மும்பையில் தமிழ்ச் சங்கம் பாண்டுப்பு சார்பில் இலவசத் தமிழ் வகுப்புகள்

மும்பையில் பாண்டுப்பு தமிழ்ச் சங்கம் சார்பில் இலவசத் தமிழ் வகுப்புகள் தமிழ்ச் சங்கம் பாண்டுப்பு சார்பில் இலவசத் தமிழ் வகுப்பு அடுத்த மாதம்(செப்டம்பர்) 3-ந்தேதி முதல் தொடங்குகிறது. வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை பாண்டுப்பு மேற்கு, காவுதேவி சாலைப் பகுதியில் உள்ள அன்னை சிவகாமி தேசிய நினைவு மன்றத்தில் நடைபெறும். முதல் நாள் வகுப்பை அன்னை சிவகாமி தேசிய நினைவு மன்றத் தலைவர் மாயாண்டி தொடங்கி வைக்கிறார். தமிழ்ச் சங்கம் பாண்டுப்பு தலைவர் ச.சி.தாசன், மன்ற…

இலக்குவனாரின் ஐம்பதாவது நினைவாண்டில் மாணாக்கருக்கான உலகளாவிய போட்டிகள்

இலக்குவனாரின் ஐம்பதாவது நினைவாண்டில் மாணாக்கருக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் இலக்குவனார் நடுநிலைப்பள்ளி, வாய்மைமேடு உலகத்தமிழாராய்ச்சி மன்றம், அமெரிக்கக் கிளை இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்க் காப்புக் கழகம் உலகளாவிய போட்டிகள் இனிய தமிழ் பேசும், எழுதும் குழந்தைகளின் திறமையை வெளிக்காட்ட ஓர் அரிய வாய்ப்பு! மொத்தம் 24 ஆயிரம் உரூபாய்ப் பரிசுத் தொகை. – 4 பிரிவுப் போட்டிகள் பரிசு விவரம்: ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் பரிசு உரூ.3000/- இரண்டாம் பரிசு உரூ.2000/- மூன்றாம் பரிசு உரூ.1000/- என நான்கு பிரிவுகளுக்கும் வழங்கப் பெறும். அனைத்துப்போட்டிகளுக்குமான…

தமிழ்இணையம் 2023’ – ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்

மதுரை காமராசர் பல்கலைக்கழக  மொழியியல் துறை,தமிழ் இணையக் கழகம், இந்தியா, தமிழ் அறித நுட்பியல் உலகாயம்(இலங்கை) தமிழ் இதழ், கனடாஇணைந்து  நடத்தும்  ‘தமிழ் இணையம் 2023’ ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் அட்டோபர் இறுதியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும். கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்வரி: indiatia2020@gmail.com கட்டுரைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 01.10.23 5 முதல் 8 பக்க அளவில் கட்டுரைகளை அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் 3 கட்டுரைகளுக்கு விருது வழங்கப்பெறும். பிற விவரங்களை இப்பக்கத்தில் உள்ள விவர இதழில் காண்க….

தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டு – கட்டுரைப்போட்டி

தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டை முன்னிட்டு யாவரும் பங்கேற்கும் கட்டுரைப்போட்டி மொத்தம் 18 பரிசுகள்  சித்தாலயா, (பேரா.மரு.செயப்பிரகாசு நாராயணன்) வழங்கும் முதல்பரிசு உரூ.5,000/- இலக்குவனார் மனநல மருத்துவமனை, (பேரா. மரு.செல்வமணி தினகரன்) வழங்கும் இரண்டாம் பரிசு உரூ.3,000 /,  & மூன்றாம்  உரூ.2000/ நான்காம்  பரிசு ஐவருக்கு இலக்குவனார் இதழுரைகள் நூல் (விலை உரூ.600/-) ஐந்தாம் பரிசு ஐவருக்கு இலக்குவனாரின் படைப்பு மணிகள் நூல் (விலை உரூ.300/-) ஆறாம் பரிசு ஐவருக்கு இலக்குவனார் எழுதிய பழந்தமிழ் நூல் (விலை உரூ.100/-) கட்டுரைப்போட்டியின் தலைப்பு: இந்தி,…

