உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, பல்வழி அழைப்புரை
அன்பு நலஞ் சான்றீர், வணக்கம். எதிர் வரும் ஆனி 19-22 / சூலை 4, 5, 6, 7 நாட்களில் சிகாகோவில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 32ஆம் ஆண்டு விழா, சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன்விழா, உலகத் தமிழர் தொழில் முனைவோர் கூட்டங்கள் நடை பெறவுள்ளன. அம்மாநாட்டின் சிறப்புகள் குறித்துப் பல்வழி அழைப்பின் வாயிலாக உரையாற்ற அருட்தந்தை செகத்து காசுப்பர் அவர்களும், ஆய்வாளர் ஒடிசா பாலு அவர்களும் இசைந்துள்ளார்கள். இவை குறித்த செய்திகள் கீழ் வருமாறு; நாடு நாள் நேரம் தொடர்பு எண் அமெரிக்கா 1/30/2019 புதன்கிழமை இரவு 09:00 முதல் (கிழக்கு நேரம் ) இரவு 08;00 முதல் (சிகாகோ நேரம்) தொடர்பு எண்: 515-739-1519 கடவு எண்: 890386…
வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 : இலக்குவனார் திருவள்ளுவன்
தொகுப்பாளர் குறிப்பு: எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் (குறள் 355) மெய்ப்பொருள் காண்பதறிவு என மெய்ப்பொருள் காணும் வித்தகர்; ஆனித்தரமான வீரம் செறிந்த பேச்சு வல்லவர். கவிதை பொங்கும் மிடுக்கு நடை. அதுவே இவரது உரைநடை என்னும் வகையில் அழகாகத் தெளிவாகப் பேசும் சொல்லேருழவர். ஆட்சிததமிழிலும் அறிவியல் தமிழிலும் கலைச்சொல்லாக்கங்களிலும் வல்ல தமிழறிஞர். ‘அகரமுதல’ மின்னிதழின் ஆசிரியர். இணைய வழியாகத் தமிழ் பரப்புவதில் முன்னோடியாகத் திகழ்பவர். தமிழ்த்திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களைப், பேராசிரியர் கு.மோகனராசு அவர்களின் வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் தொகுதி 6…
வாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) – நூலறிமுகம்
முனைவர் கு.மோகன்ராசுவின் வாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) முனைவர் வாணி அறிவாளன் திருக்குறள் ஆய்வு, திருக்குறளைப் பரப்புதல், திருக்குறளை வாழ்வியலாக்குதல் எனத் தம் வாழ்வினைத் திருக்குறள் சார்ந்த நற்பணிகளுக்காகவே ஒப்படைத்துக்கொண்டவர், திருக்குறள் மாமுனிவர் திரு.கு.மோகனராசு அவர்கள். அவர் தம் வாழ்க்கை வரலாற்றை 20 தொகுதிகளாக வெளியிடவேண்டும் எனத் திட்டமிட்டு, அவற்றை வாழ்க்கைச் சுவடுகள் என்ற பெயரில் வெளியிட்டுவருகிறார். அவர்தம் குழந்தைப் பருவ வாழ்க்கையை வாழ்க்கைச் சுவடுகள்–1: குழந்தைப் பருவம் என 2013இல் வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக ‘வாழ்க்கைச் சுவடுகள் – பகுதி…
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும் சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழாவும்
10 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 32ஆவது பேரவை-சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழா அன்புடையீர் வணக்கம்.! வருகின்ற ஆனி – 19-22, தி.பி. 2050 / சூலை 2019 – 4 முதல் 7 ஆம் நாள்களில் நடக்க இருக்கும் உலகத் தமிழ்ஆராய்ச்சி மாநாடு (10 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 32ஆவது பேரவை-சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழா) நிகழ்ச்சிகளுக்கு தங்களின்குடும்பத்துடனும் நண்பர்களுடனும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். இதுவரை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்காக, ஏறத்தாழ 500 ஆராய்ச்சியாளர்கள்,…
பெண் வன்முறைகள்: அவதூறு எங்ஙனம் கருத்துரிமையாகும்? – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் இலக்கியப் பதிவுகளில் பெண் வன்முறைகள் கருத்தரங்கம்: அவதூறு கற்பிப்பது எங்ஙனம் கருத்துரிமையாகும்? – ‘நம்ம திருச்சி’ இதழில் இலக்குவனார் திருவள்ளுவன் இலக்குவனார் திருவள்ளுவன்: தமிழ்க்காப்புக்கழகம் என்னும் அமைப்பின் தலைவரும் இலக்குவனார் இலக்கிய இணையத்தின் ஒருங்கிணைப்பாளரும் ‘அகரமுதல’ மின்னிதழ் ஆசிரியருமான இலக்குவனார் திருவள்ளுவன் (தமிழுக்குக்கேடு வரும் பொழுது முதல் எதிர்ப்புக்குரல் எழுப்பும் தமிழறிஞர்) அவரிடம் திருச்சிராப்பள்ளியில் சூசையப்பர் கல்லூரி நடத்த உள்ள கருத்தரங்கம் குறித்து ‘நம்ம திருச்சி’ இதழின் சார்பாகக் கேட்டபோது, இதனைக் கடுமையாக எதிர்த்துப் பின் அவர் கூறிய பதில்கள்… தமிழியல் துறை தமிழ்…
இலங்கைக் கல்வி மேம்பாட்டு அரங்கம்(ஐ.இ.) கருத்தரங்கு
