வீரம் நிறைந்த தமிழினமே! சோரம் போகலாமா? – ஈழத்து நிலவன்

வீரம் நிறைந்த தமிழினமே! சோரம் போகலாமா?  உரக்கச் சொல்வோம் எங்கள் உரிமையை!  உறுதியாய்க் கேட்போம் எங்கள் விடுதலையை ! தென்தமிழீழத்தில் கிழக்கு மாகாணத்தில் மட்டு நகரில் தை 8 / சனவரி 21ஆம் நாள்  சனிக்கிழமை ‘எழுக தமிழ்‘ நிகழ்வு நடைபெறவுள்ளது.   இது காலத்தின் ஒரு முதன்மையான வரலாற்றுக் கடமையாகும். சிங்களப் பேரினவாதிகள் அரச ஆதரவோடு கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்க்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் அனைத்துத் தமிழ் மக்களும் எமது ஆதரவை நல்குவோமாக! அம்பாறை, திருகோணமலை,…

மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் உரூபாய்க்கான பரிசுப் போட்டிகள்

  மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் உரூபாய்க்கான பரிசுப் போட்டிகள் காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பராமாயணப் போட்டிகள்: கம்பராமயண ஒப்பித்தல் போட்டி –1   பேரா. மு.பழனியப்பன் தன் தந்தையார் பெயரால் நிறுவியுள்ள தமிழாகரர் பழ. முத்தப்பனார் பரிசு.   பிரிவு -9,10,11,12 மாணாக்க மாணக்கியர்களுக்கானது.   நாள்- தை 15, 2048 / 28.1.2017 நேரம் 0 9.30 மணி இடம்- கிருட்டிணா கல்யாணமண்டபம், கல்லுக்கட்டி மேற்கு, காரைக்குடி   எதிர்பார்க்கும் தகுதிகள்: உச்சரிப்பு, ஒலிநயம், மெய்ப்பாடு இவற்றோடு பொருள் அறிந்து வருதலும்…

புயலில் அழிந்த ஈழத் தமிழர் முகாம் :மீட்டெடுக்க கொளத்தூர் மணி வேண்டுகோள்!

புயலில் அழிந்த ஈழத் தமிழர் முகாம் மீட்டெடுக்க தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள்! அன்பிற்குரியீர்! வணக்கம். வருதா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. இன்னும் சென்னை மக்கள் வாழ்வு முழுமையாக மீண்டுவிடவில்லை.     புயல் கடந்த அடுத்த நாளிலிருந்து மீட்புப் பணிகள் சென்னையெங்கும் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது. இன்னும் சீராகாதது புயல் வேகத்தின் அளவை நமக்கு உணர்த்துவதாகவே உள்ளன. அப்படி ஒரு நாளில் நம் வாழ்வை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டது வருதா புயல்.   அரசு வேரோடு…

ஈழ இளையோரே நெறி தவறாதீர்!

ஈழ இளையோரே நெறி தவறாதீர்!     2009 மே காலப்பகுதி வரை தமிழ் மக்களின் வாழ்விலும் வளத்திலும் கோலோச்சிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம், இலங்கைக்குள் செயல்பாட்டு தளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின்னரான சூழலில், தமிழ்ப் பண்பாட்டுக் குமுகம் ‘ தன்னொழுக்கம் –  தற்கட்டுப்பாட்டை’ இழந்து, தரம் தாழ்ந்துவரும் மோசமான நிலைமைகள் மிகுந்த கவலையையும் – பயத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.  ‘2009 மே’க்குப்பின்னர் கடந்த ஏழு வருடங்களாகத் தாராளமாகப் புழக்கத்தில் விடப்பட்டுள்ள போதைப்பொருள்கள் – அருவருக்கத்தக்க(ஆபாசக்) காணுரைகள், மடைதிறந்து விடப்பட்டுள்ள கொலை, கொள்ளை, வழிப்பறி, குடும்ப வன்முறைகள்,…

புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் : கவிதைப் போட்டி, கவியரங்கம், விவாத அரங்கம்

புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் நடத்தும்  கவிதைப் போட்டி, கவியரங்கம் & விவாத அரங்கம் ஆர்வமுள்ள கவிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் வரும் திசம்பர் திங்களில் தமது 72ஆம் திங்கள் நிகழ்வைச் சமூக விழிப்புணர்வு நிகழ்வாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அவ்வகையில், தற்போது நாட்டில் நிலவுகின்ற பணப்புழக்கம் மற்றும் பணக்குழப்பம் தொடர்பாகக் கவிதைப் போட்டியுடன் கூடிய கவியரங்கம், விவாத அரங்கம் நடத்த உள்ளது. கவிதைப் போட்டித் தலைப்பு: “அலைக்கழிக்கும் 500, 1000 “ மரபுப்பா எனில் 16 அடிகளுக்குள்ளும் புதுக்கவிதை எனில்…

பிரதிலிபியின் கதைப்போட்டி ‘ஒரே ஓர் ஊரில்’ – 2016/17

  வாசகர்களுக்கு வணக்கம், பிரதிலிபியின் மாபெரும் கதைப்போட்டி ‘ஒரே ஒரு ஊர்ல’ – 2016/17  இது பிரதிலிபியின் இந்த வருடத்துக்கான கதைப்போட்டி. இனி வருடாவருடம் திசம்பர் – சனவரியில் கதைகளுக்கான இந்தச் சங்கமம் நடந்துகொண்டே இருக்கும். பெரிய படிகளின் தொடக்கமாக இதனைக் கருதுகிறோம். வழக்கம்போல் உங்கள் ஆதரவினை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.  கதைகள் நம் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தவை. பெற்றோர்களிடம், தாத்தா பாட்டிகளிடம், நண்பர்களிடம், காதலியிடம், குழந்தைகளிடம் என நாம் அனைவரிடமும் எப்போதும் ஏதோ ஒரு கதையைப் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். கதைகளின் மாயச் சுழலில் தப்பித்தவை என…

மனிதச் சங்கிலியில் கை கோப்போம்! – சுப.வீரபாண்டியன் அறிக்கை

மனிதச் சங்கிலியில் கை கோப்போம்! 500, 1000 உரூபாய்த் தாள்களைச் செல்லாது என்று அறிவித்து, ஏழை, எளிய மக்களைப் பெரும் இன்னலுக்குஆளாக்கியுள்ள,  தலைமையர் நரேந்திரர்(மோடி) தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து, தி.மு.கழகம் வரும் 24ஆம்  நாள், தமிழ்நாடு முழுவதும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதனைத் திராவிட இயக்கத்தமிழர் பேரவை முழுமையாக ஆதரித்து வரவேற்பதுடன், பேரவையின் தோழர்கள் அனைவரும் இந்த மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் கைகோத்து நிற்க முடிவெடுத்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆகவே, தோழர்களே மனிதச்சங்கிலியில் திரளாகக் கலந்துகொண்டு கை கோத்து இணைய வேண்டுகிறோம்.  …

பணத்தாள் செல்லாமை ஆக்கியமையைக் கண்டித்து மாபெரும் மனிதச்சங்கிலி – கருணாநிதி அறிவிப்பு

பணத்தாள் செல்லாமை ஆக்கியமையைக் கண்டித்து மாபெரும் மனிதச்சங்கிலி – கருணாநிதி அறிவிப்பு   பணத்தாள்கள் செல்லாதென அறிவித்ததால் ஏற்பட்டுள்ளஇன்னல்களுக்கு  காரணமான மத்திய  அரசைக்  கண்டித்துத் தமிழகம் முழுவதும் தி.மு. கழகத்தின் சார்பில்  கார்த்திகை 09, 2047 / நவ. 24 – அன்று மாபெரும் மனிதச் சங்கிலி நடைபெறும் எனத்  தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.   இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய பா.ச.க. அரசு, ‘அவசரக்கோலத்தில் அள்ளித் தெளி’ என்பதைப் போல எந்தவிதமான முன்னேற்பாடோ, உரிய வகையிலான திட்டமோ இல்லாமல்,…

