வெருளி நோய்கள் 1546-1550 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1541-1545 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1546-1550 பகடை(dice) குறித்த வரம்பற்ற பேரச்சம் பகடை வெருளி.சூதிற்கு எதிராகத் திருவள்ளுவர் திருக்குறளில் சூது என்று ஓர் அதிகாரமே படைத்துள்ளார்.(அதிகாரம் 94).உருட்டப்படுகின்ற பகடையால் பொருளை வைத்துச் சூதாடும் பொழுது பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் புறத்தே செல்லும என்கிறார் திருவள்ளுவர்.உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்போஒய்ப் புறமே படும்(குறள் 933).என்பது அக்குறள்.நளவெண்பா, மகாபாரதக் கதைகளில் மன்னர்களே சூதால் யாவற்றையும் இழப்பது கூறப்பட்டுள்ளது.எனவே, பகடை யாடுவது குறித்து அஞ்சி விலக்குவது தேவையான ஒன்று. ஆனால், பகடையை…
சட்டச் சொற்கள் விளக்கம் 1061-1065: இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 1056-1060: தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1061-1065 1061. Appropriate levels தக்க நிலைகள் பொருத்தமான நிலைகள் உரிய நிலைகள் சட்டச் சொல்லாடலில், “பொருத்தமான நிலைகள்” (appropriate levels) என்றால் பொதுவாகச் சட்ட முறையிலான தரநிலைகள் அல்லது அதிகார வரம்புப் படிநிலைகளை அஃதாவது வழக்கை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்களின் நிலைகளைக் குறிக்கிறது. சட்ட நடைமுறைகளைச் சரியாகக் கையாள்வதற்கு, ஒரு வழக்கு எந்த நிலையில் உள்ளது என்பதையும், அதில் எதை மெய்ப்பிக்க வேண்டும் என்பதையும் புரிந்துகொள்வது மிக இன்றியமையாததாகும். 1062. Appropriate…
வெருளி நோய்கள் 1541-1545 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1536-1540 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1541-1545 நோயர் வண்டி(ambulance) தொடர்பான வரம்பற்ற பேரச்சம் நோயர் வண்டி வெருளி.ambulance என்றால், இடம்விட்டு இடம் செல்லுதல், இடம் விட்டு இடம் பெயர்தல், நடத்தல், நடப்பதற்குப் பயன்படுத்துகிற எனப் பொருள்கள். அவசர நேர்வில் நோயாளிகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு – அஃதாவது இல்லத்திலிருந்து அல்லது இருக்குமிடத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதால் நோயர் ஊர்தி எனப்பெற்றது. நாம் நேர் பொருளாகப் பாராமல் பயன்பாட்டு அடிப்படையில் அவசர மருத்துவ ஏந்து(வசதியு)ம் உடைய நோயாளிகளுக்கான ஊர்தியான இதனை நோயர் ஊர்தி…
வெருளி நோய்கள் 1536-1540 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1531-1535 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1536-1540 நேர்ச்சி(accident) குறித்த இயல்பு கடந்த தேவையற்ற பேரச்சம் நேர்ச்சி வெருளி.தன்னால் நேரும் அல்லது பிறரால் நேரும் நேர்ச்சித் துன்பத்தால் உடைமை யிழப்பு, பொருள் இழப்பு, உயிரிழப்பு ஏற்படும் என்று காரணமின்றிக் கவலையில் மூழ்கிப் பேரச்சம் கொள்வர். இயல்பாகச் செல்லும்பொழுது கூட நேர்ச்சி நிகழும் என்று அஞ்சுவர்.பயணம் மேற்கொள்பவர்களுக்கு நாம் சரியாக விதிமுறை களைப் பின்பற்றிப் பயணம் மேற்கொண்டாலும் பிறர் விதிமுறை மீறி அல்லது போதையில் நேர்ச்சியை உண்டாக்குவர் என்ற அச்சம் ஏற்படும்.இயந்திரங்களைப் பயன்படுத்துவோரிடமும்,…
வெருளி நோய்கள் 1531-1535 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1526-1530 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1531-1535 வியாழனின் உட்புற உலவியான நெருப்பு உலவி(Io)தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நெருப்புலவி வெருளி.Io என்பது வியாழனின் மூன்றாவது பெரிய உலவி(moon)யாகும். மேலும் இது நமது சூரிய மண்டலத்திலேயே மிகவும் எரிமலைச் செயல்பாடு மிக்க கோளாகும். எனவே நெருப்புபோல் மிகுதியாக வெப்பமாக இருக்கும்.வியாழனின் ஆதிக்கத்தால் உடலில் கொழுப்பு, சருக்கரை அளவு, உடல் எடை அதிகரிக்கும்; ஞாபக மறதியும் குழப்பமும் மனக்கவலையும் ஏற்படும் எனக் கணியன்கள்(சோதிடர்கள்) கூறுகின்றனர். இதை நம்புவோர் வியானின் உலவி குறித்தும் பேரச்சம் கொள்கின்றனர்.00…
வெருளி நோய்கள் 1526-1530 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1521-1525 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1526-1530 நெடும்பாசி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நெடும்பாசி வெருளி.நெடும்பாசிகள் அழுகும்போது, நச்சு வாயுக்களை வெளியிடுகின்றன.இந்த வாயுக்களை மூச்சு இழுத்து விடுவதால் கடுமையான தலைவலி, குமட்டல், மூச்சிரைப்பு முதலியன ஏற்படும் எனப் பேரச்சம் கொண்டு வெருளிக்கு ஆளாகின்றனர்.00 நீண்ட ஒடுங்கிய வெள்ளை கருப்பு இறகுகளை உடைய ஒரு வகை நீள்வால் பறவையைப்(magpie) பார்த்தால் தீயது நிகழும் என்ற நம்பிக்கையில் அப்பறவையைக் கண்டு அளவுகடந்த பேரச்சம் கொள்வது நெடுவாலி வெருளி.இலத்தீனில் ‘pica’ என்னும் சொல் மேகுபை(magpie) என்னும் பறவையைக்…
