கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 78 : எழிலியின் கையறுநிலை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 77 – தொடர்ச்சி) பூங்கொடி 16. எழிலியின் வரலாறறிந்த காதை – தொடர்ச்சி எழிலியின் கையறுநிலை `பெயருங் கூத்தன் பெருவளி தன்னால் உயர்கலம் மூழ்கி உயிர்துறந் தான்’என உயிர்பிழைத் துய்ந்தோர் வந்தீங் குரைத்த 60 கொடுமொழி செவிப்படக் கொடுவரிப் புலிவாய்ப் படுதுயர் மானெனப் பதைத்தனள், கதறினள்; துடித்தனள், துவண்டனள், துடியிடை கண்ணீர் வடித்தனள், `என்னுடை வாழ்வில் வீசிய பெரும்புயல் விளைத்த துயரம் பெரிதே! 65 மாலுமி இல்லா மரக்கலம் ஆகிப்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 77: 16. எழிலியின் வரலாறறிந்த காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 76 : தமிழிசை தழைக்கும் – தொடர்ச்சி) பூங்கொடி 16. எழிலியின் வரலாறறிந்த காதை இசைச் செல்வி கன்னித் தமிழின் நன்னலங் காப்போய்! தன்னலம் விழையாத் தையல் எழிலிதன் திறமுனக் குணர்த்துவென் செவ்விதிற் கேண்மோ! அறமனச் செல்வி, அழகின் விளைநிலம் எழிலி எனும்பெயர்க் கியைந்தவள், அவள்தான் 5 இசையால் உறுபே ரிசையாள், பிறமொழி இசேயே பாட இசையாள், தமிழில் ஒன்றெனும் இயலும் ஓதித் தெளிந்தவள், மன்றினில் நிறைவோர் மகிழ்ந்திடப் பாடலில் ஒன்றிய பொருளின்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 76 : தமிழிசை தழைக்கும்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 75 – தொடர்ச்சி) பூங்கொடி 15. இசைத்திறம் உணர எழுந்த காதை- தொடர்ச்சி தமிழிசை தழைக்கும் ஆதலின் அன்னாய்! அத்துறை அனைத்தும் ஏதிலர் தமக்கே இரையா காமல், 80 தாய்மொழி மானம் தமதென நினையும் ஆய்முறை தெரிந்த ஆன்றோர் தாமும் உயிரெனத் தமிழை உன்னுவோர் தாமும் செயிரறத் தமிழைத் தெளிந்தோர் தாமும் புகுந்து தமிழிசை போற்றுதல் வேண்டும்; 85 தகுந்தோர் புகின்அது தழைத்திடல் ஒருதலை; கூத்தும் பரவுக கூத்தும் அவ்வணம்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 75 : அடிகளார் வருகை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 74 – தொடர்ச்சி) பூங்கொடி 15. இசைத்திறம் உணர எழுந்த காதை- தொடர்ச்சி எழுவாய்! எழுவாய்! இன்றே எழுவாய்! தொழுவாய் அவளைத் துணையென நினைவாய்! 50 வழுவா மகளே! வாழிய பெரிதே’ என்றவள் வாழ்த்தி இருந்தனள் ஆங்கண்; அடிகளார் வருகை நன்று நன்றென நங்கையும் இயைந்தனள்; அவ்வுழி அடிகள் வருகை தந்தனர் செவ்விய மங்கையர் செங்கை கூப்பி 55 நிற்றலும் அவர்தமை நேரியர் வாழ்த்திப் `பொற்றொடி யீர்!நாம் புறக்கணிப் பாக விடுதல்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 74 : 15. இசைத்திறம் உணர எழுந்த காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 73 : ஏமகானன் தூண்டு மொழி-தொடர்ச்சி) பூங்கொடி இசைத்திறம் உணர எழுந்த காதை அடிகளார் ஆணை பூங்கொடி யாகிய பொற்புடைச் செல்வி ஆங்கண் மீண்டதும் அருண்மொழிக் குரைப்போள் `மீனவன் திறமெலாம் விளம்பித் தமிழால் ஆன நல்லிசை யாண்டும் பரவிடச் சுவடியின் துணையால் தொண்டியற் றென்று 5 தவறிலா அடிகள் சாற்றினர்’ என்றனள்; அருண்மொழியும் இசைதல் `ஆம்என் மகளே! அதூஉஞ் சாலும் தோமறு தமிழிசை துலங்குதல் வேண்டி மீண்டும் அப்பணி மேவுதல் வேண்டும்; பூண்டநல்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 73 : ஏமகானன் தூண்டு மொழி
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 72 : தங்கத் தேவன் கொதிப்புரை-தொடர்ச்சி) பூங்கொடி ஏமகானன் தூண்டு மொழி தங்கத் தேவன் தகவல் அறிந்ததும் `எங்குஅத் தீயவன் ஏகினும் ஓயேன்; யாங்குறின் என்ன? வேங்கையின் பகையைக் 180 கிளறி விட்டவன் கேடுறல் திண்ணம்; ————————————————————— கட்படு – கண்ணில்படும், செகுத்து – அழித்து, முனம் – முன்பு. ++ உளறித் திரியுமவ் வுலுத்தன் தலைதனைக் கொய்தமை வேன்’எனக் கூறி முடிக்கக் கைதவன் ஏம கானன் கயவனும் `நிற்பகை கொண்டோர்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 72 : தங்கத் தேவன் கொதிப்புரை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 71 : ஏமகானன் பாராட்டுரை-தொடர்ச்சி) பூங்கொடி தங்கத் தேவன் கொதிப்புரை `வடபுலப் பெரியோய்! வாட்டம் தவிர்தி! வடமொழி வெறுத்து வழுத்தமிழ் கோவிலில் இடம்பெற முயலும் இழிமகன் செருக்கினை அடக்கிட அழைத்தேன், கோவிலில் தமிழ்புகல் விடத்தகு செயலோ? தடுத்திடல் வேண்டும்; 145 மந்திர மொழியை வடமொழி தவிர்த்துச் செந்தமி ழாற்சொலின் செத்து மடிகுவர்; கோவிலைத் தொலைக்கஇக் குறுமகன் இப்பணி மேவினன் போலும், மிடுக்கினைத் தொலைப்போம்; தேவ பாடையின் சிறப்பினை நாட்டுவோம்; 150 யாவரும்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 71 : ஏமகானன் பாராட்டுரை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 70 : மீனவன் சங்கம் புகுதல்-தொடர்ச்சி) பூங்கொடி ஏமகானன் பாராட்டுரை திசைதொறும் சென்று தன்புகழ் நிறீஇ விருதுபல கொண்டு வெற்றிக் களிப்பொடு வருவோன் ஒருவன் வடபுலத் திசைவலான் ஏம கானன் எனும்பெயர் பூண்டோன் 105 தோமறு மீனவன் தொண்டும், தமிழிசைப் புலமையும், அவன்பெரும் புகழும் செவிமடுத்துக் கலைமலி காளையின் கண்முன் தோன்றி `உரவோய்! இளமையில் ஒருதனி நின்றே இரவாப் பகலாத் திறமுடன் ஆற்றும் 110 நின்னிசைப் பணிக்கு நெடிதுவந் தனனே, என்னிசைப்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 70 : மீனவன் சங்கம் புகுதல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 69 : சங்கப் புதையலும் – சிலம்பின் சான்றும்-தொடர்ச்சி) பூங்கொடி மீனவன் சங்கம் புகுதல் ஏதிலர் நம்மை இகழ்ந்துரை யாடநோதகச் சிலபல தீதுற் றழிந்தன;அந்தோ உலக அரங்குக் கொளிசெயுமநந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்! 60மண்ணக முதல்வி! எண்ணுநர் தலைவி!நண்ணுவ தேனோ நலிவுகள் நினக்கெனக்கண்கலங்கி நெஞ்சம் புண்ணடைந் திருப்ப,ஆங்கோர் பெருமகன் அவனுழை வந்துபாங்குடன் அவனுளப் பாடுணர்த் துரைக்கும்; 65`அயரேல் மீனவ! அறைகுவென் கேள்நீ!பயில்தரு மறவர் பாண்டிய மரபினர்சங்கம் நிறுவித் தண்டமிழ்ச் சுவடிகள்எங்கெங் குளவோ அங்கெலாம் துருவிததொகுத்து வைத்துளார்; மிகுந்தஅச் சுவடிகள்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 69 : சங்கப் புதையலும் – சிலம்பின் சான்றும்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 68 : 14. சுவடியின் மரபு தெரிவுறு காதை-தொடர்ச்சி) பூங்கொடி சங்கப் புதையலும் – சிலம்பின் சான்றும் இத்தகு பகைஎலாம் எதிர்த்துத் தப்பின பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்,அச் 25 சங்கப் புதையலும் சாமி நாதத் துங்கன் உழைப்பால் தோண்டி எடுத்தோம்; சிற்றூர் யாங்கணுஞ் சென்றுசென் றோடிப் பெற்றஅவ் வேடுகள் பெருமை நல்கின; இத்தொகை நூல்களும் புத்தக உருவில் 30 வாரா திருப்பின் வளமிலா மொழிஎன நேரார் பழித்து நெஞ்சம் மகிழ்வர்; நல்லோன்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 68 : 14. சுவடியின் மரபு தெரிவுறு காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 67 : கயவர் தாக்குதல்-தொடர்ச்சி) பூங்கொடி, கூடலில் மீனவன் பணி ஆங்கவன் றனக்குப் பூங்கொடி நல்லாய்!தீங்கொன் றுற்றது செப்புவென் கேண்மோ!கேட்குநர் உள்ளம் கிளர்ந்தெழும் பாடல்,நோக்குநர் மயக்கும் நுண்கலை ஓவியம்,கள்ளின் சுவைதரு காவியம் முதலன 5வள்ளலின் வழங்கினன் வருவோர்க் கெல்லாம்;அவ்வவர் திறனும் அறிவும் விழைவும்செவ்விதின் ஆய்ந்துணர்ந் தவ்வவர்க் குரியனபயிற்றினன், பயில்வோர் பல்கினர் நாடொறும்;மாணவன் ஐயம் செயல்திறம் நற்பயன் செய்துவரு காலை 10`இசையும் கூத்தும் இயம்பும் தமிழ்நூல்நசையுறும் ஓவியம் நவில்நூல் உளவோ?ஒருநூ லாயினும் உருவொடு காண்கிலேம்;எனஓர் ஐயம் எழுப்பினன் ஒருவன்;தமிழின் பகைகள்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 67 : கயவர் தாக்குதல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 66 : சாதி ஏது?-தொடர்ச்சி) பூங்கொடி கயவர் தாக்குதல் முரடர் சிலர்அம் மீனவன் முகத்தில் குருதி சிதறக் குத்தினர்; மயக்குறக் 185 கட்டவிழ்த் தேகினர்அக் கருணை மாந்தர்; சுட்டாற் செம்பொன் கெட்டா போகும்? முட்டாள் தடுக்க முற்படின் பயணம் தொட்டார் குறியிடம் விட்டொழி வாரோ? மயங்கினன் கிடக்கும் மகன்றனை வளர்த்தவன் 190 புயங்களிற் சுமந்து தன்மனை புகுந்தனன்; ————————————————————— தேலா – தோற்காத, வேட்டம் – வேட்டை, கோடு –…