சட்டச் சொற்கள் விளக்கம் 501-510 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 491-500 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 501-510 501. acknowledge, doctrine of – ஒப்புகைக் கோட்பாடு இசுலாமியர் சட்டத்தில் இது தந்தைமை ஒப்புகையைக் குறிக்கிறது. மகவேற்புச்சட்டத்தில், ஏற்கப்பெற்ற குழந்தையின் பெற்றோரிடையே சட்டபூர்வச் சேர்க்கை இரு்நததாகக் கருதுவதன்அடிப்படையில் ஒப்புகைக் கோட்பாடு உள்ளது. இருப்பினும் உரிய குழந்தையின் பெற்றோரிடையே சட்டபூர்வச் சேர்க்கையின்றித் தகாப் புணர்ச்சியிலோ பரத்தமையிலோ பிறந்ததாயின் இது பொருந்தாது. 502. acknowledgement – ஏற்கை ஒப்புகை பெறுகை ஒப்பம்ஒப்புகைசீட்டுஏற்றுக்கோடல் ஒன்றின் முதன்மையை அல்லது சிறப்பை அல்லது ஒருவரின்…

அறிவுக் கதைகள் 1. கல்வியும் கல்லாமையும் & 2. கருமியும் தருமியும் – கி.ஆ.பெ.

(அறிவுக் கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: பதிப்புரையும் என்னுரையும்-தொடர்ச்சி) அறிவுக் கதைகள் கவிராசர் செகவீர பாண்டியனார் ஒரு பெரும் புலவர். கட்டபொம்மன் மரபிலே வந்தவர். மிகவும் சிறந்து விளங்கிய தமிழ்ப் பெருங்கவிஞர். ஒருநாள் மதுரையிலே நான் அவருடன் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், சிற்றுாரிலிருந்து அவரைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அவரைக் கண்டதும் செகவீர பாண்டியர் என்னோடு பேசுவதை நிறுத்திவிட்டு,‘வாருங்கள், அமருங்கள், என்ன செய்தி?’ – என்று கேட்டார். அதற்கு அவர், ‘ஒன்றுமில்லை, தங்களைப் பார்க்க வந்தேன்!’ என்றார். ‘பார்த்தாயிற்றே; பின்…

சட்டச் சொற்கள் விளக்கம் 491- 500 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 481-490 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 491- 500 491. Achromatic (achromatically) எழுதப்பெறா   வாய்மொழியான எழுத்தில் வராததான நிறமற்ற சாயல் மற்றும் செறிவு இல்லா   இச்சொல் சட்டத்தில் எழுத்தாவணமற்ற வாய்மொழிக் கூற்றைக் குறிக்கிறது. எனவே, எழுதப்பெறா ஆவணம் எனலாம். 492. Acid எரி நீர்மம்எரிமம்   புளிமம் காடிப் பொருள்   அமிலம்     இந்தியத் தண்டனைச் சட்டம், 1860 குற்றவியல் சட்டம் (திருத்தச்) சட்டம், 2013 இன் பிரிவு 326(ஆ)…

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், திருவள்ளுவர் அறிவியற்கவிஞரா?

(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 1. அ. அறிவியற் கவிஞர் திருவள்ளுவர்- தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் திருவள்ளுவர் அறிவியற் கவிஞரா? ‘அறிவியல் கவிஞரே’(?) என்னும் வினாவிற்கு விடை காணப் புகுமுன் ஒரு குறிப்பை எழுத வேண்டும். அக் குறிப்பு ஒரு நூலாசிரியன் தவறாது கொள்ள வேண்டிய நெறி பற்றியதாகும். அந்நெறி மொழி நெறி. இந்நூலின் தொடக்கம் முதல் இதுவரையும் சான்றுகளின் அழுத்தமாகச் சொல் அமைப்புகள் காட்டப் பட்டுள்ளன. இனியும் அவ்வாறு மேற்கொள்ளப்படும். தமிழ்ச் சொல் கட்டுக்கோப்பான அமைப்புடையது. சொல்லின் மூலம் ஆணிவேர் போன்றது. அந்த ஆணி வேரில்…

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 12. அனைய கொல்!