வெருளி நோய்கள் 1521-1525 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1516-1520 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1521-1525 ஒட்டகச்சிவிங்கி போன்ற நீளமான கழுத்துகுறித்த அளவுகடந்த பேரச்சம் நெடுங்கழுத்து வெருளி.ஒட்டகச்சிவிங்கி வெருளி(Kamilopardaliphobia)எனவும் தனியாக உள்ளது.பிறர் கேலியாக எண்ணுவார்கள் என்று அஞ்சியும் நடமாட்டத்தில் குறைபாடு நேர்வது கருதியும் நீளமான கழுத்துகுறித்த பேரச்சம் கொள்கின்றனர்.00 நெடுங்கைக் குரங்கு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நெடுங்கைக் குரங்கு வெருளி.இது, கிழக்கிந்தியத் தீவுகளிலுள்ள நீண்ட கைகளுள்ள வாலில்லாக் குரங்குவகையைச் சேர்ந்தது.00 நெடுஞ்சாலைகள்(highways and expressways) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நெடுஞ்சாலை வெருளி.நெடுஞ்சாலைகளில் ஊர்திகள் மிகு விரைவாகச் செல்வதால் நேர்ச்சி(விபத்து) ஏற்படும், உடலுக்கோ…
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்; ஆளுமையர் உரை 165 & 166 ; நூலரங்கம்
தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 165 & 166 ; நூலரங்கம் வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள். (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௬ – 646) நாள்: வைகாசி 24, 2057 ஞாயிறு 07.06.2026 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை : கவிஞர்…
வெருளி நோய்கள் 1516-1520 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1511-1515 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1516-1520 நூறு கோடி / நிகற்புத எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நூறு கோடி எண் வெருளிநிகற்புதம் என்பது 1,00,00,00,000 ஐக் குறிக்கும்.00 நெகிழ் நுரை குவளை(Styrofoam cup) குறித்த வரம்பற்ற பேரச்சம் நெகிழ் நுரை குவளை வெருளி.நெகிழ் நுரை குவளை என்பது எடை குறைந்த, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கொள்கலன் ஆகும். இது சூடாகவும் குளிராகவும் உள்ள பானங்களுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும். சிறந்த வெப்பக் காப்புத்தன்மையை வழங்கி, பானங்களை அவற்றின் சரியான வெப்பநிலையில் வைத்திருப்பதோடு,…
வெருளி நோய்கள் 1511-1515 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1506-1510 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1511-1515 கூரிய முனை உள்ளபொருள்கள் மீதான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் நுனை வெருளி.“முல்லை வைந் நுனை தோன்ற இல்லமொடு” எனப் புலவர் குறுங்குடி மருதனார் (அகநானூறு:4:1) முல்லைஅரும்பின் கூரிய முனையை நுனை என்கிறார். 2.கூற்றம் அஞ்சும் கொல்நுனை எஃகின் இளையானும் (சீவக சிந்தாமணி 1.361)எனத் திருத்தக்க தேவர், கூற்றுவனும் நடுங்கும் கொல்லும் முனையுடைய வேல் ஏந்திய இளைஞன் கந்துக் கடன் எனச் சொல்லும் பொழுது வேல் முனையை நுனை என்கிறார். .“வில் பழுத்து உமிழ்ந்த வெய்ய…
திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௯. தமிழ்நாட்டில் வடமொழி .. .. பிறமொழி – தமிழ் அகரமுதலி ஏன் தோன்றின?
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : அ. ஏன் தமிழ்நாட்டிற்கு விடுதலை? – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்நாடு ௯. தமிழ்நாட்டில் வடமொழி – தமிழ் அகரமுதலி,ஆங்கிலம் – தமிழ் அகரமுதலி, பிறமொழி –தமிழ் அகரமுதலி ஏன் தோன்றின? தமிழ்நாட்டில் ஆரியர், ஆங்கிலேயர், பிறமொழிக்காரர் முறையே குடியேறியும், ஆட்சி புரிந்தும் வாழும்படி ஏமாளித்தமிழர்கள் விட்டுக் கொடுத்துவிட்டு வீண் காலம் போக்கியதே காரணம். இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டாலென்ன? என்று அயர்ந்து இருந்துவிட்டனர் அற்றைத் தமிழர். இற்றைத் தமிழர் பெரும்பாலாரும் அவ்வாறுதான் இருக்கின்றனர். ஆரியர்கள் தமிழ்நாட்டில் குடியேறி…
வெருளி நோய்கள் 1506-1510 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1501-1505 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1506-1510 நீளமான புதுச்சொல் குறித்து ஏற்படும் தேவையற்ற வரம்பு கடந்த பேரச்சம் நீள் புதுச்சொல் வெருளி.நீளமான சொற்களைப் பயன்படுத்த இயலாமை, அதனைச் சொல்வதற்கு வராமை போன்றவற்றால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு அந்தச் சொல் மீது வெறுப்பு வருவதும் உண்டு. பழக்கமில்லா நீளச் சொல்லைத் தவறாகச் சொல்லி விட்டால் பிறரின் ஏளனத்திற்கு ஆளாக நேரும் என அஞ்சுவோரும் உண்டு.இதுவும் நீள்சொல் வெருளியைப்போன்றதுதான். ஆனால் நீளமான நன்கு அறிமுகமான சொல் கண்டு பயப்படாமல் புதிய நீளமான சொற்களைக்…
