தூய்மையே செல்வம் – இலக்குவனார் திருவள்ளுவன்
தூய்மையே செல்வம் மழலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் சில பாடல்களின் மெட்டுகளில் சில பாடல்களைப் பார்ப்போம். பொதுவாக ஆங்கில மழலைப் பாடல்கள் பல ஒலிக் குறிப்புகளை அறியவே கற்பிக்கப்படுகின்றன. சில மட்டுமே பொருள் உள்ள பாடல்களாக உள்ளன. ஆனால் தமிழிலுள்ள குழந்தைப் பாடல்கள் யாவும் அறிவுரையாகவோ அறவுரையாகவோ அறிவியலுரையாகவோ அமைந்துள்ளன. இருப்பினும் தெரிந்த மெட்டின் அடிப்படையில் பாடல்களை அறிவது குழந்தைகளை ஈர்க்கும் என்பதால் பின்வரும் பாடல்கள் குறிக்கப் படுகின்றன. வாழ்க்கைக்கு அடிப்படை தூய்மை. மனத்தூய்மை வாய்மையால் அமையும் என்பார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். சுற்றுப்புறத்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 99 : மாளிகையில் இசை முழக்கம்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 98: கோமகன் வியப்பு-தொடர்ச்சி) பூங்கொடி மாளிகையில் இசை முழக்கம் பண்ணும் இசையும் பயில்வோர் ஒலியும், 80 தண்ணுமைக் கருவி தந்திடும் முழக்கும், தெரிதரு யாழில் விரிதரும் இசையும், முறிதரு கருவிகள் மோதுநல் லொலியும், காய்வேங் குழலின் கனிந்தநல் லிசையும், ஆய்நூற் புலவர் அறைந்தநாற் கருவியும், 85 கற்பார் மிடற்றுக் கருவியுங் கலந்து பொற்புடன் வழங்கும் புத்திசை வெள்ளம் மடாமிசைப் பிறந்து மறுகிடைப் பரந்தது; ஆடவர் பெண்டிர் அவ்விடை வழங்குநர் செவியகம் பாய்ந்து…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 98: கோமகன் வியப்பு
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 97. இயல் 20. பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை தொடர்ச்சி) பூங்கொடி கோமகன் வியப்பு கள்ளவிழ் கோதை கழறிய உரைகேட் டுள்ளமும் உடலும் புழுங்கின னாகிக் கள்ளுண் டான்போற் கலங்கினன் செல்வோன், `காவயிம் வல்லான் கற்பனை தூண்டும் ஓவியம் என்ன உருவம் உடையள், 45 பாலும் பழமும் பஞ்சணை மலரும் நாலும் விழையும் நல்லிளம் பருவம், வேலும் வாளும் மானும் விழியள், காமக் கோட்டத்துக் கடவுட் சிலையிவள் வாமக் காளையர் வழிபடு தெய்வம், 50…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 97. இயல் 20. பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 96: ஒருதலைக் காமம் – தொடர்ச்சி) பூங்கொடி இயல் 20. பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை கோமகன் வஞ்சினம் கலங்கிய கோமகன் கனலும் நெஞ்சினன் இலங்கிழை நல்லாள் எழில்விழிப் பூங்கொடி சொல்லிய மாற்றம் சுடுநெருப் பாகிக் கொல்லுவ தென்னக் கொடுந்துயர்ப் படுத்தப் பொறாஅ மனத்தினன், புந்தி மயங்கி 5 மறாஅ மனத்தொடு மணங்கொள இயைவள் எனாஅ நினைந்தேன் எற்பழித் தொதுக்கினள்; தருக்கிய பூங்கொடி செருக்கினை யடக்கி வருத்துமவ் வொருத்தியை வாழ்க்கைத் துணையெனக் கொள்ளா தொழியேன்…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 18 : உயர்வை இலக்காகக் கொண்டு உரிய பயன் பெறுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 17 : பிறருக்கு உறவாகவும் ஊக்கமாகவும் இருப்போம்! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 18 உயர்வை இலக்காகக் கொண்டு உரிய பயன் பெறுவோம்! “யானை வேட்டுவன் யானையும் பெறுமே;குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே” புறநானூறு 214 : 4-5 பாடியவர்: கோப்பெருஞ் சோழன்திணை: பொதுவியல்துறை: பொருண்மொழிக் காஞ்சிசொற்பொருள்: பூழ் = சிறு பறவை; காடை (ஒருவகைப் பறவை) “உயர்ந்த இலக்கு வெற்றியைத் தரும், தாழ்ந்த இலக்கு தோல்வியைத்…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 17: பிறருக்கு உறவாகவும் ஊக்கமாகவும் இருப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை –16 தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 17 பிறருக்கு உறவாகவும் ஊக்கமாகவும் இருப்போம்! உள் இலோர்க்கு வலியாகுவன்கேள் இலோர்க்குக் கேளாகுவன் புறநானூறு 396 : 10-11 பாடியவர்: மாங்குடி கிழார்.பாடப்பட்டோன்: வாட்டாற்று எழினியாதன்.திணை: பாடாண்.