வெருளி நோய்கள் 1136-1140: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1131-1135: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1136-1140 பார்வைத்திறன், கேட்புத்திறன் ஆகிய இரண்டுமில்லாதவர்கள் தொடர்பான தொடர்பான பேரச்சம், செவிடர் குருடர் வெருளி.பார்வைத்திறன் குறைபாடும் கேட்புத்திறன் குறைபாடும் ஒவ்வொருவருக்கு ஒவ்வோர் அளவில் இருக்கும். எனினும் இரு திறனும் இன்றிச் செவிட்டுக் குருடராக இருப்பவர்கள் இரங்கத்தக்கவர்கள். அவர்கள், தன்வெறுப்பும் கொள்பவர்களாக உள்ளனர்.Surdo, caeco ஆகிய இலத்தீன் சொற்களுக்கு முறையே செவிடு, குருடு எனப் பொருள்கள்.00 செவிடர் தொடர்பான பேரச்சம் செவிடர் வெருளி.காது கேளாதவர்கள், கேட்பு உதவியை(Hearin Aid) அணிந்து கொள்ளத் தாழ்வு மனப்பான்மை கொள்கின்றனர். இவர்களிடம்…

நாலடி நல்கும் நன்னெறி 24: நிலையான பயன் தரும் அறம் செய்க!: இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 23: பனைபோல் உயர்தன்மையுடையாரிடம் நட்பு கொள்க!: தொடர்ச்சி) என்ன செய்தாலும் நிலையான வாழ்க்கை கிட்டாது. ஆதலின் நிலையான பயன் தரும் அறம் செய்க! மான அருங்கலம் நீக்கி இரவென்னும்ஈன இளிவினால் வாழ்வேன்மன் – ஈனத்தால்ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந்து இவ்வுடம்புநீட்டித்து நிற்கும் எனின். நாலடியார் 40 கருத்து: ஈனச்செயலான பிச்சையை மேற்கொண்டேனும் உயிர் வாழலாம் என்னும் நிலை இருந்தால் நிலையான வாழ்விற்காக அதனை மேற்கொள்ளலாம். (ஆனால், உடம்பு நிலையானதில்லை. ஆதலின் நிலையான அறச்செயல் செய்வோமாக!) பதவுரை: மான அருங் கலம்=மானம் என்னும்…

வெருளி நோய்கள் 1131-1135: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1126-1130: இலக்குவனார் திருவள்ளுவன்) வெருளி நோய்கள் 1131-1135 (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன்வெருளி அறிவியல் 2/5

தொல்காப்பியம் அறிமுகம், தமிழ்க்காப்புக்கழகம், புது தில்லி

தமிழ்க்காப்புக்கழகம், புதுதில்லிக் கிளை இணைய அரங்கு உரை 4 நாள் : மாசி 02, 2057 / சனி / 14.02.2026 / காலை 10.00கூட்டத்தில் இணைய : https://meet.google.com/wko-iivr-bah தொடக்கவுரை : இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரை : புலவர் காளியப்பன் பிற அழைப்பிதழில் உள்ளவாறு முனைவர் வா. ஆனந்தி , செயலர்முனைவர் புத்தேரி தானப்பன், தலைவர்

வெருளி நோய்கள் 1126-1130: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1121-1125 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1126-1130 செருபியர்கள் மீதான அளவுகடந்த வெறுப்பும் தேவையற்ற பேரச்சமும் செருபிய வெருளி.செருபிய மொழி, நாடு, இனம், கலை, பண்பாடு முதலானவற்றின் மீது மிகுந்த வெறுப்பும் எதிர்மறைப்போக்கும் பேரச்சமும் இத்தகையோர் கொண்டிருப்பர்.செருபிய எதிர்ப்புணர்வை உருவாக்கும் வண்ணம் சில திரைப்படங்களும் வந்துள்ளன.00 செருப்படி விழும் என அளவு கடந்து பேரச்சம் கொள்வது செருப்படி வெருளி.வாய்ச் சண்டைகளில் செருப்பால் அடிபடுவது குறித்த பேரச்சம் இருப்பதுபோல் அரசியல் தலைவர்களுக்குப் பொது மக்களிடம் இருந்து விழும் செருப்படி குறித்த பேரச்சம் உள்ளது.பெரியார் ஈ.வே.இராமசாமி…

