எழுத்தாளர் மு.முருகேசிற்கு மேனாள் ஆளுநர் கோபாலகிருட்டிண காந்தி பாராட்டு
எழுத்தாளர் மு.முருகேசிற்கு மேனாள் ஆளுநர் கோபாலகிருட்டிண காந்தி பாராட்டு காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அட்டோபர் 2 அன்று சென்னையில் சிறுவர்களுக்கான ‘அரும்பு நூலரங்கம்’ தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு எழுத்தாளர் ஆயிசா இரா.நடராசன் தலைமையேற்றார். க.நாகராசன் அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில், சிறுவர் இலக்கியப் படைப்பிலக்கியங்களை கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவரும் கவிஞர் மு.முருகேசின் பங்களிப்பைப் பாராட்டி, மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநரும் காந்தியடிகளின் பேரனுமான கோபாலகிருட்டிண காந்தி பாராட்டும் நினைவுப் பரிசும் வழங்கிச் சிறப்பித்தார். வந்தவாசி நூலக…
புதுதில்லியில் தமிழக இளைஞருக்குச் ‘சிறந்த (மென்பொருள்) கணியக் கட்டுமானப் பொறியாளர்’ விருது
“ஆசியாவின் சின்னங்கள்(icons of Asia) 2022” விருது புதுதில்லியில் “உலகளாவிய பேரரசு நிகழ்வுகள்(Global Empire Events)” என்ற அமைப்பின் சார்பில் “ஆசியாவின் சின்னங்கள்(icons of Asia) 2022” விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த அசன் முகம்மதுவுக்குச் “சிறந்த (மென்பொருள்) கணியக் கட்டுமானப் பொறியாளர் 2022” விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். இந்தப் பிரிவில் போட்டியிட்ட ஆசியக் கண்டத்திலுள்ள பல்வேறு முன்னணிக் கணிய(மென்பொருள்) நிறுவனங்களைச் சேர்ந்த முப்பத்து எண்மரில் சிறந்த ஒருவராக அசன் முகம்மது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த…
‘வஃகியாய் வந்த வசந்தம்’ நூல் வெளியீட்டுக் காணொளி
வஃகியாய் வந்த வசந்தம்’ நூல் வெளியீட்டுக் காணொளி வஃகியாய் வந்த வசந்தம் – பொற்கிழிக் கவிஞர் இளையான்குடி மு. இதாயத்துல்லா அவர்களின் நான்காவது நூலாகும். நற்குணத் தாயகமாம் நபிகள் நாயகம் அவர்களுடைய வாழ்வும் வாக்கும் அவரது நாடி நரம்புகளிலெல்லாம், உணர்வுகளிலெல்லாம் இரண்டறக் கலந்து ஆளுமை செய்கிறதென்றே கூறலாம்.அதன் அடிப்படையில் உருவானதே இந்த நூல் ஆகும்.. இந்நூலின் வெளியீட்டு நிகழ்ச்சியின் காணொளி : https://www.youtube.com/watch?v=fsZGz0MXF0I நூலுக்கான இந்திய இணைப்பு : https://www.amazon.in/dp/B0B5GZPBKB நூலுக்கான பன்னாட்டு இணைப்பு : https://www.amazon.com/dp/B0B5GZPBKB முதுவை இதாயத்து துபாய் 00971 50…
தவத்திரு ஊரன் அடிகளார்க்குப் புகழ் வணக்கம்! -பெ.மணியரசன்
தவத்திரு ஊரன் அடிகளார்க்குப் புகழ் வணக்கம்! வள்ளலார் வழி ஆன்மிகச் சான்றோராக விளங்கிய தவத்திரு ஊரன் அடிகளார் இன்று (14.7.2022) அடக்கம் ஆனார்கள் என்ற செய்தி மிகவும் துயரமளிக்கிறது. வள்ளலார் வழியில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு, வடலூர் சன்மார்க்க நிலைய வளாகத்தையே தமது வாழ்விடமாக்கிக் கொண்டவர் ஊரன் அடிகளார். நான் திருச்சி தேசியக் கல்லூரியில் புகுமுக வகுப்பு (பி.யூ.சி) படிக்கும் போது, தங்கிப் படித்த திருச்சி சிந்தாமணி பாப்பம்பாள் சத்திர அறக்கட்டளை விடுதியில் ஒரு சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றுச் சிறப்பாகச் சைவநெறி, வள்ளலார்நெறி ஆகியவை…
முனைவர் பூமா பொன்னவைக்கோ மறைந்தார்
திருவாட்டி முனைவர் பூமா பொன்னவைக்கோ விடை பெற்றார் கணவர் பேராசிரியர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களுருக்கேற்ற தமிழார்வம் மிக்க மனை மாண்பினராகத் திகழ்ந்த, அனைவரிடமும் கனிவாகவும் எளிமையாகவும் பழகும் முனைவர் பூமா பொன்னவைக்கோ அவர்கள் ஆனி 17, 2053 வெள்ளி இரவு 11.45 மணியளவில் பிரியா விடை பெற்றார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். அன்னாரின் நினைவேந்தல் படையல் ஆனி 25, 2053 / 09.07.2022 சனி இரவு 7.00 காரியம் மறுநாள் ஞாயிறு காலை 9.00 மணி நிகழ்விடம்: கோ இல்லம், எண்…
பரமக்குடிச் சிறுவனுக்கு முனைவர் பட்டம்
