நாலடி நல்கும் நன்னெறி 15: கேடு எண்ணாதே!  பொய் சொல்லாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 14:  நல்லோரும் தீயோர் பக்கம் சேர்ந்தால் தீயனவே விளைவிப்பர்! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 15 கேடு எண்ணாதே!  பொய் சொல்லாதே! தான்கெடினும், தக்கார்கே டெண்ணற்க தன்னுடம்பின்ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க – வான்கவிந்தவையகம் எல்லாம் பெறினும் உரையற்கபொய்யோ டிடைமிடைந்த சொல் (நாலடியார், பொறையுடைமை, 80) தான் கெடினும் – தான் கெடுவதாக இருந்தாலும், அஃதாவது தனக்குக் கேடு வருவதாக இருந்தாலும்;  தக்கார் கேடு எண்ணற்க –  அக் கேட்டினை நீக்கிக் கொள்ளும் பொருட்டுச் சான்றோருக்குக் கேடு செய்ய எண்ணாதே;  தன்…

என்றும் இணைந்து வாழ்வோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

என்றும் இணைந்து வாழ்வோம்!  (“அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்” என்னும் திரைப்பட மெட்டில் இதனைப் பாடலாம்.)  உலகெனும் வீட்டில் அனைவரும் உறவினர் என்று சேர்ந்து வாழ்வோம் – நாம் என்றும் சேர்ந்து வாழ்வோம் – இந்த வீடும், நாடும் கடந்த உலகம் ஒன்று என்று வாழ்வோம் – நாம் ஒன்று பட்டு வாழ்வோம்! நிறமென்ன உருவென்ன பிறப்பென்ன தொழிலென்ன எல்லாம் ஒன்று என்போம் எல்லாம் ஒன்று என்போம்! பகையில்லை போரில்லை இழிவில்லை தாழ்வில்லை என்று இணைந்து வாழ்வோம் – இனி என்றும் இணைந்து…

எண்ணமும் எழுத்தும் பேச்சும் படிப்பும் தமிழே! – இலக்குவனார் திருவள்ளுவன்

எண்ணமும் எழுத்தும் பேச்சும் படிப்பும் தமிழே! அனைவருக்கும் பிடித்த பாடல், (1857 இல் எழுதப்பெற்ற) “Jingle Bells” என்பதாகும். இந்த மெட்டிலான பின்வரும் பாடலைப் பிள்ளைகளுக்குச் சொல்லித்; தாருங்கள்; தமிழ்ப் பாலையும் கலந்து ஊட்டுவதாக அமையும்.   எண்ணுக எண்ணுக தமிழில் என்றுமே!                         எழுதுக எழுதுக தமிழில் எதையுமே!                         பேசுக பேசுக நல்ல தமிழிலே!                         பயிலுக பயிலுக நமது தமிழிலே!                         மொழியை மறந்தாலோ                               வாழ்வை இழப்போமே!                         வாழ்வை இழந்தாலோ                         நாமும் இல்லையே!                         நம்…

தமிழை வாழ்த்துவோம்! –  இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழை வாழ்த்துவோம்! “Yellow Ribbons” என்னும் பாடல் மெட்டில் பின்வரும் பாடலைச் சொல்லித் தாருங்கள். கடமைகளை அறிவதுடன் கன்னித்தமிழ் மீதான பற்றினையும் பெறுவார்கள்.      காலை எழுந்ததும் பாடம் படிப்போம்                         மாலை முழுவதும் ஆடிக் களிப்போம்                                                                         விளையாடிக் களிப்போம்                         பாரதி அன்று சொன்னதைக் கேட்டு நடப்போம்!                         பாடிஆடி மகிழ்ந்து நாம் கலையை வளர்ப்போம்-தமிழ்க்                                                                         கலையை வளர்ப்போம்!                         கூடுவோம் ஒன்றாய்க் கூடுவோம்!                         பாரதி அன்று சொன்னபடிக் கூடி ஆடுவோம்! – ஒன்றாய்க்                                                                              கூடி…

கைகள் இரண்டு ஊருக்குதவ  – இலக்குவனார் திருவள்ளுவன்

கைகள் இரண்டு ஊருக்குதவ குழந்தைகளுக்குக் கண், காது முதலிய புலனுறுப்புகளைச் சொல்லித் தர உதவும் பாடல். “Ten little fingers” என்னும் பாடல் முறையில் அமைந்தது. பாடிப் பாருங்கள். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். கைகள் இரண்டு ஊருக்குதவ                         கால்கள் இரண்டு நல்வழி நடக்க                         கண்கள் இரண்டு கனிவாய்க் காண                         செவிகள் இரண்டு கருத்தாய்க் கேட்க                         நிறைவாய்க் கேட்டுக் குறைவாய்ப் பேச                         வாயோ நமக்கு ஒன்றே ஒன்று!                         வாயோ நமக்கு ஒன்றே ஒன்று! குழந்தைகளுக்கு நாம் கடமைகளைச்…

மழை வீழட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

மழை வீழட்டும்! 1744 இல் எழுதப்பெற்ற “London Bridge Is Falling Down” என்றொரு மழலைப் பாடலை அனைவரும் அறிவர். “வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்” என்னும் கலைஞரின் கருத்தை இப்பாடல் முறையில் பொருத்திப் பாருங்கள். பின்வரும் இனிய பாடல் கிடைக்கும். வேண்டிய மட்டும் வீழட்டும்! – மழை வீழட்டும் வீழட்டும் – பாரில் வேண்டிய மட்டும் வீழட்டும்!              மழை                                                 எங்கெங்கும் வீழட்டும்!                         நீயும் நானும் வீழ்ந்தாலும் – தமிழ்                         வாழட்டும்! வாழட்டும்! – பாரில்                         நீயும்…