குறட் கடலிற் சில துளிகள் 41 : சூழலால் உருவாவதே அறிவு! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 40 : பழிச்சொல் தவிர்க்க நல்லினம் சேர்க! – தொடர்ச்சி) சூழலால் உருவாவதே அறிவு! மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௪ – 454) ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றும். ஆனால், சூழும் இனத்திற்கேற்ப உண்டாவதே அறிவாகும். பதவுரை : மனத்துளது போலக் காட்டி – (ஒருவனின்) மனத்தில் உள்ளதாகத் தோற்றத்தைக் காட்டி; ஒருவற்கு – ஒருவனுக்கு;இனத்துளதாகும் – அவன் சேர்ந்துள்ள இனத்தின் தன்மையாகவே;அறிவு –…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21.  நல்ல முதலிய பெயரடை அடுத்து வல்லினம் மிகாது : இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு: தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21.  நல்ல முதலிய பெயரடை அடுத்து வல்லினம் மிகாது இக்கோப்பில் பெரியக் குளம் என்று உள்ளது. முன்பே  பெரிய, சிறிய ,நல்ல. கெட்ட, சிறியன, அல்லன, பெரியன, நல்லன. என்பவற்றின் பின்னும் வல்லினம் மிகாது எனக் கூறியிருந்தேன். அதுபோல் மேலும் சிலவற்றைப் பார்ப்போம். பெரிய குளம்; பெரிய குடும்பம்; பெரிய செய்கை; பெரிய திட்டம்; பெரிய துறை; பெரிய தெரு; பெரிய தொல்லை; பெரிய பாசனம்;…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 06: இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 05: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 06   “தமிழினத் தொன்மையையும் தனித்தன்மையையும் நிறுவும் வகையில் நமக்குக் கிட்டியுள்ள சான்றுகள் மிகச் சிலவே. அவற்றுள் தலையாயது ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம். மொழி, இலக்கியம், வாழ்வியல் மூன்றனுக்கும் இலக்கணம் கூறும் பண்பாட்டுப் பெட்டகம். இதுபோன்றதோர் இலக்கண நூல் உலகில் எந்த மொழியிலும் தோன்றியது இல்லை. தமிழிலும்கூட இதற்கு நிகரானதோர் இலக்கண நூல் இதுவரை உருவாகவில்லை. தொல்காப்பியத்திற்கு முன்னர்ப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இலக்கண இலக்கிய வளம் மிக்கதாய்த் தமிழ் இருந்துவந்திருக்கவேண்டும்…

1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு : இலக்குவனார் திருவள்ளுவன் 1

1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு இன்றைய நூலாய்விற்குரிய 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் என்னும் நூலின் ஆசிரியர் இலக்குவனார் மொழிப்போர் நூற்கலைஞர் நிவேதிதா உலூயிசு, எழுத்தாளராக மட்டுமல்லாமல், ஆய்வாளர்,பெண்ணிய வரலாற்றாளர், குமுகச்செய்றபாட்டாளர் ஆவார்.எனவே, இவரது நூல்கள் பலவும் அறியப்படாமல் உள்ள அறிய வேண்டிய செய்திகளை அறியச்செய்யும் வகையில் உள்ளன. முதல் பெண்கள், ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை, சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை, வடசென்னை – வரலாறும் வாழ்வியலும், அறியப்படாத கிறித்தவம் (இரண்டு பகுதிகள்), பெயரற்றவர்களின் குரல் முதலிய நூல்கள் இவரது ஆய்வுப்…

இந்தி நுழைவை எந்நாளும் தடுப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தி நுழைவை எந்நாளும் தடுப்போம்! “இந்தியை அல்ல, இந்தித்திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்” என நம்மைத் தலைவர்கள் ஏமாற்றுகிறார்கள். நாமும் “ஆமாம், ஆமாம்” என்று சொல்லி இந்தித் திணிப்பிற்கு ஆட்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களின் மாநிலங்களில் இந்திப் பயன்பாட்டை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அதற்கு அப்பால் பிற மக்களின் மீது, நம் மக்களின் மீது இந்தியை நுழைப்பதே திணிப்பதுதான். பள்ளிகளில் இளமழலை(L.K.G.) வகுப்பிலிருந்தே இந்தி திணிக்கப்பட்டுக் கற்பிக்கப்படுகிறது. கேட்டால் விருப்பப் பாடம் என்கிறார்கள். விருப்பப்பாடம் என்றால் வேறு மொழிகளும் விருப்பப்பாடப் பட்டியலில் இருக்கிறதா என்றால்…

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் : ஆளுமையர் உரை 153 & 154 ; நூலரங்கம்

செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை.                                                    (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௧ – 411) தமிழே விழி!                                 தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 153 & 154 ; நூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 தை 08, 2057 ஞாயிறு  08.02.2026 காலை 10.00 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமையும் நூலாய்வும்:  இலக்குவனார் திருவள்ளுவன்…

வெருளி நோய்கள் 1076-1080: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1071-1075: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1076-1080 புனைவுரு பாத்திரமான சுயூ எல்லென்(Sueellen) குறித்த வரம்பற்ற பேரச்சம் சுயூ எல்லென் வெருளி.00 சுரங்கைக் காணாட்டம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சுரங்கை வெருளி.காணாட்ட வெருளி உள்ளவர்களுக்குச் சுருங்கை வெருளி வர வாய்ப்புள்ளது.00 சுருக்கக் குறியீடு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சுருக்கக் குறியீட்டு வெருளி.Abbreviato என்னும் இத்தாலியச் சொல்லிற்குக் குறுக்க வடிவம் எனப் பொருள்.00 இருப்பூர்தி முதலியவற்றின் போக்குவரத்திற்கான நிலத்தடியில் அமையும் குடைவழிப்பாதை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சுருங்கை வெருளி.சுருங்கை, சுரங்கை என்பனவற்றின் பொருள் ஒன்றுதான்….