ஒருங்குறியில் தமிழ் – தேவைகளும் தீர்வுகளும் – கருத்தரங்கம்

அன்புடையீர், வணக்கம், தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தமிழ் ஒருங்குறி தொடர்பாக ‘ஒருங்குறியில் தமிழ் – தேவைகளும் தீர்வுகளும்‘ என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு, 05.03.2014, புதன்கிழமை அன்று, த.இ.க. கலையரங்கில் நடைபெறும். கீழ்கண்டுள்ள தலைப்புகளில் கருத்துரைகளும் கலந்துரையாடலும் நடைபெறும். 1.      தமிழ் பின்னம் – பெயரிடல், வரிவடிவம் தொடர்பாக. 2.      ஒருங்குறி எழுத்துருக்களும், விசைப்பலகையும் – பயன்பாடு 3.      ” ஓர் இந்தியா -ஓர் எழுத்துரு” – திரு. அமைதி ஆனந்தம் அவர்களின் கருத்துரு 4.      தமிழ் ’16- ஓர்மி(பிட்டு)’ அனைத்துரு எழுத்துரு…

வளைகுடா வானம்பாடி : திங்கள் சிறப்புக்கூட்டம்

குவைத் வளைகுடா வானம்பாடியின் திங்கள் சிறப்புக்கூட்டம் மங்கப் சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் அரங்கில் மிக சிறப்பாக நடைபெற்றது. நிறுவனர் திரு.கா.சேது அவர்கள் தொடங்கி வைக்க திரு சுப்புராசு அவர்கள் தலைமை வகித்தார்கள். தாயகத்தில் இருந்து தமிழரின் சிறப்புகளை ஆராய்ந்து வரும் ஆராய்ச்சியாளர் தொலைபேசி வழியே பல அரிய தகவல்களைப் பகிர்ந்து சிறப்புரையாற்றினார். வழக்கம்போல் குவைத் கலைஞர்களின் பாடல்கள், கவிதைகள் என்று மேடையில் களைகட்டியது. மருத்துவர் திருமதி சுதந்திராதேவியின் மருத்துவ  அறிவுரைப்பகுதி எல்லோருக்கும் பயனுள்ளதாக அமைந்தது. ‘தமிழ் சமூகத்தில் காதல்’ என்று நிலவனும், ‘தமிழர்களின் ஒற்றுமை’ என்று திரு…

மோடிக்குப் பாராட்டு! – இலக்குவனார் திருவள்ளுவன்

   பா.ச.க.வின் தலைமையாளர் வேட்பாளராக அறிவிக்கப் பட்ட குசராத்து முதல்வர்  நரேந்திரர்  பாராட்டப்பட  வேண்டியவர். தேர்தல் வெற்றிக்காகக்கூடப்  போலியான வாக்குறுதி தராதவர் என்றால் அவரைப் பாராட்டத்தானே வேண்டும்?   வேறு வகையில் என்றால் அரசியல்வாதி என்ற முறையில் பொய்யான வாக்குறுதிகள்  தருவதற்குத் தயங்க மாட்டார். ஆசனால், தமிழினம் தொடர்பானதாயிற்றே! எனவே, வி்ழிப்பாக வண்டலூரில் பேசியுள்ளார்.   தொடக்கத்தில் தமிழன்னைக்கும் தமிழ் மக்களுக்கும் தமிழில் வணக்கம் தெரிவித்தது எல்லா அரசியல்வாதிகளும் செய்யும் செயல்தான். இருப்பினும் தமிழ்மண்ணில் இருந்து கொண்டு தமிழர்களிடம் வாக்கு கேட்கின்றோம்! தமிழினத்திற்காகவும் தமிழ்…

மாநில வளைகோல் போட்டி : திருநகர் அணி வெற்றி

மதுரை திருநகர் வளைகோல் மன்றம் சார்பில் வளைகோல் வீரர்கள் பாலசுப்பிரமணியன், செயசிங், பழனியாண்டவர் மெய்யப்பன் ஆகியோர்களது நினைவுச் சுழற் கோப்பைக்கான 15– ஆம் ஆண்டு மாநில அளவிலான வளைகோல் போட்டி  பிப்ரவரி 5 அன்று காலையில் தொடங்கி நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள  முதன்மை நகரங்களைச் சேர்ந்த 22 அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி உற்சாகமாக விளையாடின. முதல் நாளன்று காலையில் வாடிப்பட்டி ‘எவர்கிரேட்’ வளைகோல் மன்ற அணியும், இராசபாளையம் பெடட் பிரன்சு அணியும் களத்தில் இறங்கி மோதின. அதில் வாடிப்பட்டி எவர்…

