புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.11-15

(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 6-10 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் பெருவளநாடு 11.அம்மலைத் தெற்கி னணிமுகில் மேயும் செம்மலை வீழ்க்குந் திரடொடர் மேய பன்மலை யோடு பழந்தமிழ் நாட்டு மன்மலை யாத மணிமலை யோங்கும். 12.அத்தொடர்க் குன்றத் தருமக வாகி முத்தமி ழாளர் முதுநெறி போலப் பத்தி யறாதுசெல் பஃறுளி யாறு புத்துண வாக்கிப் புதுவிருந் தாற்றும். 13.மைளம் பட்ட வளக்கும் ரிக்கும் நொய்வளம் பட்டவைந் நூறுகற் றெற்கில் பைவளம் பட்டநீள் பஃறுளி யாறு…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1. தமிழகக் காண்டம், 2. தமிழகப் படலம். 6-10

(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 1-5 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் பெருவளநாடு 6. தன்கடன் குன்றித் தமிழகங் கொண்ட தென்கடல் முன்பு செழுந்தமிழ் நாடா நன்கட னாடு நனிவளந் தேங்கிப் பொன்கட னாடப் பொலிந்தது காணும்.   ++ கடல்நாடும் கடலும் விரும்பும், பொன் கடன்’ நாடக செல்வம் கடன் கேட்க, ++ 7. ஆயிரங் கல்லி னகன்ற பரப்ப தாயய னாட ரவாவுற, நீங்கிப் போயல ரேங்கப் பொலிவுறு செல்வம் தாயது பண்டக…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1. தமிழகக் காண்டம், 2. தமிழகப் படலம்

(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 31-37 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம்   வேறு 1. தெண்டிரை மூன்று திசையுனுங் காப்ப வண்டமிழ் விந்த மலைவடக் கார்ப்பப் பண்டுந முன்னர் பயன்பட வாழ்ந்த தண்டமிழ் வேலித் தமிழகங் காண்பாம்.   2. நனிமிகு பண்டுநர் நற்றமிழ்ச் செல்வி பனிமலை காறு. பகைசிறி தின்றி இனிதுயர் வெண் குடை நீழ லிருந்து தனியர சோச்சித் தமிழகங் காத்தாள்.   3. சீரியல் வாய்ந்த செழுந்தமி ழன்னை மாரி வழங்கும்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: பாயிரம், நூற்பயன் 31-37

(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 26-30 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம் 31-37 31.கொடுமை யாமனுக் கோதுடை யாரியக் கடிமை வாழ்வி னழுந்துவார்க் கென்செயும்? அடிமை வாழ்வி னகன்று விடுதலை அடைய மேவுந் தமிழர்க்கி தாகுமே. 32.தமிழர் தாழ்வு தனையெடுத் தோதியே தமிழர் வாழ்வு தனைநிலை நாட்டலான் தமிழ ரென்னு முணர்வு தலைப்படும் தமிழர் யாரும் தலைக்கொளு வாரரோ. ++ மேவுதல்–விரும்புதல் ++ 33.கோதி லாத குழந்தை குதலையைத் தீது நன்றெனத் தேர்வரோ பெற்றவர்? ஈது நந்தமி ழின்கதை யேயிதை ஓது நாவனு முங்கள்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: பாயிரம் 26-30

(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 21-25 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம் 26-30   26. மனையறத்தின் வகையமை காதலர் தனை நிகர்த்தவர் தம்மைத் தெரிவுறத் தினைநி கர்த்தள வேனுஞ் செயும்பயன் பனைநி கர்த்தவின் பத்தினைப் போற்றுவாம்.   அவை யடக்கம் 27. ஏசு வார்சிலர்; ஈதுண்மை யேயெனப் பேசு வார்சிலர்; பேச வெதிர்மனங் கூசு வார்சிலர்; கூக்குர லார்சிலர்; மாசி லாத்தமிழ் மாக்கதை கேட்கினே. 28. வழியெ தென்னும்; வரன்முறை மாற்றிய பழிய தென்னும்; பகைகொ டுரைவசை மொழிய தென்னு; முறைமை யிலாதவிஃ…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: பாயிரம்: அரசர் தொடர்ச்சி

(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 16-20 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம்  21-25 வேறு படியிடை முத்தமிழ்ப் பாவல ராகவும் கடியுடையத் தமிழகக் காவல ராகவும் வடிவுடை முதுதமிழ் மரபினின் மேவிய முடியுடை மூவர்தம் மொய்கழல் போற்றுவாம். இலங்கையை யடைதர இளையபாழ்ம் பாவியும் அலங்கியே யாரியர்க் கடிமையாய்ப் படையொடு தலங்கியே யெதிர்வரக் கண்டுமத் தமிழ்மனங் கலங்கிடா விறையவன் கழலிணை போற்றுவாம், வேறு கொண்டோன் களப்படவக் கொலைகார ஆரியருங் கண்டே யிரங்கக் கணவ னுடனவிந்து தண்டாத் தகையதரிழ்த் தாய்மானங் காத்துயர்ந்த வண்டார் குழலி மலர்ச்சிலம்பை வாழ்த்துவமே)….