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 11. திருமுருகாற்றுப்படை- தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம்  9. அனைய கொல்! அறம் பொருள் இன்பம் என்ற மூன்றன் இயைபினை உள்ளவாறு உணர்ந்து அவற்றிற்குரிய மதிப்பளிக்கும் உள்ளம் உடைய ஓர் உயர்குலப் பெண், கார் காலத்து மாலைப் பொழுதில் தலைவாயிற்கண் யாருடைய வருகையையோ ஆவலோடு எதிர் நோக்கிக் கால் கடுக்க நின்று கொண்டிருந்தாள். அவள் கணவன் பெருவணிகர் குடியில் வந்தவன்; அதனால் விழுநிதி ஈட்டும் விருப்பம், அவன் உள்ளத்தில் இயல்பாக ஊறிக் கிடந்தது என்றாலும், அவன், அப்பொருளொன்றே…

சட்டச் சொற்கள் விளக்கம் 481-490 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 471-480 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 481-490 481.  accusation குற்றச்சாற்று குற்றச்சாட்டு   குற்றம் சுமத்தல்   சட்ட நடவடிக்கைக்குரிய தீங்கையோ குற்றத்தையோ ஒருவர் செய்திருக்கிறார் அல்லது சட்டப்படி செய்யவேண்டியதைச் செய்யாதிருக்கிறார் என அவர்மீது சாட்டுவதே குற்றச்சாட்டுரை அல்லது குற்றச்சாட்டுரை ஆகும். பொதுவாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரைக் குற்றவாளி என்றே எழுதியும் பேசியும் வருகின்றனர். குற்றஞ்சாட்டப்படுநரையும் குற்றம் மெய்ப்பிக்கப்பெற்றுத் தண்டனைபெற்ற தண்டனையரையும் இணையாகக் கருதக்கூடாது. 482. Accused appears to be in sound mind உசாவலின்(விசாரணையின்)…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 57 : தமிழினமும் குரங்கினமும்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 56 : மலையுறையடிகள் வாழ்த்திய காதை-தொடர்ச்சி) பூங்கொடிமலையுறையடிகள் வாழ்த்திய காதைதமிழினமும் குரங்கினமும் தமிழினம் என்றே சாற்றுதல் கண்டோம்;தாய்க்குரங் கொருகிளை தாவுங் காலைத்தாய்மடி பற்றுதல் தவறுமேல் குட்டியைக் 75குரக்கினம் தம்மொடு கொள்ளா தொழிக்கும்;மரக்கிளை வாழும் மந்தியின் மானம்நமக்கிலை அந்தோ! நாமோ மாந்தர்!மானம் பரவுதற் கானவை இயற்றுக; தாய்மையும் பொதுப் பணியும் பிணியற மருந்துகள் பெட்புடன் ஈய,அறியாக் குழவி அலறுதல் போல,அறியா மைப்பிணி அகற்றுதல் வேண்டிப்பெரியோர் நல்லுரை பேசுதல் கேட்டுச் 85சிறியோர் மருளுவர் சீறுவர்; அவர்தமைப்பொதுப்பணி புரிவோர் ஒதுக்குதல் இன்றித்தாய்மைப் பண்பே…

சட்டச் சொற்கள் விளக்கம் 461-470 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 451-460 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 461-470 461. accrue   –  உறு, சிறுகச் சிறுகத் தொகு  சேர்வுறு அடைவுறு  சேர்ந்தடை  வந்துறு உரிமையாகு உறு என்னும் சொல்லுக்கே மேற்குறித்த பொருள்கள் உள்ளன. இருப்பினும் உறுதல் என்பதை இணைப்புச்சொல்லாகவே பயன்படுத்துகிறாேம். திரட்டல் மூலம்  அல்லது  காலப்போக்கில் அல்லது நிதிப் பரிமாற்றம் காரணமாகப் பொருள் நிலை உயர்வது. திரட்டலுக்கு இரண்டு பொதுவான வரையறைகள் உள்ளன. சேமிப்பிற்கான வட்டி, வருமானம் அல்லது செலவுகளின் குவிப்பு. சட்டமுறைக் காரணம் அல்லது…

அறிவுக் கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: பதிப்புரையும் என்னுரையும்