மண் பறித்த மானம்! -இளையவன் செயா

விடுதலையே எம்பிறப்புரிமைஅவ் வேட்கைக்குக்        கெடுதல் செய்வோரையும் கெடவைத்த வீரமிகு  நேத்தாசியைப்பெற்று  வளர்த்த       வங்கமண்  இன்று தொங்கிவிட்டதே ! மொழிஅது தாய்காத்த விழிஅந்த        விழியை அழிப்பதற்கு விழையாதீர் விழைந்ததால் தான்பெற்ற”சர்” விருதையும்        பிழையான விருதுஎனப் புறமொதுக்கி பிழைப்புக்காக ஏந்திய பித்தலாட்டத்தைக்       கழையாக  நினைத்தொடித்த  கவிஞர் பிழையில்லா  இரவீ ந்திரநாத் தாகூர்       பிறந்திட்ட மண்அதுவே வங்கமண் ! விடுதலை  வேட்கையால்  வீறுகொண்டு       கெடுதலையே  செய்யும்   கேடர்களை வெற்றிகொள்ள  வீரமுழக்கமிட்ட வீரர்கள்       வற்றிப்  போகாதமண்   வங்கமண் !…

பன்னாட்டுக் கருத்தரங்கம்-தமிழ்க் கணினி இணையப்பயன்பாடுகள்

  அன்பு வலைப்பதிவு நன்பர்களுக்கு வணக்கம்.   தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம் மார்ச்சு 27,28 – 2014 அன்று திருச்சிராப்பள்ளியில் எமது கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கிற்குப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கணினி தொழில்நுட்ப அறிஞர்களிடமிருந்து கட்டுரைகள் வரவேற்க்கப்படுகின்றன. இத்துடன் அழைப்பிதழை இணைத்துள்ளேன். தொடர்பிற்கு முனைவர் துரை.மணிகண்டன் அலைபேசி எண்: 9486265886 http://www.manikandanvanathi.blogspot.in/2014/01/blog-post.html

கல்விமொழியும் தமிழே! மத்திய அலுவலக மொழியும் தமிழே! – ம.தி.மு.க. தீர்மானம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் 22-ஆவது பொதுக்குழு 04.02.2014 செவ்வாய்க்கிழமை காலை வானகரத்தில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன:- தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றத்திலும், அனைத்து மத்திய அரசு நிறுவனங்களிலும் தமிழ்மொழியை அலுவல் மொழி ஆக்கிட வேண்டும்; மழலையர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் எல்லா நிலைக்கல்வியும்  தமி்ழ்மொழி வாயிலாகவே இருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன், இந்தியாவின் ஆட்சிமொழியாகத் தமிழ்மொழி அரியணை ஏறுவதற்கும் தொடர்ந்து பாடுபடுவது என இப்பொதுக்குழு தீர்மானிக்கின்றது.   வரும் நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரசுக் கட்சியை ஆட்சிப் பீடத்தில் இருந்து அகற்றும் குறிக்கோளோடு, பாரதிய சனதா…

இந்தி எதிர்ப்பில் சிறை சென்ற செம்மல்கள், 1964

தாய்த் தமிழைக் காக்க இந்தி எதிர்ப்புப் போரில் வெஞ்சிறை புகுந்துள்ள தமிழ் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் தோழர் கே.ஏ.மதியழகன், எம்.எல்.ஏ, பேராசிரியர் க.அன்பழகன், எம்.எல்.ஏ, தோழர் எசு.சே. இராமசாமி, எம்.எல்.ஏ. தோழர் விழுப்புரம் சண்முகம், எம்.எல்.ஏ, தோழர் ஆ.தங்கவேலு, எம்.எல்.ஏ, தோழர் என் இராசாங்கம், எம்.எல்.ஏ, தோழர் அன்பில் தர்மலிங்கம் எம்.எல்.ஏ, தோழர் எம்.எசு.மணி, எம்.எல்.ஏ, தோழர் து.ப.அழகமுத்து, எம்.எல்.ஏ, தோழர் தியாகராசன், எம்.எல்.ஏ, தோழர் வெங்கலம் எஸ்.மணி, எம்.எல்.ஏ, தோழர் நாராயணன், எம்.எல்.ஏ, தோழியர் செகதாம்பாள் வேலாயுதம் எம்.எல்.ஏ, –      குறள்நெறி: ஆனி…