தோழர் தியாகு எழுதுகிறார்  146:  பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை

 (தோழர் தியாகு எழுதுகிறார்  145: வேங்கைவயல் குற்றப் புலனாய்வு பற்றிய குற்றாய்வு தொடர்ச்சி)  பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் உள்ள இறையூர், வேங்கைவயல் தெருவில் பட்டியலினச் சாதி மக்களின் குடிநீர்த் தொட்டியில் சாதி ஆதிக்க வெறியினர்  மலத்தைக் கலந்த கொடூரமான வன்கொடுமை நிகழ்வு நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. அன்று திண்ணியத்தில் நடந்த வன்கொடுமையின் உச்சபட்ச கொடூரம் இன்று இறையூரிலும் நடக்கிறது. “குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” என முதல்வர் சட்டப் பேரவையில் உறுதியளித்தார். ஆனால்,  சாதிவெறிக் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு மாறாக அவர்களைப் பாதுகாக்கும்…

உலகத் தமிழ் மாநாடு : நூல் வெளியீடும் விற்பனை அரங்கும்

உலகத் தமிழ் மாநாடு : நூல் வெளியீடும் விற்பனை அரங்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்(IATR) நடத்தும் 11 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சென்னை வரும் ஆனி 22, 23 & 24, 2054 ****சூலை 07,08& 09.2023 அன்று சென்னையில் செம்மண்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில்  உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற உள்ளது. உ.த.ஆ.நி. தலைவராக முனைவர் பொன்னவைக்கோவும் மாநாட்டு ஒருங்கிணைப்பாளராகப் பொறி.அரசரும் மாநாட்டுச் செயற்தலைவராக முனைவர் சான்சாமுவேலும் உள்ளனர். அறிஞர்கள் பலரும் பணிக்குழுப் பொறுப்புகளில் உள்ளனர். இம்மாநாட்டில் நூல்…

(சிங்கப்பூர்)11ஆவது உலகத்தமிழ் மாநாடு – ஆன்றோர் உரைகளும் அறிவிப்புகளும்

(சிங்கப்பூர்)11ஆவது உலகத்தமிழ் மாநாடு – ஆன்றோர் அறிவிப்புகளும் உரைகளும் பிரிவு 2 இலக்குவனார் திருவள்ளுவன் 01- 10.12 முனைவர் உலகநாயகி 10.13 -14.47 முதுமுனைவர் முருகன் 14.48 – 19.25 முனைவர் சேயோன் 19.26- 23.48 முனைவர் அருத்தநாரீசுவரன் 23.49 – 24.53 பிரிவு 1 முனைவர் மருதநாயகம் 01.-7.39 முனைவர் பொன்னவைக்கோ 7.40 – 12.25 முனைவர் சுந்தரமூர்த்தி 12.26 – 15.19 முனைவர் பிரான்சிசு முத்து 15.20 – 21.56 முனைவர் சான் சாமுவேல் 21.57- 41.02 நேருரை தொடுப்பு :செல்வி…

குறள்நெறி மின்னிதழ் பெற வேண்டுமா?

குறள்நெறி மின்னிதழ் பெற வேண்டுமா? தமிழ்நெஞ்சங்களுக்கு, வணக்கம். தமிழ் அரிமா சி.இலக்குவனார் தோற்றுவித்துத் தம் வாழ்நாளெல்லாம் நடத்திவந்த “குறள்நெறி” இதழ் கடந்த  2021-ஆம் ஆண்டுத் திருவள்ளுவர் திருநாள் முதல் கடந்த மூன்றாண்டுகளாக  இலவச இணையத் திங்களிருமுறையாகத் தொடர்ந்துவெளிவந்துகொண்டிருக்கிறது. எஞ்ஞான்றும் நன்கொடையோ ஆண்டுக்கட்டணமோ எவ்வகையான பொருளிதவியோ வேண்டா. தொடர்ந்து படியுங்கள்.மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் கைப்பேசிப் புலன எண்களைத் தெரிவித்தால் உங்கள் நண்பர்களுக்கும் சுற்றத்தினர்க்கும் அனுப்புவோம். பின்வரும் தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறள்நெறி குறள் முழக்கம் குறள் விருந்து  Thirukkural express அனைத்து மின்னிதழ்  களுக்குமான…

