திருக்குறள் அறுசொல் உரை: 110. குறிப்பு அறிதல்: வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 109. தகை அணங்கு உறுத்தல் தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் அதிகாரம் 110. குறிப்பு அறிதல் பார்வை, செயல்களால், காதலியின் ஆழ்மனக் குறிப்பினை அறிதல் (01-10 தலைவன் சொல்லியவை)   இருநோக்(கு), இவள்உண்கண் உள்ள(து); ஒருநோக்கு       நோய்நோக்(கு),ஒன்(று) அந்நோய் மருந்து. இவளிடம் இருபார்வைகள்; ஒன்று, நோய்தரும்; மற்றுஒன்று, மருந்து.   கண்களவு கொள்ளும் சிறுநோக்கம், காமத்தில்       செம்பாகம் அன்று: பெரிது. காதலியின் கள்ளப் பார்வை, காதலில் பாதியைவிடப்…

மொய் எழுதும் பழக்கம் புதியதல்ல – மாணவி விசாலி : முகம்மது இராபி

மொய் எழுதும் பழக்கம் புதியதல்ல – மாணவி விசாலி  நூறு ஆண்டுகளுக்கு முன்பே மொய் எழுதும் வழக்கம் உள்ளதை ஓலைச்சுவடி மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த அரசுப் பள்ளி மாணவி விசாலி ஆவணப்படுத்தி உள்ளார்.   பேச்சு மொழியிலிருந்து எழுத்து மொழி உருவாகத்  தொடங்கியது முதல் மனிதர்கள் கல், பாறைகள், களிமண் பலகை,  மாழை(உலோக)த்தகடு, துணி, இலை, மரப்பட்டை, மரப்பலகை, தோல், மூங்கில் பத்தை, பனை ஓலை போன்றவற்றை எழுதக் கூடிய பொருட்களாகப் பயன்படுத்தினர்.   தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக பனை மரங்கள்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 40(2.10) பெரியாரைத் துணைக்கொளல்

  (வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 39(2.09).  தொடர்ச்சி)    மெய்யறம் இல்வாழ்வியல்   பெரியாரைத் துணைக்கொளல் பெரியா ரரியன பெரியன செய்பவர்; பெரியவர் என்பவர் செய்வதற்கு அரிய, மிக உயர்ந்த செயல்களைச் செய்பவர்; பொறியா ளுளத்தை யறிவா லாள்பவர்; மேலும் ஐம்புலன்களின் கட்டுப்பாட்டில் உள்ள மனத்தைத் தமது அறிவின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்; இகபர வியலெலா மெண்ணிநன் கறிந்தவர்; மேலும் இவ்வுலகத்தின் இயல்பினைப் பற்றியும் இறைவனைப்பற்றியும் நன்கு அறிந்து இருப்பவர்; 394.நல்லின வியலெலா நண்ணி நிற்பவர்; மேலும் நல்லினப் பண்புகளை எல்லாம் பெற்றிருப்பவர்; பின்னுறுந் தீங்கெலா முன்னறிந்…

அம்மணமா நிற்க வைத்து விசாரித்தால்தான் பிடிக்குமோ’! நளினி மீதான சித்திரவதையின் உச்சக்கட்டம்

 (இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும் 01 தொடர்ச்சி) ஏண்டி உன்னை அம்மணமா நிற்க வைத்து விசாரித்தால்தான் பிடிக்குமோ’! நளினி மீதான சித்திரவதையின் உச்சக்கட்டம்    ‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் இராசீவு கொலை வழக்கு குற்றவாளி நளினி எழுதியிருக்கும் புத்தகத்தின் இரண்டாவது பகுதி இது! ‘ஏண்டி உன்னை அம்மணமா நிற்க வைத்து விசாரித்தால்தான் பிடிக்குமோ’ என்று சொல்வதே அப்போதைக்கு அவர்களிடம் இருந்த ஓரளவு நாகரிகமான  தொடர் எனலாம். அதைவிட இன்னும் கொச்சையாக இருந்தன…