பள்ளிக்கூடச் சிறுவனுக்கு முனைவர் பட்டம் பள்ளிக்கூடப் பொறுப்பாளர்கள் பாராட்டு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஆயிர வைசிய பதின்ம மேல்நிலைப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவன் த. சந்தோசு கண்ணா. இந்த மாணவருக்கு அண்மையில் மதுரையில் நடந்த விழாவில் பன்னாட்டுத் தமிழ்ப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இளம் அகவையில் மகிழுந்துபற்றிய பல செய்திகளை மிகவும் துல்லியமாகக் கூறி வருவதால் முனைவர் வழங்கப்பட்டது. இவர் ஏற்கெனவே ஆசிய ஆவண ஏடு(Asia Book of Record), இந்திய ஆவண ஏடு(India Book…
‘அ . . . .’ க்கு நன்றி! முதல்வரின் சிறப்பான அணுகுமுறையை உணரச் செய்தமைக்கு! – இலக்குவனார் திருவள்ளுவன்
‘அ . . . .’ க்கு நன்றி! முதல்வரின் சிறப்பான அணுகுமுறையை உணரச் செய்தமைக்கு! தலைமையமைச்சர் நரேந்திரர் மூன்று நாள் முன்பு சென்னையில் சில திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டித் தொடக்கி வைத்தார். இதில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.தாலின் மிகச் சிறப்பாக நம் மாநிலத்தின் வேண்டுகோள்களைத் தெரிவித்தும் திராவிட நன்முறை ஆட்சி விளக்கம் குறித்தும் பேசினார். இதனால் கண்ணேறு பட்டதால் கண்ணேறு கழிக்கப் பூசுணைக்காய் கட்டுவதுபோல் ஒருவர் சிலவற்றை உதிர்த்துள்ளார். ‘முதல்வர் பேசிய உரைக்காக நான் வெட்கப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார். அந்த அளவிற்குச்…
திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா
திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை அமைப்பான திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா கன்னியாகுமரியில் உள்ள சிங்கார் உறைவகத்தில்(ஓட்டலில்) மே 18, 2022 மாலை 6 மணிக்கு நடைபெற்றது. விழாவில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், அமைச்சர்கள் அன்பில் மகேசு பொய்யாமொழி, மனோ தங்கராசு, நாகர்கோவில் மாநகரத் துணைத் தலைவர் மேரி பிரின்சி இலதா, வழக்குரைஞர் இராசீவுகாந்தி, முனைவர் அருட்பணி எசு.தனிசுலால், ஐயா பாலபிரசாபதி அடிகளார், முனைவர் ஆனந்து முதலானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில்…
இராசீவு வழக்கில் அப்பாவியான பேரறிவாளன் விடுதலை
இராசீவு வழக்கில் அப்பாவியான பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம் புதுதில்லி: இராசீவு படுகொலை வழக்கில் வஞ்சகமாகக் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. முன்னாள் தலைமையமைச்சர் இராசீவு படுகொலை வழக்கில் வாணாள் தண்டனையில் துன்புற்று வருகின்றனர் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, செயக்குமார், இராபருட்டு பயசு, இரவிச்சந்திரன். இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய 2014 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த மறைந்த செயலலிதா தலைமையிலான அமைச்சரவை கூடித் தீர்மானித்தது. ஆனால் கு.பு.து.(சிபிஐ) விசாரித்த வழக்கு…
கருனாடக இசையும் தமிழ்ப்பாடல்களும் : அறி. சுந்தர் சுப்பிரமணியன்
கருனாடக இசையும்தமிழ்ப்பாடல்களும் : அறி.சந்தர்சுப்பிரமணியன் ஒவ்வொரு அளவளாவல் நிகழ்விற்கு முன்னும்புதிய ஒலிச்சித்திரம் வெளியீடு சித்திரை 25, 2053 / 08.05.2022 மாலை 6.15 அணுக்கக் கூட்ட எண் 619 157 9931 கடவுக்குறி KUVIKAM 123
சிற்சபேசன் என்னும் சிரிப்பலை ஓய்ந்தது!
பட்டிமன்ற முன்னோடி, நயத்தக்க நகைச்சுவைக்குப் பலருக்கு ஆசானாக விளங்கிய சிறந்த சொற்பொழிவாளர், மேலாண்மை வல்லுநர், பேராசிரியர் முனைவர் திரு. கண. சிற்சபேசன் அவர்கள் இன்று – சித்திரை 04, 2053 / ஏப்பிரல் 17, 2022 – காலை 10.15 மணி அளவில் காலமானர்கள். குடும்பத்தினரின் ஆழ்ந்த துயரத்தில் அகரமுதல மின்னிதழ், தமிழ்க்காப்புக் கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் பங்கேற்கின்றன.
வந்தவாசியில் தொடங்கியது குழந்தைகள் வாசிப்பு இயக்கம்
அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும் முயற்சி முன்னெடுப்பு அரசுப் பள்ளிகளில் படிக்கிற குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் குழந்தைகள் வாசிப்பு இயக்கம் வந்தவாசியில் தொடங்கப்பட்டுள்ளது. வந்தவாசியைச் சேர்ந்த மருத்துவர்கள், சமூக சேவகர்கள், ஆசிரியர்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர். மகுடை(கரோனா) பெருந்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த இரண்டாண்டுகளாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் குழந்தைகளுக்கான கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வந்தவாசியை…