தூய்மையே செல்வம்  – இலக்குவனார் திருவள்ளுவன்

தூய்மையே செல்வம்   மழலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் சில பாடல்களின் மெட்டுகளில் சில பாடல்களைப் பார்ப்போம். பொதுவாக ஆங்கில மழலைப் பாடல்கள் பல ஒலிக் குறிப்புகளை அறியவே கற்பிக்கப்படுகின்றன. சில மட்டுமே பொருள் உள்ள பாடல்களாக உள்ளன. ஆனால் தமிழிலுள்ள குழந்தைப் பாடல்கள் யாவும் அறிவுரையாகவோ அறவுரையாகவோ அறிவியலுரையாகவோ அமைந்துள்ளன. இருப்பினும் தெரிந்த மெட்டின் அடிப்படையில் பாடல்களை அறிவது குழந்தைகளை ஈர்க்கும் என்பதால் பின்வரும் பாடல்கள் குறிக்கப் படுகின்றன.       வாழ்க்கைக்கு அடிப்படை தூய்மை. மனத்தூய்மை வாய்மையால் அமையும் என்பார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். சுற்றுப்புறத்…

காற்று இல்லா வானத்தைஅறிந்திருந்த பழந்தமிழர் – இலக்குவனார் திருவள்ளுவன்

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 20 காற்று இல்லா வானத்தைஅறிந்திருந்த பழந்தமிழர் நளி இரு முந்நீர் ஏணி ஆக,வளி இடை வழங்கா வானம் சூடியமண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்,முரசு முழங்கு தானை மூவர் (வெள்ளைக்குடி நாகனார், புறநானூறு, பாடல் 35, 1- 4) புலவர் வெள்ளைக்குடி நாகனார் சோழ வேந்தன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் வறட்சியில் வாடும் மக்களின் நன்மை கருதி வரியைத் தள்ளுபடி செய்யுமாறு வேண்டிய பாடல். இதற்கிணங்க வேந்தரும் வரியைத் தள்ளுபடி செய்தார். இப்பாடல் உழவின் சிறப்பையும் பல…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 98: கோமகன் வியப்பு

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 97. இயல் 20. பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை தொடர்ச்சி) பூங்கொடி கோமகன் வியப்பு           கள்ளவிழ் கோதை கழறிய உரைகேட் டுள்ளமும் உடலும் புழுங்கின னாகிக் கள்ளுண் டான்போற் கலங்கினன் செல்வோன், `காவயிம் வல்லான் கற்பனை தூண்டும்           ஓவியம் என்ன உருவம் உடையள், 45           பாலும் பழமும் பஞ்சணை மலரும் நாலும் விழையும் நல்லிளம் பருவம், வேலும் வாளும் மானும் விழியள், காமக் கோட்டத்துக் கடவுட் சிலையிவள்                   வாமக் காளையர் வழிபடு தெய்வம்,       50…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 97. இயல் 20. பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 96: ஒருதலைக் காமம் – தொடர்ச்சி) பூங்கொடி இயல் 20. பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை கோமகன் வஞ்சினம்           கலங்கிய கோமகன் கனலும் நெஞ்சினன் இலங்கிழை நல்லாள் எழில்விழிப் பூங்கொடி சொல்லிய மாற்றம் சுடுநெருப் பாகிக் கொல்லுவ தென்னக் கொடுந்துயர்ப் படுத்தப்                    பொறாஅ மனத்தினன், புந்தி மயங்கி     5           மறாஅ மனத்தொடு மணங்கொள இயைவள் எனாஅ நினைந்தேன் எற்பழித் தொதுக்கினள்; தருக்கிய பூங்கொடி செருக்கினை யடக்கி வருத்துமவ் வொருத்தியை வாழ்க்கைத் துணையெனக்             கொள்ளா தொழியேன்…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 18 : உயர்வை இலக்காகக் கொண்டு உரிய பயன் பெறுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 17 : பிறருக்கு உறவாகவும் ஊக்கமாகவும் இருப்போம்! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 18 உயர்வை இலக்காகக் கொண்டு உரிய பயன் பெறுவோம்!  “யானை வேட்டுவன் யானையும் பெறுமே;குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே”               புறநானூறு 214 : 4-5 பாடியவர்: கோப்பெருஞ் சோழன்திணை: பொதுவியல்துறை: பொருண்மொழிக் காஞ்சிசொற்பொருள்: பூழ் = சிறு பறவை; காடை (ஒருவகைப் பறவை) “உயர்ந்த இலக்கு வெற்றியைத் தரும், தாழ்ந்த இலக்கு தோல்வியைத்…

நாலடி நல்கும் நன்னெறி 12: நன்றியில் செல்வத்தை விரும்பாதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி :11.  நல்லன புரிந்து நற்கதி/நன்மை அடைவோம்! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 12: நன்றியில் செல்வத்தை விரும்பாதீர்! அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும் கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால் செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை நள்ளார் அறிவுடை யார்.  நாலடியார்  பொருட்பால் – இன்ப இயல் – நன்றியில் செல்வம் 262 அதிகாரத் தலைப்பு விளக்கம்: “நன்றியில் செல்வம்” என்றால், பிறருக்கு உதவாத, அல்லது பயனில்லாத செல்வம் என்று பொருள்.  ஒருவரிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும், அதை அவர்…

1 2 39