செய்திக் குறிப்புகள் சில

      உலக  மக்கள் தொகையில் எழுத, படிக்கத் தெரியாதவர்களில் 37% இந்தியாவில்தான் இருக்கிறார்கள்  – அனவைருக்குமான கல்வி இயக்க அறிக்கை(EFA Global Monitoring Report, 2013-14)        பெரியாண்டி என்னும் நூறு அகவை மூதாட்டியைப்  பேணும் மதுரை இடையப்பட்டியைச்  சேர்ந்த  6 ஆம் வகுப்பு பயிலும் அருச்சனாவிற்கு திரிபுரா அறக்கட்டளை சார்பில் நம்பிக்கை நாயகி விருது வழங்கப்பட்டது.       பாம்பிடம் இருந்து சிறிய குழந்தையைக் காப்பாற்ற உதவியதற்காக வேலூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்த விசாலானி என்கிற சிறுமிக்கும்,       பள்ளியை விட்டு இடையிலேயே நின்ற…

68 ஆவது திங்கள் பாவரங்கம்

  புதுச்சேரி : 27.01.2014 அன்று மாணவர் பொதுநலத் தொண்டியக்கம் நடத்திய 68 ஆவது திங்கள் பாவரங்க நிகழ்வில் “திருக்குறளைத் தேசிய நூலாக்கு” என்ற தலைப்பில் மரபுப் பா, புதுப்பா படித்தனர். மற்றும் துளிப்பா, சிறார் பா , மொழிபெயர்ப்புப் பா, கழக இலக்கியம் அறிமுகம் ஆகியவை நடைபெற்றன. புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் செயலராக தேர்வு பெற்ற பரிதியன்பன் (மு. பாலசுப்பிரமணியன்) அவர்களை மாணவர் பொதுநலத் தொண்டியக்கத்தின் செயலர், தேசிய குழந்தை விருதாளர் கு.அ.அறிவாளன் சிறப்பித்தார். தலைவர்,…

நெருப்பாய் நிமிர்ந்தான் முத்துக்குமரன்

– புதுவைத் தமிழ்நெஞ்சன் சூடற்ற தமிழனுக்குச் சூடேற்ற முத்துக்குமரா….! தீப்பந்தம் ஆனாய் – நாடற்ற ஆரிய நாடோடிக் கூட்டமிங்கே நம்மினத்தை அழிக்கிறதே வீணாய்! இந்தீய அரசுன்னைப் படுகொலையும் இம்மண்ணில் செய்தது தான் உண்மை – குமரா..! செந்தீயாய் தமிழினமும் தலைநிமிர தீக்குளியல் செய்ததெல்லாம் வன்மை! யாரென்று நேற்றுவரை நானறியேன் தமிழ்க்குமரா இம்மண்ணில் உன்னை – உன்னை யாரென்று அறியாதார் இன்றில்லை என்பதுதான் நாமறிந்த உண்மை! ஈழத்தில் எரிகிறதே இந்தீயா மூட்டிவிட்ட இனவெறியாம் நெருப்பு – தமிழ் ஈழத்தை அழிக்கின்ற பகையினத்தை அழித்தொழிக்க தமிழ்மறவா விரும்பு!…

சங்க இலக்கிய அறிஞர் வைதேகி அம்மையாரின் பட்டறை- தேவகி

சங்க இலக்கியப் பயிற்சிப் பட்டறை (வட கரொலினா) சங்க இலக்கியத்தை ஏன், எப்படிப் படிக்க வேண்டும் எனும் ஐயத்திற்கான விடை தேடுமுகமாக, வட கரொலினாவில் திருமதி. வைதேகி அவர்கள் நடத்திய ‘சங்க இலக்கியம் படிப்பது எப்படி’ என்கிற பயிற்சிப் பட்டறை தொடங்கியது. எளிமையான தோற்றம், செழுமையான இலக்கிய அறிவு, கற்பவர் உள்ளம் கவர கற்பிக்கும் திறன் என அனைத்தும் ஒருங்கே அமைந்த தமிழ்ப் பெண் திருமதி. வைதேகி என்றால் அது மிகையாகாது. முதல் நாள் பட்டறை: சங்க இலக்கியத்தை அவர் எப்படிப் படிக்கத் தொடங்கினார்…