துறை: கடைநிலை. மன்னன் எழினியின் மகன் ஆதன் எழினியாதன் எனப்படுகிறான். உள் = மனவெழுச்சி (ஊக்கம்). வலி = பற்றுக்கோடு (ஆதரவு), வலிமை. கேள் = உறவு. வாட்டாறு என்னும் பெயருடைய ஓர் ஊர்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 96: ஒருதலைக் காமம்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 95: பூங்கொடியை அடையும்வழி -தொடர்ச்சி) பூங்கொடி எள்ளத் தனையும் எழுச்சியில் விழாஅது தெள்ளத் தெளிந்து திருமணம் ஒரீஇ இனமும் மொழியும் ஏற்றமுற் றோங்க மனம்வைத் துழைத்திட வாழ்வு கொடுத்துளேன், அருளறம் பூண்டது குறளகம், ஆதலின் 290 தெருளும் அனையொடு சேர்ந்தவண் உறைவேன்; ஒருதலைக் காமம் நிறைஎனப் படுவது இருதிறத் தார்க்கும் பொதுவென நினையாப் புன்மனம் தாங்கி ஆடவர் திரியின் யானென் செய்வல்? ————————————————————— முரணினர் – மாறுபட்டனர், உரி – தோல்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 95: பூங்கொடியை அடையும் வழி
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 94: வஞ்சியின் எழுச்சியுரை-தொடர்ச்சி) பூங்கொடி பூங்கொடியை அடையும்வழி `வேங்கை நகரெனும் வியன்பெரு நகரினுள் பூங்கொடி புகுந்து புதுமைத் தமிழிசை ஆங்கண் வருவோர்க் கன்புடன் பயிற்றி நின்றனள்; நீயும் சென்றவட் குறுகி ஒன்றிப் பழகி உயர்தமிழ் இசைபயில் 235 ————————————————————— எய்யாது – சளைக்காமல், ஒய் – விரைவுக்குறிப்பு. ஒல்கா – அடங்காத, கனல – எரிக்க. ++++++++++++++++++++++++++++++++++++++++ குழுவில் இடம்பெறு, கொக்கென நடந்திரு, பழகுறும் பாவையின் நற்பதம் நோக்கி நழுவா வகையில் நயந்துரை…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 94: வஞ்சியின் எழுச்சியுரை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 93: கோமகன் நிகழ்ந்தன கூறல்-தொடர்ச்சி) பூங்கொடி வஞ்சியின் எழுச்சியுரை கருதிய காதற் களந்தனில் நீதான் ஒருமுறை இறங்கினை, திரும்பினை வறிதே! 180 காதல் எளிதெனக் கருதினை போலும் சாதல் எய்தினும் சலியா துழைப்பின் விரும்பிய வெற்றி அரும்புவ துறுதி; நால்வகை முயற்சியும் நயவா தொருமுறை தோல்வி கண்டுளம் தொய்ந்தனை யாயின் 185 ஆண்மை என்றதை அறைதலும் உண்டோ? நாண்மடம் பூண்ட நங்கையர் தம்மனம் எளிதாய் இசைந்திடின் பெண்மையும் ஏது? மறுத்தும் வெறுத்தும்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 93: கோமகன் நிகழ்ந்தன கூறல்
( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 92 : வஞ்சியின் வஞ்சினம்- -தொடர்ச்சி) பூங்கொடி 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை கோமகன் நிகழ்ந்தன கூறல் இழுக்கல் நிலத்திடை இடர்ப்பட் டேகுவோன் வழுக்கல் தவிர்க்க வாய்த்தகோல் இவளென 135 வஞ்சிக் குரைப்போன், முகுந்தன் வாய்மொழி தன்செவி கேட்டுத் தென்புலப் பொழிலுட் பூங்கொடி காண்பான் போய்ப்புகுந் ததூஉம், தாங்கா வேட்கை தாங்கவோன் றன்னைக் கண்டு வெரீஇக் கற்றோர் பலர்தாம் 140 மண்டும் படிப்பகம் மங்கைபுக் கதூஉம், மெல்லியல் அல்லியை…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 92 : வஞ்சியின் வஞ்சினம்
( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 91 : பருவம் பாழ்படுவதா? -தொடர்ச்சி) பூங்கொடி 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை வஞ்சியின் வஞ்சினம் பிணைவிழி மாதின் பெறலரும் இளமை அணையிலாப் புனலென ஆகிட ஒவ்வேன்; இவள்நலம் விழையும் இளவல் கோமகன் தவள மாளிகை சார்ந்தவற் கொண்டு 95 குறளகம் நீக்கிக் கொணர்வேன் அவளை; பெருமகன் தன்பால் பேதையைப் படுத்தல் அறமெனக் கொண்டேன், அதுமுடித் தமைவேன்; படுத்தே னாயின் பாழுயிர்ச் சுமையை விடுத்தே அமைவேன் வெற்றுரை அன்’றெனத் 100 —————————————————————…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 91 : பருவம் பாழ்படுவதா?
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 90 : 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை-தாெடர்ச்சி) பூங்கொடி 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை பருவம் பாழ்படுவதா? சிறியவள் இல்லறச் செந்நெறிப் படாஅது பருவமும் உருவமும் பாழ்படப் புறநெறி 55 கருதின ளாகிக் கழிவது முறையோ? தேடருங் குறிஞ்சித் தேனினைப் பாழ்செயும் மூடரும் உளரோ? முக்கனி யாகிய தேமாங் கனியும், தீஞ்சுவைப் பலவும், கொழுங்குலை வாழைச் செழுங்கனி யதுவும் 60 அழுங்கல் எய்திட விழுந்து புழுதியில் நைந்து சிதைவதில்…