மறக்க முடியுமா? – புலவர் குழந்தை: எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? – புலவர் குழந்தை   அறிவில் முதிர்ச்சி, உணர்வில் முதிர்ச்சி, புலமையில் முதிர்ச்சி, பாக்களைப் புனைவதில் முதிர்ச்சி-ஆனால், பெயர் மட்டும் குழந்தை! புலவர் குழந்தை, ஈரோடு நகரத்திற்கு அருகில் ‘ஒல வலசு’ என்ற சிற்றூரைச் சேர்ந்தவர். தாயார் சின்னம்மை, தந்தை முத்துசாமி. ஆனி 18, 1937 / 1906ஆம் ஆண்டு  சூலை 1ஆம்  நாள் பிறந்த இவரின் கல்வி, திண்ணையில் தொடங்கி, 1937ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டம் பெறுவதில் போய் நின்றது. இவரின் வாழ்க்கை ஆசிரியர் பணியில்…

சிறந்தது தாய்ச்செல்வம் – கி.ஆ.பெ.விசுவநாதம்

  சிறந்தது தாய்ச்செல்வம்   செல்வம் பலவகைப்படும். “பதினாறும்’பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும்” என்று வாழ்த்துவதில் ‘பதினாறு பிள்ளைகள்’ என்று பொருளல்ல. அது மனை, மக்கள், தாய், நெல், நீர், நிலம், கால்நடை, கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், வலிமை, பொன், பொருள், போகம் என்பனவையாகும்.  இந்தப் பதினாறிலும் சிறந்தது தாய்ச்செல்வம். பிற செல்வங்களை இழந்து விடுவோமானால் முயன்றால் அவற்றைத் திரும்பப் பெற்று விடலாம். தாய்ச் செல்வத்தை இழந்து விட்டால் அதனை எவராலும் எவ்விதத்திலும் பெற முடியாது.  – முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்: ஐந்து செல்வங்கள்

இவை தொடர வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

  இவை தொடர வேண்டா!     கடந்த ஆட்சிகளில் காணப்பெறும் நிறைகளைப் பின்பற்றியும் குறைகளைக் களைந்தும் புதிய அரசு செயல்பட வேண்டும். அதற்குப் பின்வரும் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி தேவை. ‘நான்’ என்னும் அகந்தை எண்ணம். எல்லாமே முதல்வரின் செயல்பாடு என்ற மாயத்தோற்றத்தை  உருவாக்கல். காலில் விழும் ஒழுகலாறு. ஈழத்தமிழர்களை உரிமையுடன் வாழ விடாமை. அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் அஞ்சுதல். ஊழற் செயல்பாடுகளுக்கு முதன்மை அளித்தல். 7.அமைச்சர்களே முதலமைச்சரைப் பார்க்க  இயலாமை. முதல்வர் ஊடகங்களிலிருந்து விலகி நிற்றல். அமைச்சர்கள் தங்கள் துறை குறித்துக் கூறவும் வாய்ப்பூட்டு…

தமிழரின் பெருமை – அறிஞர் கால்டுவெல்

தமிழரின் பெருமை  குமரி முனைக்குத் தென்பால் உள்ள பெருநாட்டில் முதன் முதல் தோன்றி வாழ்ந்த நன்மக்களே ஒரு காலத்தில் இந்திய நாடெங்கும் பரவிய தமிழர் ஆவர். தமிழரை வடமொழியாளர் திராவிடர் என்று அழைத்தனர்.   குமரிக் கண்டத்தைக் கடல் கொண்ட பொழுது இவருள் சில பகுதியினர் கடல் வழியாகவும், நில வழியாகவும் பெலுசித்தான், மெசபடோமியா முதலிய வடமேற்கு ஆசிய நாடுகளில் சென்று வாழ்ந்தனர்.  – அறிஞர் கால்டுவெல்

இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா-நளினி சந்திப்பும் 01

1. குண்டு வெடித்த பிறகு தணு நடந்து போனார்!  ‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் நளினி முருகன் தனது எண்ணங்களை நூலாக ஆக்கி உள்ளார். இதழாளர் பா.ஏகலைவன் இந்த நூலைத் தொகுத்து எழுதியுள்ளார். நவம்பர் 24-ஆம் நாள் சென்னையில் இந்த நூல் வெளியிடப்பட்டது.   மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் எண்ணங்களை இந்த நூலில் நளினி சொல்லி இருக்கிறார். திகைப்பூட்டும் தகவல்கள் பல முதன்முறையாக வெளிவந்துள்ளன. அவற்றில் சில பகுதிகள் மட்டும் இங்கே! இருட்டறையில் இருந்து!…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 39(2.09). சிற்றினம் விலக்கல்

[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 38(2.08) தொடர்ச்சி]    மெய்யறம் இல்வாழ்வியல் 39. சிற்றினம் விலக்கல் சிற்றினங் குணத்திற் குற்றமிகு மாக்கள்; சிற்றினம் என்பவர் தனது குணநலன்களில் குறைகளை உடையவர்; பெருமிதந் தன்னைப் பேணா மாக்கள்; தன்னுடைய மதிப்பைப் பேணிப் பாதுகாக்க இயலாதவர்கள்; அற்பத் தன்மை யளாவிய மாக்கள்; சிறுமைக் குணங்களை விரும்புபவர்கள்; பொறியின் பங்களிற் செறிவுறு மாக்கள்; ஐம்புலன்களினால் கிடைக்கும் இன்பங்களில் தம்மை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்பவர்கள்; சுயநயங் கருதும் பயனிலா மாக்கள். தம் நலத்தையே எப்பொழுதும் எண்ணும் சுயநலம் உடையவர்கள் ஆகியோர் ஆவர். சிற்றினம்…

பன்னீர் தொடர்தலே சாலவும் நன்று! – இலக்குவனார் திருவள்ளுவன்

பன்னீர் தொடர்தலே சாலவும் நன்று!   மூன்றாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். ஆனால், முதலிரு முறையும் முதல்வர் என்ற பெயரில் இரண்டாமவராகத்தான் இருந்தார். இப்பொழுதுதான் உண்மையாகவே முதல்வராகவே பொறுப்பேற்றுள்ளார் எனலாம். எனவே, அவரது தனித்த செயல்பாடுகள் வெளிவருகின்றன.   ‘வருதா’ புயல் என்னும் பெரும் சூறைக்காற்றின் பொழுது எடுத்த நடவடிக்கையும், களத்திலிருந்து சிக்கல்களை எதிர்நோக்கி அலுவலர்களை ஒருங்குபடுத்தி ஆவன செய்தனவும் அனைத்துத் தரப்பாரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளன.   இப்பொழுது சிலர் சசிகலாவே தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர். ஆனால், அவர்…

மறக்க முடியுமா? : மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் : எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்     “தேவதாசி/தேவடியாள் (தேவ அடியாள்) ஆஃகா! என்ன திவ்வியமான திருப்பெயர்கள். தெய்வத்திற்குப் பக்தி சிரத்தையுடன் தொண்டு புரிபவளே தேவதாசி/தேவடியாள்.” “தேவதாசிகளின் மகிமையைத் தெரிந்து சாத்திரங்களைப் புரட்டிப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. யாரையாவது வைய வேண்டுமானால் ‘தேவடியாள் மகனே’ – அஃது ஒன்றே அவர்களுடைய தெய்வீக இலட்சணத்தை வெட்ட வெளிச்சமாக்கி நிற்கிறது”   “சாத்திரிகளைக் காட்டிலும், சத்தியமூர்த்தி சாத்திரிகள் ‘தேவதாசிகள் இருக்க வேண்டும், தேவதாசி முறையை ஒழிப்பது தெய்வ விரோதம்-சட்ட விரோதம்’ என்று கூச்சல் போட்டுப்…