இக்கரைக்கு அக்கரை பச்சை! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

இக்கரைக்கு அக்கரை பச்சை! இக்கரைக்கு அக்கறை பச்சையென்று எண்ணியே, இக்கறை படிந்து நிற்கும் கட்சிகளை நம்பியே, திக்கினை இழந்து தமிழர் நட்டாற்றில் தவிக்கிறோம்! சக்கரைக்குள் நஞ்சினை மறைத்து வைத்து ஊட்டியே, சிக்கலின்றித் தமிழனின் சிரம் அறுக்கும் துணிவுடன், மெத்தனத் தனத்துடன் வலம்வரும் பகைவரை, உக்கிரக் கொளுந்துவிட் டுதித்திடுஞ் செந்தீயிலே, இட்டழிக்குஞ் சக்திவாய்ந்த தமிழனுக்குத் தேர்தலில், மொத்தமாக வாக்களித்துத் தலைவனாக ஆக்குவோம்! சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

மதிமலர் வாடாமல் மைவிரல் வாள்வீசு! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

மதிமலர் வாடாமல் மைவிரல் வாள்வீசு! மழலையர் பாலுக்கு அழுது ஏங்க, மறுசிலர் மதுவினால் வயிறு வீங்க, முதியவர் நோய்நீக்கும் மருந்து வாங்க, முடியாமல் முதுமையில் சுருண்டு தூங்க, முடைநாற்ற அரசியல் செழித்து ஓங்க, மங்கையர் மனத்துயர் மேலும் ஓங்கும்! மண்குடிசை வீட்டுக்குள் பாம்புகள் ஓட, மாளிகை முற்றத்தில் தோகைமயில் ஆடும்! மழைவளம் இல்லாமல் மண்வயல் வாட, மந்திரிகள் வீட்டிலோ பொன்னூஞ்சல் ஆடும்! மனநலம் திரிந்துலவி மேன்மக்கள் வாட, மணிமுடி தரித்தவர் மீத்தேனை நாட, மட்கலம் போலுடைந்து நொறுங்கும் தமிழா! மதிமலர் வாடாமல் எழுந்து வா!…

அரசியல் மந்திரம் கற்போம்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

அரசியல் மந்திரம் கற்போம்! தகதிமிதோம்! தகதிமிதோம்! அரசியல் மந்திரம் கற்போம்! தமிழகங் காக்கத் துடித்தெழுந்து, தரங்கெட்ட அரசியல் மாய்ப்போம்! தகதிமிதோம்! தகதிமிதோம்! விரைவினில் மாற்றம் காண்போம், மிகமிகும் மனதின் சீற்றங்களால், சுகம்மிகும் மாற்றம் காண்போம்! தவறென்று தெரிந்தும் திருந்தாத, துரியோ தனகுணத் தலைவர்களும், துச்சா தனகுணத் தடியர்களும், தமிழன்னை மடியில் கைவைத்து, துகிலினை உரித்துத் தெருவில் நிறுத்தி, தொடைதட்டிப் பங்கம் செய்யும் பொழுதும், தலைகுத்தி நின்றால் தாரணி பழிக்கும்! தமிழன்னை சாபம் நம்மை அழிக்கும்! தகதிமிதோம்! தகதிமிதோம்! தீந்தமிழ் நாட்டைக் காப்போம், நெருப்புடன் மோதும்…

நெளவிய ஆட்சி நலமுடன் மலரும்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

நெளவிய ஆட்சி நலமுடன் மலரும்!   ஒவ்வொரு முறையும் இம்முறை யாவது, செவ்விய நல்லாட்சி அமையும் என்றெண்ணி, இங்கொரு முறையும் அங்கொரு முறையும், அவ்விய வாக்கினை அளித்து ஏமாந்து, கவ்விய இருளில் கலங்கும் தமிழா! செந்தமி ழுணர்வுடன் தமிழர் ஒன்றாகி, ஒன்றுக்குப் பலமுறை சிந்தித்து வாக்கினை, இம்முறை சரியாய் அளித்தால் உடனே, நெளவிய ஆட்சி நலமுடன் மலரும்! [நௌவிய = நவ்விய  = அழகிய] சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு

  இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு   சித்திரை 24 & 25, 2047  /  மே 07 & 08, 2016 மகாத்மா காந்தி ஆசிரமம், ஆனைமலை, பொள்ளாச்சி, கோயம்புத்தூா் (மாவட்டம்) இரண்டு நாட்களும் காலை, நண்பகல், இரவு உணவு, தங்குமிடம், பயிற்சிக் கட்டணம் அனைத்தும் முற்றிலும் இலவசம்.   நண்பர்களே!   இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு  மேற்குறித்தவாறு, மே மாதம் 7,8  நாள்களில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) கோயம்புத்தூா் (மாவட்டம்)…

கூரிய ஆயுதமது கைவிரல்தான்! – சச்சிதானந்தன் தெய்வசிகாமணி

கூரிய ஆயுதமது கைவிரல்தான்! காரியம் முடிந்தவுடன் கைகழுவும் கயவர்மேல், காரி உமிழ்ந்தாலும் தவறில்லை உமிழுங்கள்! சீரிய சிந்தனையில் சமநிலையைக் கொள்ளுங்கள், சீறிடும் கோபத்தை நெஞ்சுக்குள் வையுங்கள், கூரிய ஆயுதமது கைவிரல்தான் காணுங்கள், குறிவைத்துச் சரியாக அதைநீங்கள் பாய்ச்சுங்கள், வீரியம் இல்லாத விதைகளை விலக்கிவிட்டு, வறுமையை நீக்கும்நல் விதைகளை விதையுங்கள்! திராவிடன் தமிழனெனும் வாதத்தைக் கடந்து, தீரமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட நல்ல, தூயவன் யாரென்று தெளிவாக உணருங்கள்! தயக்கம் இல்லாமல், தாமதம் செய்யாமல், தமிழர்க்குத் தலைவனென அவனை ஆக்குங்கள்! சச்சிதானந்தன் தெய்வசிகாமணி

தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க! – (உ)லோக நாதன்

தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க! தமிழே ஆதித் தாயே வாழ்க! தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க! தமிழ் நாட்டுக்கும் பிற நாட்டுக்கும் அமிழ்தாய் அமைந்த ஐயா வாழ்க! ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப் பாரில் தமிழன் நானே என்னும் சீரைத் தந்த தமிழே வாழ்க! ஓரா உலகின் ஒளியே வாழ்க! (உ)லோக நாதன்

தலைவன் என்றே நினைக்காதே! – சச்சிதானந்தன் தெய்வசிகாமணி

தலைவன் என்றே நினைக்காதே! அன்னையின் கருவில் சிதைவுற்றுப் பிறந்த, பிண்டம் போலக் கிடக்காதே! உன்னையும் தெருவில் நிறுத்தும் ஒருவனை, தலைவன் என்றே நினைக்காதே! மந்தையில் நரிஎனப் புகுந்திடும் நீசர்கள், மண்டையை உடைக்கவும் தயங்காதே! சந்தையில் மறியென வாக்கிற்கு உயரிய, விலை வைப்பார்கள் வீழாதே! சந்தனம் என்றே சொல்லிச் சொல்லி, சேற்றை வாரி இறைப்பார்கள்! உன்தடம் அழித்து உரிமையைப் பறிக்க, ஊளை இடுவார் மயங்காதே! பந்தயக் குதிரையைப் போலத் தேர்தலில், பாய்ந்திடும் தலைவர்கள் எல்லாரும், உன்முதுகேறி ஓடுகிறார்! அதில், பொய்முகம் கொண்ட பேயர்களை, பின்முதுகாம் புற…

செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை! – தமிழ நம்பி

செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை! நீயே, செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை! ஆயநற் றமிழ்வாழ் அருந்தூய் நெஞ்சினை! வெம்புலி உறுமலில் வேழப் பிளிறலில் செம்மை சேருயர் செழுந்தமிழ் காத்தனை! உறங்கிக் கிடந்த ஒருதனித் தமிழினம் இறவா மொழியால் எழுந்திடப் பாடினை! ஒற்றைத் தனியாய் ஒண்டமிழ் ஏந்தி முற்றுவல் லுரத்தொடு மும்முர உறுதியில் தளர்நெகிழ் வின்றித் தாக்கிப் பொருதை! கிளர்ந்தெழ முழக்கியித் தமிழரை முடுக்கினை! புதுவை பொரித்த புரட்சிக் குயிலே! எதுவும் யாரும் இணையுனக் கில்லை! ‘முனைதமிழ்க் கொருசிறு தினைத்துணை நலஞ்சேர் வினைசா வெனின்அச் சாநாள்…

தவமைந்தர் பாவேந்தர் பணிகள் வெல்க! – கவிக்கோ ஞானச்செல்வன்

தவமைந்தர் பாவேந்தர் பணிகள் வெல்க! நீருக்குள் போட்டதொரு கல்லைப் போல நெஞ்சுக்குள் கிடந்ததொரு தமிழின் பற்றை ஆர்தடுத்து நின்றாலும் அஞ்சேன் என்றே ஆர்த்தெழுந்து மேலோங்கச் செய்த செம்மல்! பேருக்குத் தமிழென்று நெஞ்சில் வைத்துப் பேசுவதால் பயனொன்றும் இல்லை யென்று போருக்குப் புறப்படுவோம் தமிழுக் காகப் புறங்கொடோம் என்றறைந்த புரட்சிக் காரர்! மங்காத தமிழெங்கள் வளமும் வாழ்வும் மாநிலத்தில் தமிழ்க்கீடு மற்றொன்றில் றில்லை! சங்கேநீ முழங்கிதனை!தாழா இன்பம் தமிழின்பம் தனையன்றிப் பிறிதொன் றில்லை! மங்கைதரும் சுகங்கூடத் தமிழுக்கு கீடோ? மலர்மணமும் குளிர்நிலவும் கனியும் சாறும் செங்கரும்பும்…

ஏழுதமிழர் விடுதலை : நூல் வெளியீடு- கருத்தரங்கம்- ஆவணப்படத் திரையிடல், சிதம்பரம்

  கைது செய்தவர் சொல்கிறார்…உசாவல்(விசாரணை) அதிகாரிகள் சொல்கிறார்கள்.. தீர்ப்பளித்த நீதிபதி சொல்கிறார்.. உண்மை அறியும் குழு, நீதிமன்றம் நியமித்த  செயின்ஆணையம் சொல்கின்றன, இவர்கள் ‘ குற்றமற்றவர்கள்(நிரபராதிகள்)’என்று! மனித உரிமை ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.. ஊடகவியலாளர்கள் சொல்கிறார்கள்… நீதிபதிகள் சொல்கிறார்கள்.. மக்கள்நாயக  ஆற்றல்கள், அரசியல் கட்சிகள், முற்போக்கு இயக்கங்கள் எல்லாரும் ஒரே குரலில் சொல்கிறார்கள், இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று! எதுவும் எங்களுக்குத் தேவையில்லை.. என்று திமிர்த்தனமாக இவர்களின் உயிர்பறிக்க துடிக்கிறது இந்தியா! காங்கிரசோ,  பா.ச.க.வோ கெசுரிவாலோ யாராயினும் ஏழுதமிழர் விடுதலை செய்யக்கூடாது என்னும் அவர்கள் நிலையில்…

இரு நாள் பெரியாரியல் பயிலரங்கம் – பவானி

சித்திரை 04, 2047 / 17.04.2016 ஞாயிறு & சித்திரை 05, 2047 / 18.04.2016, திங்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இடம்: தோப்பு துரைசாமி தோட்டம், காலிங்கராயன் அணைக்கட்டு , பவானி [இராயல்திரையரங்கம்  இரண்டாவது வீதி, கந்தன்  நெசவு(டெக்சு ) சாலை] திராவிடர் விடுதலைக் கழகம்