தமிழ் இலக்கிய, இலக்கணச் சொற்கூறுகளும் சொல்லடைவும் – வலைத்தளம் அறிமுகம்

சங்கத்தமிழ் சொற்பேழை பேராசிரியப் பெருமக்களே! ஆய்வு அறிஞர்களே! மாணவக் கண்மணிகளே! அரிய படைப்பாகிய ’ஐங்குறுநூற்று உருபனியற் பகுப்பாய்வு’ என்னும் அறிய நூலிற்கு பிறகு http://drkamatchi.in/ (SANGAM CORPUS AND CONCORDANCE) என்னும் வலைத்தளம் தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழியியல், கணினி மொழியியல் ஆகியவற்றில் ஆர்வம் உள்ள ஆர்வலர்களுக்காகப் புதியதோர் கோணத்தில் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வலைத்தளம் பற்றி: இவ்வலைத்தளத்தில் எட்டுத்தொகை இலக்கியங்களில் குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்றவற்றையும் திருக்குறள், இன்னாநாற்பது, இனியவை நாற்பது போன்ற நூல்களுக்குத் தமிழ் அகரவரிசைப்படி அகராதியும் ஆங்கில அகர வரிசையில் அகராதியும் கொடுக்கப்பட்டுள்ளது….

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017  வைகாசி 03 – 05, 2048 / 17 – 19 மே 2017   பங்களிப்பும் படைப்பும் வேண்டல் ஆங்கிலத்திலுள்ள முழுவிவரத்திற்கும் பதிவுப்படிவத்திற்கும்  காண்க : http://thiru2050.blogspot.in/2016/11/2017_18.html   ஆசியவியல் நிறுவனம், சென்னை உலகத்தமிழர் பேரவை, மொரிசியசு

கருப்புப் பண மீட்பா? கருப்புப் பணக் காப்பா?- கி. வெங்கடராமன்

கருப்புப் பண மீட்பா? கருப்புப் பணக் காப்பா?  தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கடராமன் அறிக்கை!     இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஐப்பசி 23, 2047 / 08.11.2016 நள்ளிரவு முதல் 500 உரூபாய், 1000 உரூபாய்த்தாள்கள் செல்லா என்று திடீர் அறிவிப்பு வெளியிட்டார்.   கருப்புப் பணத்தையும், கள்ள உரூபாய்த்தாள்களையும் செயல்படாமல் முடக்குவதற்கே இந்த அறிவிப்பு என்று அவர் காரணம் கூறினார். பாக்கித்தானிலிருந்து பயங்கரவாதிகள் எல்லை கடந்து கள்ள உரூபாய்த்தாள்களைப் புழக்கத்தில்விட்டு, இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களுக்கு…

திருக்குறள் மொழிபெயர்ப்புகளும், உரைநயங்களும் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

கார்த்திகை 22, 2047 / 07.12.2016 அன்று கே.எசு.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ள, திருக்குறள் மொழிபெயர்ப்புகளும், உரைநயங்களும் என்ற தலைப்பில் நடைபெறும் இரண்டாவது பன்னாட்டுக் கருத்தரங்கத்துக்குப் பல்வேறு மொழிகளில் திருக்குறளின் மொழிபெயர்ப்புகளையும் பல்வேறு உரையாசிரியர்களின் உரை நயங்களையும் ஒப்பீட்டு முறையிலும் திறனாய்வு முறையிலும் எடுத்துரைக்கும் ஆய்வுக்கட்டுரைகள் வந்துள்ளன. கட்டுரை அனுப்பிய பேராளர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் கட்டுரை வழங்குவதற்கான இறுதி நாள்  ஐப்பசி 22, 2047 / 07.11.2016. திருக்குறள் மொழிபெயர்ப்புகள் குறித்தோ உரைகள் குறித்தோ எழுதப்படும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. சிறந்த கட்டுரைகளுக்குப்…