இராசீவு வழக்கில் அப்பாவியான பேரறிவாளன் விடுதலை

இராசீவு வழக்கில் அப்பாவியான பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம் புதுதில்லி: இராசீவு படுகொலை வழக்கில் வஞ்சகமாகக் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. முன்னாள் தலைமையமைச்சர் இராசீவு படுகொலை வழக்கில் வாணாள் தண்டனையில் துன்புற்று வருகின்றனர் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, செயக்குமார், இராபருட்டு பயசு, இரவிச்சந்திரன். இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய 2014 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த மறைந்த செயலலிதா தலைமையிலான அமைச்சரவை கூடித் தீர்மானித்தது. ஆனால் கு.பு.து.(சிபிஐ) விசாரித்த வழக்கு…

கருனாடக இசையும் தமிழ்ப்பாடல்களும் : அறி. சுந்தர் சுப்பிரமணியன்

கருனாடக இசையும்தமிழ்ப்பாடல்களும் : அறி.சந்தர்சுப்பிரமணியன் ஒவ்வொரு அளவளாவல் நிகழ்விற்கு முன்னும்புதிய ஒலிச்சித்திரம் வெளியீடு சித்திரை 25, 2053 / 08.05.2022 மாலை 6.15 அணுக்கக் கூட்ட எண் 619 157 9931 கடவுக்குறி KUVIKAM 123

சிற்சபேசன் என்னும் சிரிப்பலை ஓய்ந்தது!

பட்டிமன்ற முன்னோடி, நயத்தக்க நகைச்சுவைக்குப் பலருக்கு ஆசானாக விளங்கிய சிறந்த சொற்பொழிவாளர், மேலாண்மை வல்லுநர், பேராசிரியர் முனைவர் திரு. கண. சிற்சபேசன் அவர்கள் இன்று – சித்திரை 04, 2053 / ஏப்பிரல் 17, 2022 – காலை 10.15 மணி அளவில் காலமானர்கள். குடும்பத்தினரின் ஆழ்ந்த துயரத்தில் அகரமுதல மின்னிதழ், தமிழ்க்காப்புக் கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் பங்கேற்கின்றன.

வந்தவாசியில் தொடங்கியது குழந்தைகள் வாசிப்பு இயக்கம்          

       அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும் முயற்சி முன்னெடுப்பு       அரசுப் பள்ளிகளில் படிக்கிற குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் குழந்தைகள் வாசிப்பு இயக்கம் வந்தவாசியில் தொடங்கப்பட்டுள்ளது. வந்தவாசியைச் சேர்ந்த மருத்துவர்கள், சமூக சேவகர்கள், ஆசிரியர்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.     மகுடை(கரோனா) பெருந்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த இரண்டாண்டுகளாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் குழந்தைகளுக்கான கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வந்தவாசியை…

கலைஞர் செம்மொழி விருது வழங்கு விழாவில் முதல்வரின் சிறப்பான உரையும் அறிவிப்புகளும்

கலைஞர்    மு.கருணாநிதி செம்மொழித்  தமிழ்  விருதுகள் வழங்கும் விழாவில் விருதுகள் வழங்கி உரையாற்றிய முதல்வர் மு.க.தாலின் அவர்கள், “மேடவாக்கம்  –  சோழிங்கநல்லூர்இணைப்புச் சாலை “செம்மொழிச்சாலை”  எனப்  பெயர்  மாற்றம்செய்யப்படும்.    என்றும்  தென்கிழக்குஆசியாவிலுள்ள  5  பல்கலைக்கழகங்களில் “செம்மொழித் தமிழ்இருக்கைகள்” அமைக்க நடவடிக்கை   மேற்கொள்ளப்படும்” என்றும்  “அண்ணா,  கலைஞர்காட்டிய பாதையில் கழக அரசுதமிழை  ஆட்சி  மொழியாக்கதொடர்ந்து குரல் கொடுக்கும்” என்றும்  உறுதிபடக் கூறினார். 2010  முதல்  2019-ஆம்  ஆண்டுகள்  வரையிலான  செம்மொழித் தமிழாய்வு  மத்திய  நிறுவனத்தால் வழங்கப்படும்     “கலைஞர்     மு.கருணாநிதி  செம்மொழித்  தமிழ்விருதுகள்’’    வழங்கும்  விழாவில், முதல்வர் …

‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித்தமிழ் விருதுகள்’ வழங்கப்பட்டன.

