வேண்டும்.   இந்தித்திணிப்பை மட்டும் குறிப்பிடாமல் சமற்கிருதம், ஆங்கிலம் முதலான பிற மொழித்திணிப்புகளையும் அவற்றிற்கான எதிர்வினைகளையும் பார்க்கப்போகிறோம். எனவே்தான்,  இந்தித்திணிப்பு என்றோ இந்தி…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 119: அத்தியாயம் 81. பிரியா விடை

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 118: அத்தியாயம் 80. புதிய வாழ்வு-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்- 81 பிரியா விடை கும்பகோணம் கல்லூரியில் வேலை பார்க்கும்படி என்னை அனுப்புவதற்குச் சுப்பிரமணிய தேசிகர் சம்மதித்தனரென்ற செய்தி மிக விரைவில் எங்கும் பரவியது. மடத்தின் தொடர்புடையவர்களெல்லாரும் இது கேட்டு வருந்தினார்கள். தியாகராச செட்டியார் பகற்போசனத்திற்குக் கூட இராமல், “வீட்டில் ஒரு திதி நடக்க வேண்டும்” என்று சுப்பிரமணிய தேசிகரிடம் சொல்லி விரைவில் விடைபெற்றுக் கும்பகோணம் போய்விட்டார். நான் வீட்டுக்குச் சென்று என் தாய் தந்தையரிடம் விசயத்தைச் சொன்னபோது அவர்கள்…

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 2 – தொடர்ச்சி) விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 3 ஆமாம். நீங்கள் மனப்பாடம் செய்வதுபோல் என் புதினத்தை நன்கு படித்துள்ளீர்கள். உங்களிடம் படமாக்கும் பொறுப்பை ஒப்படைப்பது மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. ஆனால், இப்பொழுது உணவுப் பொருள்களில் செய்யும் கலப்படத்தை உணராமலும் உணர்ந்தாலும் தட்டிக் கேட்காமலும்தான் மக்கள் இருக்கின்றனர். அப்புறம் எங்கே மொழிக்கலப்பைத் தடுப்பார்கள் என்று அஞ்ச வேண்டியுள்ளது. இளைஞர்கள் பலர் நாம் தமிழ்த்தேசியர்கள் என்பதை உணர்ந்து செயற்பட்டு வருகிறார்கள். எனவே, தமிழ் அழிவிலிருந்து காப்பாற்றப்படும் என்று சிறிது நம்பிக்கை வருகிறது. இவற்றை…

குறள் கடலில் சில துளிகள் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

குறட் கடலிற் சில துளிகள் 1 ஒழுக்கமுடையார் அறிவுரைகளை ஊன்றுகோலாகக் கொண்டு சிறந்திடுக! இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல்  (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 415) வழுக்கும் சேற்று நிலத்தில் நடக்க உதவும் ஊன்றுகோல்போல் வாழக்கையில் வழுக்க நேரும் பொழுது ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் உதவும் என்கிறார் திருவள்ளுவர். ஆள்வோர் வழிதவற நேரும் பொழுது  ஒழுக்கமுள்ளவர்கள் சொற்கள் நல்வழி காட்டும் என்கின்றனர் அரசியலறிஞர்கள். ஆள்வோருக்கு மட்டுமல்ல யாவருக்குமே இது பொருந்தும். கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார் அறிவிலராகலின், அவர் வாய்ச்சொல்…

     எ. தமிழும் – வடமொழியும்-புலவர் வி.பொ.பழனிவேலனார்

(௬. கலைச்சொற்களின் தேவை-புலவர் வி.பொ.பழனிவேலனார்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்      எ. தமிழும் – வடமொழியும் தமிழும் வடமொழியும் (சமற்கிருதம்) இறைவனது இரு கண்கள் என்பர் சிவனடியார்; வடமொழியினின்றுதான் தமிழ் தோன்றிற்றென்பர் வடமொழிவாணர். தமிழில் வடமொழிச் சொற்கள் கலந்ததால்தாம் தமிழ் வளம் பெற்றதென்பர் தமிழ்ப்பகைவர். சிவன் ஆரிய அகத்தியனுக்குத் தமிழ் இலக்கணத்தைக் கற்பித்து, தென்னாட்டில் தமிழைப் பரப்பச் செய்தான் என்பது ஆரியர் கூற்று. மேற்கூறியவை மொழி நூலாராய்ச்சியும், தமிழின் இயல்பறிவும் இல்லாதார் கழற்றுரைகளாகும். தமிழ், திரவிடத்திற்குத் தாயும், ஆரியத்திற்கு மூலமுமாகும் என்பது மொழிநூல் மூதறிஞர் ஞா….

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 15 : பாலத்தீனத்துடனான வாணிகம் – புலவர் கா.கோவிந்தன்

(ஆரியர்க்கு முற்பட்ட வெளிநாட்டு வாணிகம் 2 – புலவர் கா.கோவிந்தன் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட வெளிநாட்டு வாணிகம் 3 பாலத்தீனத்துடனான வாணிகம் கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டு முடிவதற்குச் சிறிது முன்னர், எபிரேயர்கள், எகிப்தில் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டுப் பாலத்தீனத்திற்குக் குடிபெயர்ந்துவிட்டனர். அவர்களோடு சென்ற இனிய மணப்பொருள்கள், புனிதத் தன்மை வாய்ந்தனவாக மதிக்கப்பட்டன. இசுரேல் அரசின் தோற்றத்தில் வளம் கொழிக்கும் வாணிகம் முக்கியத்துவம் வாயந்ததாகிவிட்டது. ஆகவே அரேபிய வாணிகர்களால் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இலவங்கம், எபிரேய மத குருக்களின் புனித திருநெய்யாட்டு எண்ணெய்யின் சலவைப் பொருள்களுள்…

மொழிப் போராளிகள் நாள்: தை 13, 2056/ 26.01.2025: இணையவழிப் புகழ் வணக்கம்

மொழிப் போராளிகள் நாள் தை 13, 2056/ 26.01.2025 ஞாயிறு காலை 10.00 மணி தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும் (திருவள்ளுவர், திருக்குறள் ௨௱௬௰௮ – 268) தமிழ்க்காப்புக் கழகம் இணையவழிப் புகழ் வணக்கம் கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 வரவேற்புரை: முனைவர் மு.சோதிலட்சுமி தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் மொழிப் போராளிகளை வணங்குநர் : முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன், முன்னணி வழக்குரைஞர், ஆத்திரேலியா தமிழ்த்திரு ஆ.நடராசன் கவிஞர் தமிழ்க்காதலன் நன்றியுரை :…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 83 : 18. இசைப்பணி புரிந்த காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 82 : பூங்கொடி இசைவு தருதல்-தொடர்ச்சி) பூங்கொடி 18. இசைப்பணி புரிந்த காதை அருண்மொழி மகிழ்ச்சி           எழிலி பயிற்றிய இசைத்திறம் பூண்ட விழிமலர்ப் பூங்கொடி வியன்புகழ் ஊர்தொறும் பரவிப் பரவிப் பாரகம் அடங்கலும் விரவி மலர்ந்தது விளைந்தது நற்பயன்;           தான்புனை கவியைச் சான்றோர் ஏத்திட         5           ஈன்றநற் கவிஞன் ஏமுறல் போல ஈன்றாள் அருண்மொழி இவள்புகழ் செவிப்பட ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே;   எழிலியின் மகிழ்ச்சி           இசையின் அரசியாம் எழிலிதன் கொழுநன்            …