(சிங்கப்பூர்) உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சென்னையில் – சூலை 7-9

(சிங்கப்பூர்) உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சென்னையில் – சூலை 7-9 உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்(IATR) சிங்கப்பூரில் நடத்த இருந்த 11 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சென்னையில் வரும் ஆனி 22, 23 & 24, 2054 ****சூலை 07,08 & 09.2023 செம்மணஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் நடைபெறும். சென்னையில் நடைபெறுவதால் கூடுதலாகக் கட்டுரையாளர்களைத் தெரிவு செய்கின்றனர். கட்டுரையாளர்களுக்கு அனுப்பப்பெறும் அழைப்பு மடல்கள் வரும் திங்கள் இரவிற்குsள் அனுப்பப்படடு விடும் என இவ்வமைப்பின் தலைவர் முனைவர் பொன்னவைக்கோ தெரிவிததார்….

மும்மொழித் திணிப்புகளையும் எதிர்ப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

மும்மொழித் திணிப்புகளையும் எதிர்ப்போம்! இந்தி எதிர்ப்புப் போராட்டம்போல் நாம் ஆங்கிலத்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயச் சூழலில் உள்ளோம். இந்தி, சமற்கிருதத் திணிப்புகள் தமிழைக் குற்றுயிரும் குறையுயிருமாகச் சிதைத்து வருகின்றன. அவற்றிற்குச் சிறிதும் குறைவி்லாத வகையில் ஆங்கிலத் திணிப்பு நம் தமிழை அழித்துக் கொண்டு வருகிறது. தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் பிற மொழிச்சொல் இடம் பெற்றது என்றால், அந்தத் தமிழ்ச்சொல் வாழ்விழந்து விடுகிறது. மு.க.தாலின் அரசு, அரசுப் பணியிடங்களில் தமிழ் தகுதித்தேர்வு கட்டாயம், அயலகத் தமிழர் நலன் – மறுவாழ்வுத் துறை…

புத்தகக் கண்காட்சியில் என்னூல்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

சென்னையில் நடைபெறும் 46ஆவது புத்தகக் கண்காட்சியில் களம் – அரங்கு எண் 272 இல் என்னூல்கள் விற்பனைக்கு உள்ளன. தமிழார்வலர்களும் ஆய்வாளர்களும் சொல்லாகத்கதிலும் அறிவியல் தமிழிலும் ஈடுபாடு மிக்கவர்களும் தமிழன்பர்களும் வாங்கிப் பயனுற வேண்டுகிறோம். விவரம் வருமாறு:- பழந்தமிழ்(விலை உரூ 100.00) நான் பதிப்பித்துள்ள பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் நூல். பல ஆண்டுகள் தமிழ் மாணாக்கர்களுக்குப் பாடமாக இருந்த நூல். மொழியின் சிறப்பு, மொழிகளும் மொழிக்குடும்பங்களும், பழந்தமிழ், மொழி மாற்றங்கள், பழந்தமிழ்ப்புதல்விகள், பழந்தமிழ் இலக்கியம், பழந்தமிழ் நிலை, பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள், பழந்தமிழ்ச் சொல்லமைப்பு,பழந்தமிழும்…

பழனி- குடமுழுக்கைத் தமிழில் நடத்த அரசு மறுப்பதேன்?

பழனி முருகன் கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்த தமிழ்நாடு அரசு மறுப்பதேன்? சனவரி 20இல் பழனியில் மாபெரும் உண்ணாப் போராட்டம்! இந்து சமய அறநிலையத்துறை ஆணையரை சந்தித்தப் பிறகு தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிவிப்பு! பழனி முருகன் திருக்கோயில் குடமுழுக்கு வரும் தி.பி. 2054 தை 13 (27.01.2023) வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. தமிழ்க் குமரன் திருக்கோயில் பழனி குடமுழுக்கை கருவறை – வேள்விச்சாலை – கலசம் வரை திருநெறிய தமிழ் மந்திரங்களை அருச்சித்துச் சிறப்பாக நடத்திடக் கோரிக்கை வைத்து,…