இணையப் பதிவுகளில் இலக்குவனார் போற்றி! – நாம் தமிழர் சீமான் + தங்கம் தென்னரசு
தமிழ்ப்போராளி இலக்குவனாரை எப்போதும் தவறாமல் மறவாமல் போற்றும் செந்தமிழன் சீமான் புகழுரை ஐயா இலக்குவனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! – செந்தமிழன் சீமான் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முனைவர் பட்டம் பெற்ற முத்தமிழ்ப்பேரறிஞர்! அதுநாள்வரை மாணவர்கள் ஆங்கிலத்தில் கூறிவந்த வருகைப் பதிவை அன்னைத் தமிழில் “உளேன் ஐயா” என்று உரக்கச் சொல்ல வைத்த பெருமகன்! சங்கப் பாடல்களை முதன் முதலாகச் சிறுகதை, நாடகங்கள் வடிவில் உலகத்தமிழர் உள்ளங்களில் சேர்ப்பித்த இதழியல் முன்னோடி! தான் வகுப்பெடுத்த கல்லூரிகளில் எல்லாம் மாணவர்களுக்கு இனப்பற்றும் மொழிப்பற்றும் ஊட்டித் தன்னந்தனியனாக…
தமிழ் எழுச்சியின் சின்னமாகவும் இயக்கமாகவும் வாழ்ந்து காட்டிய பேரா. சி. இலக்குவனார்-தமிழ் வானம் சுரேசு
தமிழ் எழுச்சியின் சின்னமாகவும் இயக்கமாகவும் வாழ்ந்து காட்டிய பேரா. சி. இலக்குவனார் ”சலுகை போனால் போகட்டும் – என் அலுவல் போனால் போகட்டும் தலைமுறை ஒரு கோடி கண்ட – என் தமிழ் விடுதலை ஆகட்டும்” என்ற புரட்சிக்கவிஞரின் பாட்டு இலக்கணத்திற்கு இலக்கியமாகவும் தமிழ் எழுச்சியின் சின்னமாகவும் விளங்கியவர்தான் ‘இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர்’ என்று போற்றப்படும் பேரா. சி. இலக்குவனார். நாட்டு விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் புரட்சி நடத்திய போராளிகளை உலகம் அன்று முதல் இன்று வரை கண்டு வருகிறது. ஆயுதம் ஏந்தாமல் மக்கள்…
பேராசிரியர் புலவர் சி. இலக்குவனார் நினைவு நாள் இன்று (03-09-1973), விடுதலை
இந்நாள் – அந்நாள் Last updated: September 3, 2026 3:39 pm viduthalai பேராசிரியர் புலவர் சி. இலக்குவனார் நினைவு நாள் இன்று (03-09-1973) பேராசிரியர் சி. இலக்குவனார் தமிழறிஞர்கள் வரிசையில் தனித்தன்மையானவர். ஓய்வறியாத் தமிழ் பணியாளர். இலக்குவனார் தஞ்சாவூர் மாவட்டம் வாய்மேடு என்னும் கிராமத்தில் சிங்காரவேலர்– இரத்தினம் அம்மையார் ஆகியோருக்கு மகனாக 17-11-1909 அன்று பிறந்தார். உள்ளூர் தொடக்கப்பள்ளியில் படித்த அவர் பி.ஓ.எல் மற்றும் முதுகலை பட்டங்களையும் பெற்றார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் கற்றுத் தேர்ந்தவர். பகுத்தறிவு பேராசான்…
பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள்
பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள்! தமிழ்ப் போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாருக்கு அவரின் தமிழ்ப் பணிகளுக்காகவும் தமிழ்ப் புலமைக்காகவும் வழங்கப் பெற்ற விருதுகளும் பட்டங்களும் நூற்றுக்கு மேற்பட்டன. இந்த அளவிற்கு வேறு எந்த அறிஞரும் சிறப்பிக்கப் பெறவில்லை. அவரைப் பற்றிய 1.) இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர் 2.) குறள்நெறி பரப்பும் கொள்கை வீரர், 3.) குறள்நெறிக் காவலர், 4.) குறள்நெறிச் செம்மல் முதலிய பட்டங்கள் பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் புலமையையும் திருக்குறள் பணிகளையும் தெரிவிப்பன. குறள்நெறி அறிஞர் பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகளைப் பின்வரும் வகைப்பாட்டில் காணலாம். அ.) திருக்குறள்…
தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே! – இலக்குவனார் திருவள்ளுவன்
தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே! சட்டமன்றத்தில் மாண்பமை ச.ம.உறுப்பினர் சிந்து தனி(த் தொகுதி) என்னும் சொல் குறித்துப் பேசியுள்ளார். reservation என்னும் சொல்லிற்குத் தனி எனப் பொருள் இல்லை என்றும் பேசியுள்ளார். அச்சொல்லிற்குப் பொதுவாக ஒதுக்கீடு, பதிவு எனப் பொருள்கள் உள்ளன. எனினும் தனி ஒதுக்கீடு என்று அகராதிகள் குறிப்பதைக் காணலாம். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்களில் பட்டியலின (SC), பழங்குடியின (ST) மக்கள் தங்களின் சார்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பிற இனப் போட்டியாளர்கள் இன்றித் தங்கள் இனத்தவரே போட்டியிட வேண்டும் என்பதற்காக…