2010 முதல் 2019 ஆம் ஆண்டுகளுக்கான ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித்தமிழ்  விருதுகள்’ முதல்வரால் வழங்கப்பட்டன. முத்தமிழறிஞர்  கலைஞர்  அவர்களின்பெரு  முயற்சியால்  தொன்மையும்,  இலக்கியவளமும் நிறைந்த தமிழ் மொழியானது  2004-ஆம்  ஆண்டு  ஒன்றிய  அரசால்  செம்மொழியாக  அறிவிக்கப்பட்டது.  செம்மொழித்தமிழுக்கெனத்  தனித்தன்மையுடன்  கூடிய ஓர்  ஆராய்ச்சி  நிறுவனம்  தொடங்கப்படவேண்டும்  என்ற  முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்களின்    கனவினை    நிறைவேற்ற, ஒன்றிய அரசினைத் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் 2006-ஆம் ஆண்டு, இந்திய  மொழிகளுக்கான  நடுவண்  நிறுவனத்தின்  ஓர்  அங்கமாக,  செம்மொழிக்கான நிறுவன மொன்று அமைக்கப்பட்டது. பின்னர்2008-ஆம்  ஆண்டில்  ‘செம்மொழித்  தமிழாய்வு…

திருச்சி சமால் முகமது கல்லூரி முதுகலைத் தமிழாய்வுத்துறையின் முப்பெரு விழா

முப்பெரு விழா திருச்சிராப்பள்ளி சமால் முகமது கல்லூரி. முதுகலைத் தமிழாய்வுத்துறையில் 16-12-2021 அன்று ‘முப்பெரும் விழா’ நடைபெற்றது. இவ்விழாவில் திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கவிஞர் நி.அமிருதீன் எழுதிய “இலைகளின் மௌனம் கவிதைகளாய். . . . . . .” நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, நுண்திறன் மேம்பாட்டுச் சிறப்புச் சொற்பொழிவு ஆகிய நிகழ்வுகள் இனிதே நடைபெற்றன. கல்லூரியின் செயலர் – தாளாளர் முனைவர் அ.கா.காசா நசீமுதீன், முதல்வர் முனைவர். சை.இசுமாயில் முகைதீன், திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்…

தொல்காப்பியம்: இந்தி, கன்னடத்தில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்ட இந்திய அரசு

தொல்காப்பியம் தமிழ் இலக்க நூலின் இந்தி மொழி பெயர்ப்பு நூலையும் கன்னட மொழியில் தொல்காப்பியத்தின் தமிழ் நூல் மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை மொழிபெயர்த்து இந்திய அரசு வெளியிட்டிருக்கிறது. என்ன காரணம்? செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (அ) செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் (சிஐசிடி), தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இந்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஓர் ஆய்வு நிறுவனமாகும். இந்த மையம் மூலமாகத் தமிழ்ப் பழங்கால இலக்கணத்தைப் பிற இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி…

தன்னம்பிக்கையுடன் போட்டியிட்டால் வெற்றிபெற முடியும்

தன்னம்பிக்கையுடன் போட்டியிட்டால் வெற்றிபெற முடியும்      – சிலம்பாட்ட வீரர்களுக்கு மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் அறிவுரை         வந்தவாசி. நவம்.29. தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்டஅளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் வென்ற சிலம்பாட்ட வீரர்களுக்குப் பதக்கமும்,பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கும் விழா வந்தவாசி சிரீ அகிலாண்டேசுவரி மகளிர் கல்லூரிகலையரங்கில் நேற்று நடைபெற்றது.          திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவரும் தமிழ்நாடு சிலம்பாட்டக்கழக மாநிலத் தலைவருமான முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப., தலைமையின் கீழ்ச் செயல்படும் திருவண்ணாமலை மாவட்டச் சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்ட அளவிலானபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கமும் பாராட்டுச் சான்றிதழ்களும்வழங்கப்பட்டன.      …

கவிஞர் அ.வெண்ணிலாவிற்குப் புதுமைப்பித்தன் விருது

கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ புதினத்திற்குப் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினைத்’ தமிழ்ப் பேராயம் வழங்கியது சென்னை காட்டங்குளத்தூரிலுள்ள திரு.இரா.நி. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்ப்பேராயத்தின் எட்டாம் ஆண்டுவிழாவில், கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ எனும் வரலாற்றுப் புதினத்திற்குப் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’யும், பரிசுத் தொகை உரூ.50 ஆயிரமும் வழங்கினர். இவ்விழாவிற்கு, திரு.இரா.நி.(எசுஆர்எம்) பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தா.இரா.பாரிவேந்தர் தலைமையேற்றார். தமிழ்ப் பேராயத்தின் தலைவர் முனைவர் கரு.நாகராசன் வரவேற்புரையாற்றினார். கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் அ.வெண்ணிலாவுக்குப் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருருதினை’யும்,…

எழுத்தாளர் அ.வெண்ணிலாவுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’

எழுத்தாளர் அ.வெண்ணிலாவுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’                  எசுஆர்எம் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்புகளைத் தந்த படைப்பாளிக்கு விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறார்கள். இந்த ஆண்டிற்கான எசுஆர்எம் தமிழ்ப் பேராயம் வழங்கும் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’க்கு எழுத்தாளர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ புதினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியரும் கவிஞருமான அ.வெண்ணிலா, இதுவரை கவிதை நூல்கள் – 7, சிறுகதை நூல்கள் -4,  கட்டுரை நூல்கள் – 6, தொகுப்பு நூல்கள் – 6, கடித…

ஒன்றிய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசை எதிர்த்துத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்  ஒன்றிய அரசின் மக்கள் பகைப் போக்கை எதிர்த்து 20.09.21 காலை 10 மணிக்குச் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவை அலுவலகத்திற்கு முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சிங்கராயர், பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் எடுவின், பேரவை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.