மார்கழி 21, 2049 சனிக்கிழமை 05.01.2019 பிற்பகல் 2.00-5.00 உயர்வாசற் குன்று முருகன் ஆலயம் தலைமை: பேரா.நடராசா சிரீ கந்தராசா இலங்கைக் கல்வி மேம்பாட்டு அரங்கம்(ஐ.இ.) கருத்தரங்கு கருப்பொருள்: இலங்கை வடமாகாணக்கல்வி நிலை தொடர்பிற்கு: சச்சிதானந்தன், தலைவர் – 07788 196426 சிவலிங்கம், செயலாளர் – 07984 079371 திருவாட்டி தேவநாதன், பொருளாளர் – 07973 287038
புதுமைப்பித்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு, சென்னை
கார்த்திகை 14, 2049 வெள்ளி 30.11.2018 பிற்பகல் 3.00 பவளவிழா கலையரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம் புதுமைப்பித்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு பொழிஞர்: கவிஞர் அ.வெண்ணிலா தமிழ் இலக்கியத்துறை சென்னைப்பல்கலைக்கழகம்
தமிழ் இலக்கியங்களை இழிவு படுத்தும் சூசையப்பர் கல்லூரி-இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் இலக்கியங்களை இழிவு படுத்தும் நோக்கில் சூசையப்பர் கல்லூரி திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய சூசையப்பர் கல்லூரி, வரும் திசம்பர் 6, 7 நாள்களில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்துவதாக அறிவித்திருந்தது. கருத்தரங்கம் நடத்துவது இதழியல் துறை. தமிழ் முதல் இதழான சுதேசமித்திரன் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது 1882இல். இதழ்களில் இடம் பெறும் தலைப்புகளில் கருத்தரங்கம் நடத்தினால் தமிழின் இதழ்கள் அறிமுகத்திற்கு – 1882 இற்கு – முந்தைய இலக்கியங்கள் பொருண்மையில் அடங்கா. ‘பெண்கள் குறித்த நிறை குறைகள்’ எனப் பொதுவான தலைப்புகளாக இருப்பின் நடுநிலை ஆய்வாகக் கருதலாம்….
தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள் – தேசியக்கருத்தரங்கம்
தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள் தேசியக்கருத்தரங்கம் சதக்கதுல்லா அப்பா கல்லூரி நாள் : கார்த்திகை 24, 2049 / 18.12.2018 இடம் : கல்லூரி உரையரங்கு கட்டுரைகள் அனுப்ப வேண்டிய இறுதிநாள் : கார்த்திகை 24, 2049 / 10.12.2018 தொடர்பு : முனைவர் ச.மகாதேவன் தமிழ்த்துறைத் தலைவர் பேசி 9952140275 மின்வரி soundaramahadevan@gmail.com
வீறுகவியரசர் முடியரசன் படைப்புலகம் – தேசியக்கருத்தரங்கம்
கார்த்திகை 29, 2049 / சனிக்கிழமை / 15.12.2018 நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் இணைந்து நடத்தும் தேசியக் கருத்தரங்கம், கோவிலூர், காரைக்குடி தலைப்பு : வீறுகவியரசர் முடியரசன் படைப்புலகம் தொடர்பு : பேரா.ம.கார்மேகம் தமிழ்த்துறைத்தலைவர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி கோவிலூர் 630307 பேரா.சே.செந்தமிழ்ப்பாவை இயக்குநர் தமிழ்ப்பண்பாட்டு மையம் அழகப்பா பல்கலைக்கழகம் தலைவர், வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் காரைக்குடி 630003 pavaisenthamizh17@gmail.com
கணிப்பானியல் உலகளாவிய இரண்டாம் மாநாடு, சென்னை
ஐப்பசி 30-கார்த்திகை 01, 2049 / நவம்பர் 16-17, 2018 இலயோலா கல்லூரி, சென்னை கணிப்பானியல் உலகளாவிய இரண்டாம் மாநாடு, சென்னை ஆராய்ச்சிக் கட்டுரைக்கும், பயனாளர்களுக்கும் முன்பதிவு அழைப்பு கணிதம், புள்ளியியல், கணிணி அறிவியல் துறை ஆராய்ச்சியாளர்களுக்கு அறிவுப் பசியை ஊக்குவிக்கவும், கலந்துரையாடல்களால் மேலும் பண்பட்ட கட்டுரைகளை வெளியிடவும், ஆராய்ச்சியாளர்களை நேர்முகம் காணவும் கணிப்பானியல் உலகளாவிய இரண்டாம் மாநாடு நடைபெற உள்ளது. பதிவுக் கட்டணம் 15.10.2018 ஆம் நாளுக்குள் முன்பதிவு செய்து பணம் கட்டும் கட்டுரையாளர்களுக்கும், ஆராய்ச்சி உரை கேட்க வரும் பயனாளர்களுக்கும்…
ஆரிய எதிர்ப்பே திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆசியவியல் நிறுவனம் திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம் இலிவர்பூல், இங்கிலாந்து ஆனி 13-15, 2049 சூன் 27 – 29, 2018 ஆரிய எதிர்ப்பே திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே! கட்டுரையாளர்களே! பேராயர் எசுரா சற்குணம், அமுதன் அடிகள், இலிவர்பூல் தமிழன்பர்கள், இலண்டன் தமிழன்பர்கள் முதலான அவையோரே! அனைவருக்கும் வணக்கம். வாழ்வியல் அறநூலாகிய திருக்குறள் அனைவருக்கும் பொதுவான உலக நூலாகத் திகழ்கிறது. எனவே, உலக மக்களைப் பிளவுபடுத்தும் கருத்துகளுக்கு எதிரான அறஉணர்வையும் விதைக்கிறது. “திருவள்ளுவர் உலகின் முதல் புரட்சியாளர்” எனப்…