செல்வாக்கும் சொல்வாக்கும் – பி.அருணாசலம்
அங்குசம், செட்டம்பர் 02, 2026, பக்கம் 03
திருவளர்ச் செல்வன், திருவளர்ச் செல்வி சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி! அன்பு கெழுமிய அனைவருக்கும் வணக்கம். திருமண அழைப்பிதழ்களில் சிரேசுட்ட குமாரன், கனிசுட்ட குமாரத்தி என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள். தமிழில் மூத்த மகன், மூத்த மகள், இளைய மகன், இளைய மகள் என்று குறிக்கக் கூடாதா? மேலும் திருவளர்ச் செல்வன், திருவளர்ச் செல்வி எனக் குறிக்கின்றனர். திருவளர்ச்செல்வன் என்று குறித்தால் கடைசிக் குழந்தை என்று பொருள் என்கின்றனர். அவ்வாறெல்லாம் பொருள் கிடையாது. திரு என்றால் செல்வம், பெருமை எனப் பல பொருள்கள். திரு வளர் என்றால் திரு வளர்ந்த, திரு வளர்கின்ற,…
ல கரத்தை rh எனக் குறிப்பிடுவோம்!- இலக்குவனார் திருவள்ளுவன்
ல கரத்தை rh எனக் குறிப்பிடுவோம்! லகர, ளகர, ழகரங்களை ஆங்கிலத்தில் எவ்வாறு நாம் வேறுபடுத்திக் குறிக்கலாம்? தமிழில் இவற்றை நாம் எவ்வாறு குறிப்பிடுகிறோம் என முதலில் பார்ப்போம். ல – நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். இது ‘வ’ போல இருப்பதால் ‘வகர லகரம்’ என்கிறோம். எழுத்து மேல்நோக்கி முடிவதால் மேல்நோக்கு லகரம் என்றும் சொல்வர். ள – நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும்….
வெருளி நோய்கள் 1616-1620 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1611-1615 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1616-1620 பிறரின் பரந்த சிந்தனை குறித்த அளவுகடந்த பேரச்சம் பரந்த சிந்தனை வெருளி.Librophobia என்றால் சிலர் புத்தக வெருளி என்கின்றனர். இது தவறு. Libro என்பது புத்தகத்தைக் குறித்தாலும் புத்தகங்களைப் படிப்பதால் ஏற்படும் பரத்த சிந்தனையையே இங்கே குறிக்கிறது. புத்தகங்கள் மீதான பேரச்சத்தை நூல் வெருளி – Biblio phobia என்பர்.00 பரவிசை(pop music) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பரவிசை வெருளி.மக்களால் பரவலாக வரவேற்கப்படும் இசை வடிவம். எனவே பரவிசை எனலாம்.இசை வெருளி உள்ளவர்களுக்குப் பரவிசை…
திருக்குறள் பாதையில் முதல்வர் ச.சோ.விசய் – இலக்குவனார் திருவள்ளுவன்
– திருக்குறள் பாதையில் முதல்வர் ச.சோ.விசய் தமிழக முதல்வர் தமக்கு அறிமுகமானவர்களையே பொறுப்புகளில் அமர்த்துவதாகக் குறையாகக் கூறி வருகின்றனர். அண்மையில் முதல்வர், திரைப்படக் கல்லூரித் தலைவராக ஒளிப்பதிவாளர் மனோசு பரமஃகம்சா என்பவரை அமர்த்தியுள்ளார். இதற்குத் தம் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவரைத் தலைவராக அமர்த்தியுள்ளார்; நண்பரை அமர்த்தியுள்ளார் என்றெல்லாம் குறை கூறுகின்றனர். வேறு எதுவும் பழிச்சொல் கூற வழியில்லை என்பதற்காக இவ்வாறு கூறுகின்றனர் என நன்கு தெரிகிறது. ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும். (திருக்குறள், ௨௱௬௰௪ – 264) என்கிறார் திருவள்ளுவர்….
வெருளி நோய்கள் 1611-1615 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1607-1610 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1611-1615 பயனிலி வலைத்தளங்கள் தொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் பயனிலித்தள வெருளி.பயனிலித் தளம்(The Useless Website) என இப்பொழுது நூற்றுக்கு மேற்பட்ட தளங்கள் உள்ளன.தேவையற்ற தகவல்கைளத் தருவனவாகவும் பயனற்ற விவரங்களை அளிப்பனவாகவும் தவறான பொருள் விளக்கம் தருவனவாகவும் பல தேவையற்ற இணையத் தளங்கள் உள்ளன.இவற்றால் தவறாக வழிகாட்டப்படுவோம், தீய விளைவிற்கு ஆட்படுவோம் என்றெல்லாம் தேவையற்ற காரணமற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். பயனற்ற தளங்களை அடையாளங் கண்டால் முற்றிலுமாக அவற்றைப் புறக்கணிக்க வேண்டும்.00 சுற்றுலாப்பயணிகள் குறித்த தேவையற்ற பேரச்சம்…
வெருளி நோய்கள் 1607-1610 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1601-1606 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1607-1610 (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன்வெருளி அறிவியல் 3/5
