அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி

தலைப்பு : கூடங்குளம்: ஏன் இந்த உலை வெறி?   1. கவிதை எந்தப் பா வகையிலேயும் (புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம்.  2. 24 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.  3.    அணுஉலை எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளை            மட்டுமே அனுப்புக!  4. கடைசி நாள் : 31.12.2013.  5. உங்களின் தெளிவான அஞ்சல் முகவரி,     மின்னஞ்சல் (e-mail),                  அலைபேசி விவரங்களைக் குறிப்பிடுக. பரிசுத் தொகை முதல் பரிசு உருவா 500 இரண்டாம் பரிசு உருவா 300 மூன்றாம் பரிசு உருவா…

தீக்குச்சி – கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

  கலைவளர் அறுபத்து நான்கு கயமையைப் பொசுக்க நாமும் தவத்தீக் குச்சிகள் கொண்டே தீய்த்திட்டே தமிழைக் காப்போம்   கவலைகள் சொன்ன ஆசான் கவனமாய்த் தீர்க்க நாமும் புவனத்துத் தமிழ்த்தாய் எண்ணி பூமியில் ஓங்கி வாழ்வோம்!   ஒளியினை வழங்கும் குச்சி ஒண்டமிழ் காக்கும் வேள்வி பழியினைப் போக்க என்றும் பாவத்தைப் பொசுக்கி வெல்வோம்!   விழிகளின் தோழன் ஒளியே விண்டிடும் தீக்குச்சி வழியே தளிர்விடும் அறத்தைக் காக்க தீக்குச்சியால் சமைத்தே ஈவோம்!   தீமைகள் கலையும் ஆசான் பாக்குச்சி சமைத்து நானும் பாதைவழி…

தேடுகிறேன் . . . !

ஓடோடி   உழைத்தமகன்  வாடி   மண்ணில் உட்கார்ந்தே   தேடுகிறேன்  உள்ளத்தால்  எண்ணி ஆடிப்   பெருங்காற்றில்  அடிமரமே   வீழ்ந்துவிட்டால் கூடி   நிழலிலமரக்   கூடுமோ ? வௌவால்  மாந்தர்கள்   வாழும்தமிழ்  மண்ணில் வாய்மை   மேட்டிலொரு   தூய்மையாளன்  தோன்றினான் ! காய்மை  மனமில்லாக்   காரணத்தால்  கரைசேரவில்லை தாய்மை  மனமிருந்ததாலே   தமிழ்க்கரைகண்டார் !

தமிழைத் தாங்கும் தமிழ்வழிப் பள்ளிகள்

  – வெற்றிச்செழியன் செயலர், தமிழ்வழிக்கல்வி இயக்கம் தமிழ்வழிக் கல்வி        “தாய்மொழி வழிக்கல்வியே சிறந்தது, சரியானது”, என நாம் அனைவரும் அறிவோம்.  உலகெங்கும் வாழும் அறிஞர்கள் இதையே வலியுறுத்தி வருகின்றனர்.  தமிழ் நமது தாய்மொழி; எனவே, தமிழே நமது கல்வி மொழியாக இருக்க முடியும்; இருக்க வேண்டும்.

காலத்தால் அழியாத தமிழ்நாடன்

கவிஞர் சேலம் தமிழ்நாடன் [மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவர்,] தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தகுந்தவை. அவரின் இலக்கியப் பணிகள் காலத்தால் அழியாதவை. சேலம் மாவட்டம் ஏர்வாடியில் 1943 ஆம் ஆண்டு பிறந்த தமிழ்நாடனின் இயற்பெயர் சுப்பிரமணியன். திருமணி முத்தாற்றங்கரையில் அமைந்திருக்கும் அவ்வூரின் எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம் இருசாயம்மாள் இணையர்,

தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் !

– கவிஞர் இரா .இரவி எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! ‘கனியிருப்பக்  காய்கவர்ந் தற்று ‘  திருவள்ளுவர் கற்கண்டாய் வடித்த குறள் இதற்கும் பொருந்தும் ! கனியாக நல்ல தமிழ் எழுத்துககள் இருக்கையில் !