இராவண காவியம்:பாயிரம்: புலவர், அரசர்

(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 11-15 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம் 16-20 16.ஒருது ளிகடு வுண்ணினும் பால் கெடும் பொருளை யாய்ந்தயற் புன்மையைப் போக்கியே பெருமை வாழ்வு பெறுதற் கவாவியே வருத னித்தமிழ் மக்களைப் போற்றுவாம். புலவர் 17.பலது றைத்தமிழ்ப் பாட்டு முரையுஞ்செய் துலக மின்புற வோதியுந் தாய்மொழிக் கலகி லாததொண்டாற்றிய முத்தமிழ்ப் புலவர் பொன்னடிப் போதை வணங்குவாம். 18.மூப்பி யன்றநம் முன்னவர் வாழ்விய லாப்ப யின்ற வொழுக்க மனைத்தையும் யாப்பி யற்படி நூல்செய் தனித்ததொல் காப்பி யப்பெரி யாரைக் கருதுவாம். வேறு…

இராவண காவியம்: பாயிரம்: தமிழகம், தமிழ்மக்கள்

(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 6-10 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம் தமிழகம்   11.பண்டு நம்மவர் பாத்துப் பலவளங் கண்டு சுற்றங் கலந்து கரவிலா துண்டு வாழ வுதவி யுலகவாந் தண்ட மிழகந் தன்னை வழுத்துவாம். 12.நினைத்த நெஞ்சு நெகிழகந் தாயகம் அனைத்து முண்டு யாழியோ டாரியம் இனைத்த ளவுட னின்றியாங் கண்டுள தனித்தி ராவிடத் தாயினைப் போற்றுவாம். தமிழ்மக்கள் ஒழுக்க மென்ப துயிரினு மேலதன் இழுக்கம் போலிழி வில்லை யெனுஞ்சொலைப் பழக்க மாக்கிப் பயின்று பயின்றுயர் வழக்க மாந்தமிழ் மக்களைப் போற்றுவாம்….

இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 6-10

(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 1-5 தொடர்ச்சி) இராவண காவியம் பாயிரம் தமிழ்த்தாய் (தொடர்ச்சி) 6.எழுத்துச் சொற்பொருள் யாப்பணி யைந்தினும் பழுத்த வாய்மொழிப் பாவலர் பண்புற இழைத்த பாத்தொகை எண்ணில வாய்வளந் தழைத்த முத்தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 7.ஞாயி றன்னசொல் நாவலர் வாய்ப்பிறந் தீயை வல்லோ ரிசையின் வளர்ந்துமுத் தூய சங்கத் திருந்த தொழுதகு தாயை நேர்தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 8.இனித்த பாலினுந் தேனினு மின்சுவைக் கலித்தொ கையினுங் கட்டிக் கரும்பினும் நினைத்த வாயுஞ்சொல் நெஞ்சு மினித்திடும் தனித்த மிழ்ப்பெருந் தாயினைப் போற்றுவாம். 9.கனைத்து…

இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 1-5

(இராவணகாவியம் – கதைச்சுருக்கம் தொடர்ச்சி) இராவண காவியம் பாயிரம் தமிழ்த்தாய் 1.உலக மூமையா யுள்ளவக் காலையே பலக லைப்பயன் பாங்குறத் தாங்கியே இலகி யின்றுநா னென்னு மொழிக்கெலாம் தலைமை யாந்தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 2.பின்னர் வந்து பிறந்து செருக்கொடு முன்னர் வந்த மொழிபல வீயவும், இன்னு மன்ன விளமைய தாயுள தன்னி கர்தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 3.கன்ன டந்தெலுங் கந்துளு வம்புயல் மன்னி மேவு மணிமலை யாளமாம் பொன்னின் மேனி திரிந்து பொலிவறு தன்னை நேர் தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 4.மூவர் மன்னர் முறையொடு…

புலவர் குழந்தையின் இராவணகாவியம் – கதைச்சுருக்கம் தொடர்ச்சி

(இராவண காவியம் கதைச் சுருக்கம் தொடர்ச்சி) இராவண காவியம் தொடர்ச்சி   சித்திரக் கூடத்தைவிட்டு இராமன் தமிழகத்தை அடைய ஆரியர் வரவேற்கச் சில நாளங்கிருந்து சரபங்கன் நிலையை யடைந் திருந்தனர். ஒரு நாள் முனிவர்கள் ஒன்று கூடி வந்து தமிழகத்தில் தாங்கள் தவவேள்வி செய்ய முடியாமல் கரன் தடுப்பதைக் கூறி அவனைக் கொன்று தங்களை வாழ்விக்கும்படி வேண்டினர். ராமன் அதற்கிசைந்து விடை பெற்றுச் சென்று முனிவர் இருக்கையில் தங்கித் தமிழ் கற்றும், வேள்வி செய்ய முனிவர்க்குதவியும், இரண்டகத் தமிழரை நட்பாக்கியும் பத்தாண்டினை அங்கே கழித்தனன்,…

புலவர் குழந்தையின் இராவணகாவியம் – கதைச்சுருக்கம்

  (முன் கட்டுரையின் தொடர்ச்சி) இராவண காவியம் கதைச்சுருக்கம் மிகப்பழங் காலத்தே தமிழ்நாடு இன்றுள்ள எல்லைக்குட்பட்டிருக்கவில்லை; வடக்கில் பனிமலை காறும் பரவியிருந்தது; அயல்நாடர் குடியேற்றத்தால் பின்னர் விந்தமலையை வடக்கெல்லையாகக் கொண்டது. தென் கடல் நிலமாக இருந்தது. அது, இன்றுள்ள குமரிமுனைக்குத் தெற்கில் ஆயிரங் கல்லுக்கு மேல் அகன்றிருந்தது. கிழக்கிலும் வங்கக் கடலும், சாவக முதலிய தீவுகளும் ஒரே நிலப்பரப்பா யிருந்தது. தென்னிலத்தில் குமரிமலை; பன்மலை முதலிய மலைகள் ஓங்கியுயர்திருந்தன. குமரிமலையில் குமரியாறும், பன்மலையில் புஃறுளி யாறும் தோன்றி அந்நிலத்தை வளஞ்செய்தன. குமரியாற்றுக்கும் பஃறுனியாற்றுக்கும் இடைப்…

1 9 10 11 15