அறிவுக் கதைகள் நூறு பதிப்புரை கதைகள் மலிந்த காலம் இது. கதை சொல்வோரும் பெருகியுள்ளனர். ஆனால் வெளிவரும் கதைகள் பெரும்பாலும் பொழுதுபோக்குக் கதைகளாகவும், அழிவுக் கதைகளாகவுமே விளங்குகின்றன. இது நாட்டிற்கு நன்மை தராத போக்கு என்று கருதுபவர் பலர். கதைகளை இனிமையாகச் சொல்லவும் வேண்டும்; அந்தக் கதைகளைக் கற்கும் பிஞ்சு நெஞ்சங்களிலே நல்லறிவுச் சுடர்களையும் ஏற்றவேண்டும். நல்லறிவு பெற்ற மக்களே நல்லவர்களாக விளங்குவார்கள் நல்லவர்கள் வாழும் நாடே நல்ல நாடாகவும் விளங்கும்; அந்த நல்லறிவின் வளர்ச்சிக்குக் கதைகள் பெரிதும் உதவும்.தமிழர்கள் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் நெறியோடு…

நினைவில் நிற்கும் ஆம்சுட்டிராங்கு!- இலக்குவனார் திருவள்ளுவன்

நினைவில் நிற்கும் ஆ ம்சுட்டிராங்கு! பகுசன் சமாசு கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராகவும் வழக்கறிஞராகவும் பலரது முன்னேற்றத்திற்கு ஏணியாகவும் திகழ்ந்த  ஆமிசுட்டிராங்கு(K.Armstrong)(18.01.2008/31.01.1977-21.06.2055/05.07.2024) படுகொலை செய்யப்பட்ட செய்தி பலருக்கும் அதிர்ச்சியையும் துயரத்தையும் அளித்துள்ளது. வளர்ந்து வரும் தலைவரான அவர் கொலையுண்டு மறைந்த செய்தி பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. அரசியல் தலைவர்களுக்குரிய நிறைகுறைகளைப் போல் செயற்பட்டுத் தொண்டர்களின் அன்பிற்குப் பாத்திரமாக விளங்கியவர். இவரைப்பற்றி அவ்வப்பொழுது நினைப்பதுண்டு. இப்பொழுது இவரின் துயர மறைவு அந்நினைவலைகளை எழுப்பியுள்ளது. அவருடைய அறிமுகம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. அவர் அப்பொழுது மயிலாப்பூரில்…

சட்டச் சொற்கள் விளக்கம் 471-480 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 461-470 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 471-480 471. Accumulative judgement   திரள் தீர்ப்பு   கூடுதல் தீர்ப்பு   மற்றொரு குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் தீர்ப்பு. முதல் தீர்ப்பின்படியான தண்டனை முடியும் வரை இரண்டாம் தீர்ப்பு செயலாக்கம் ஒத்திவைக்கப்படும். ஒரு வழக்கில் இரண்டு அல்லது மேற்பட்ட வெவ்வேறு குற்றச்செயல்களைப் புரிந்ததற்காக விதிக்கப்பெறும் தனித்தனி இரண்டு தண்டனைகள் ஒன்றன்பின் ஒன்றாகச் செயற்படும் என்று தீர்ப்பு வழங்கல். தொடரியல் தீர்ப்பு  என்கின்றனர். தொடர் என்பதை அறிவியல் போன்று…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 95 : அத்தியாயம்-60 : அம்பரில் தீர்ந்த பசி

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 94 : அத்தியாயம்-59 : திருவிளையாடற் பிரசங்கம்-தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-60 அம்பரில் தீர்ந்த பசி செங்கணத்திலிருந்து காரைக்குப் புறப்படுகையில் விருத்தாசலரெட்டியாரிடம் பாகவதம், கம்பராமாயணம், திருக்கோவையார். திருக்குறள்ஆகிய புத்தகங்களை இரவலாக வாங்கிப் போயிருந்தேன். பாகவதம் மாத்திரம்ஏட்டுப் பிரதியாக இருந்தது. காரையில் பகல் வேளைகளில் அவற்றையும்என்னிடமிருந்த வேறு நூல்களையும் படித்து இன்புற்றேன். பாகவதம்படித்தபோது முதல் கந்தமும் தசம கந்தமும் என் மனத்தைக் கவர்ந்தன. .கிருட்டிணசாமி ரெட்டியார் தெலுங்கு பாகவதத்தைப் படித்து அதிலுள்ளவிசயங்களைச் சொல்வார். தமிழ்ப் பாகவதத்திலுள்ள சில சந்தேகங்களைஅவர் கூறிய செய்திகளால் நீக்கிக்…