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 1

 வரலாற்று நோக்கு பழந்தமிழகத்தின் வரலாறு உலகிற்கு இன்றும் அறியபடாததாகவே உள்ளது. தமிழ் மக்கள்கூடத் தங்களின் வரலாறு குறித்து அறியாதவர்களாகவே உள்ளனர். இந்திய வரலாற்றில் தமிழக வரலாற்றிற்கு முதன்மை அளிக்கப்பட வில்லை. இந்திய வரலாற்றாளர்கள் பழந்தமிழகம் குறித்து முற்றிலும் அறியாதவர்களாகவே உள்ளனர். அவர்கள் பழந்தமிழக வரலாற்றை உணர்த்தக் கூடிய பொருள்கள் தங்களிடம் இல்லை எனக் கூறலாம். அவர்களுக்குப் பழந்தமிழர் வரலாற்றை எழுதுவதற்கு வேண்டிய கருவூலமாகத் திகழக் கூடிய தொல்காப்பியம்

தமிழ் வரிவடிவம் காப்போம்! – 1

 – தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன்     அறிவியல் முறையில் சிறப்பாக அமைந்தது தமிழ் வரிவடிவம். தமிழ் வரிவடிவம்தான் இந்திய மொழிகளின் வரிவடிவங்களுக்குத் தாய் என்கிறார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். ஆனால், அவ்வப்பொழுது வரிவடிவச் சிதைப்பாளர்கள் இவ்வரிவடிவத்தைக் குலைப்பதில்  கண்ணும் கருத்துமாக இருந்து தங்கள் சிதைவு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். செம்மொழி மாநாட்டின்பொழுது சில வரிவடிவச்சிதைகள் அரங்கேற இருந்தன. தமிழ்க்காப்புக்கழகமும் தமிழ் எழுத்துக் காப்பியக்கமும்

வாழ்க தமிழ் பேசுவோர்..

–    வித்யாசாகர் ‘வாட்ச் பக்கெட் தேங்க்சு சாரி’யிலிருந்து தொடங்குகிறது தமிழிற்கான நாள்கொலை.. அம்மா அப்பா மாறி ‘மம்மி டாடி’யானது மட்டுமல்ல ‘டிவி ரேடியோ’ கூட வெகுவாய் தமிழைத் தின்றுதான் பசியாறிக்கொண்டுள்ளது; சுடுகாட்டுப் பிணத்தைக் கூட ‘டெட்பாடி’ ஆக்கும் ஆசையை எந்தக் கொள்ளியிளிட்டுக் கொளுத்தினால் என் தமிழனுக்கு தனது தாய்மொழி முழுக்க தமிழாகித் தொலையுமோ… (?) எவனோ எடுத்தெமைப் புதைக்கும் குழிக்குள் தமிழ்தொலைத்து தொலைத்து விழும் மாந்தரை எந்த மொழி மனிதரெனயெண்ணி மீண்டும் மீண்டும் மன்னிக்குமோ? ‘பேன்ட் சூட்டும் ஃபாரின் காரும் பேஸ்புக் பிசாவும்’ கூட…

சருகாகிக் கருகும் அரும்புகள்

                                                                                    –   முனைவர். எழில்வேந்தன் உள்ளங்கைக்குள் ஒளிந்திருக்கும் எதிர்காலத்தை மறந்து, இன்றைய உலகம் இரைதேட வைத்ததால் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கின்றன பிஞ்சு விரல்கள்.   வயதுக்கு வந்தால் வாசலுக்குச் செல்லவும் தடைசொல்லி பருவம் வந்ததும் உருவம் மறைக்கவும் உடை சொல்லி பெண்ணின் பெருமை பேசிவந்த பெற்ற உறவுகளே வறுமை வந்தால் எசமானர் இல்லங்களுக்கு எடுபிடி வேலைக்கு அனுப்பும்.   வாழ்வாதாரங்களை எல்லாம் வறுமையின் கொடுங்கரங்கள் நொறுக்கிப் போட்டதால் வசதிகளின் தாழ்வாரங்களில் வதைபடும் தளிர்கள்.   நீதியின் குரல்வளை நெறிக்கப் பட்டதால் வீதியில்…

இதழ்களின் நிலை என்ன?

இன்று வெளிவரும் பெரும்பாலான இதழ்களின் நிலை என்ன? மக்களிடம் பொறிநுகர் உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழும்படிச் செய்வதையே குறிக்கோளாக் கொண்டு செயல்படுகின்றன. நல்லறிவு கொடுத்து மக்களைத் திருத்தி நல் வழிப்படுத்தவேண்டிய கடமை இதழ்களுக்குண்டு. அக்கடமையைப் பலவும் மறந்து விடுகின்றன. நாட்டில் பெரும்பாலான மக்கள் வளர்ச்சியற்ற நிலையிலேயேயிருந்து வருகிறார்கள். ஆகவே, அவர்களின் நிலைக்கு இறங்கிச் சென்று தங்களின் அறிவை விற்றால்தான் பணம் சேர்க்க முடியும் என்று கருதி அவ்விதமே செய்கிறார்கள். நான் அவர்களைக் குறைகூற வேண்டுமென்பதற்காக இவற்றைக் கூறவில்லை. செய்தி இதழ்களில் புலவர்களுக்கும் போதிய விளம்பரம் கொடுப்பது கிடையாது….