மறைமலையம் – மறைமலை அடிகள் நூல்கள் முன்பதிவுத் திட்டம்

மறைமலை அடிகள் நூல்கள் தொகுப்பு : முதுமுனைவர் இரா.இளங்குமரன் பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம்

அச்சின் எதிர்காலம் – ஒரு நாள் கருத்தரங்கம், மதுரை

  மார்கழி 04, 2046 / 20.12.2015 அன்று மதுரையில் நடைபெறவுள்ள ‘அச்சின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் நடத்தப்படவுள்ள ஒரு நாள் கருத்தரங்கிற்குப் பதிவு செய்ய கடைசி நாள் ஐப்பசி 29, 2046 / 15.11.2015. எனவே விரைந்து பதிவு செய்து பலன் பெற வேண்டுகிறோம்.   நமது பயிலகத்தில் நடைபெறும் ஒரு வார காலப் பயிற்சி வகுப்புகளுக்கு நிறைய விசாரணைகள் வருகின்றன. கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் முன்பதிவு செய்து வரவேண்டியது கட்டாயமாகும். நன்றி, செ. வீரநாதன் பாலாசி கணினி வரைகலைப் பயிலகம் 167,…

தமிழ் இந்து நடத்தும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

அன்பினிய நண்பர்களுக்கு., வணக்கம். மாமேதை அப்துல் கலாம் குறித்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் நடத்திய ஓவிய – கட்டுரைப்போட்டிகளைத் தொடர்ந்து தற்போது – 9,10-ஆம்  வகுப்புகளுக்கு கட்டுரைப் போட்டியையும், 11,12-ஆம் வகுப்புகளுக்கு பேச்சுப்போட்டியையும் நடத்துகிறது.   தங்கள் பள்ளிப் பிள்ளைகள் இப்போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை வென்றிட ஆவண செய்யுங்கள்.   கட்டுரைகளை மொத்தமாகத் தொகுத்து – = மு.முருகேசன், முதுநிலைத் துணை ஆசிரியர் தி இந்து -தமிழ் நாளிதழ், கத்தூரி கட்டடம் 124, வாலாசா சாலை, சென்னை – 600 002. பேசி: 74013 29364….

பன்னாட்டு நீதிப் பொறிமுறை வேண்டும் கூட்டறிக்கை

  ஈகச் சுடர் திலீபன் நினைவு நாளில் (2015 செப்டம்பர் 26) ஒரு கூட்டறிக்கை இருபத்தெட்டு ஆண்டுகள் முன்பு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தாலும் இந்தியப் படையிறக்கத்தாலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் சந்தித்த நெருக்கடியை வெற்றி கொள்ளச் சொட்டு நீரும் அருந்தாமல் பட்டினிப் போர் புரிந்து இன்னுயிர் தந்த திலீபன் நினைவாக – திலீபனின் 28 ஆவது நினைவு நாளான சென்ற 26.09.2015 அன்று மாலை 6  மணியளவில்  சென்னை  தியாகராய நகரிலுள்ள செ. தெ. தெய்வநாயகம் பள்ளியில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்திய  “வேண்டும்…

குதிரை குப்புறத் தள்ளியதும் இல்லாமல் குழியும் பறித்துவிட்டது!: கருணாநிதி

குதிரை குப்புறத் தள்ளியதும் இல்லாமல் குழியும் பறித்துவிட்டது! கலைஞர் மு.கருணாநிதி ” ‘தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி ஆகும்’ என்று இலக்கணம் வகுக்கப்பட்டிருந்தாலும் இலங்கையின் ஆதிக் குடி மக்களான ஈழத் தமிழர்களுக்குத் தொடர்ந்து இழைக்கப்பட்டு வந்த எண்ணிலடங்காத கொடுமைகளுக்கும், இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றுக்கும் தாமதமாகவேனும் நீதியும் நியாயமும் கிடைக்குமென்று உலகத் தமிழர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், திகைப்புத் தரும் விதமாக அமைந்திருக்கிறது ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் நேற்று (௨-௧௦-௨௦௧௫ ) நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம்.   அதில், அமெரிக்கா…

திருடன் கையில் திறவுகோல் – இராமதாசு

ஐ.நா தீர்மானம் திருடன் கையில் திறவுகோலை ஒப்படைப்பதற்கு இணையானது:  மரு.இராமதாசு   “இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து அந்நாட்டு நீதிமன்றத்தின் மூலமாகவே உசாவல் நடத்த வகை செய்யும் அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இந்தியா முதலான நாடுகளின் ஒத்துழைப்புடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. போர்க்குற்றங்களையும், இனப் படுகொலையையும் நடத்திய கொடுமதியானவர்கள் தண்டனையின்றித் தப்பிக்கவும், சொந்தங்களைப் பறி கொடுத்தவர்கள் இறுதி வரை நீதி கிடைக்காமல் வாடவும்தான் இந்தத் தீர்மானம் வகை செய்யும்.   இலங்கையில் ௨௦௦௯ (2009) ஆம் ஆண்டு நடந்த இறுதிப்…

அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றத்தையும், மன வருத்தத்தையும் அளிக்கிறது: செயலலிதா

அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றத்தையும், மன வருத்தத்தையும் அளிக்கிறது: தமிழ்நாட்டு முதல்வர் செ.செயலலிதா   “தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் ௧௬-௦௯-௨௦௧௫ (16.9.2015) அன்று ஒருமனமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குச் செயல் வடிவம் கொடுக்க நடுவண் அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதையே தற்பொழுது ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எடுத்துரைக்கிறது.   ஒட்டுமொத்தத் தமிழினத்தின் குறிக்கோளுக்கும், இலங்கை வடக்கு மாகாண அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையிலும், இலங்கை வாழ்தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் வகையிலும், இலங்கையில் உள்நாட்டுப் போர்…

ஐ.நா.வில் படுகொலை செய்யப்பட்டது நீதி! – வைகோ

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கத் தீர்மான நிறைவேற்றத்தால் படுகொலை செய்யப்பட்டது நீதி! – வைகோ   “இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் இனத்தைப் படுகொலை செய்த சிங்களப் பேரினச்சார்பு அரசை அனைத்துலக நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டிய ஐ.நா-வின் மனித உரிமை ஆணையத்தில் தமிழர்களுக்கான நீதி சாகடிக்கப்பட்டு, அநீதிக்கு மகுடம் சூட்டப்பட்டு விட்டது. ஐ.நா-வின் வரலாற்றிலேயே ௨௦௧௫ (2015) அக்டோபர் ௧ (1) ஆம் நாள் களங்கத்தைச் சுமக்கும் கருப்பு நாளாகிவிட்டது.   ௨௦௦௯ (2009) ஆம் ஆண்டில் கொலைகாரச் சிங்கள…

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 : அறிவிப்பு 3

பதிவு விவரம்   கணித்தமிழ்ச் சங்கம் சார்பில் வருகிற புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17 18 நாள்களில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் நடைபெற உள்ள ‘தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கத்திற்கான பதிவு’ கணித்தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளத்தில் (www.kanithamizh.in)   தொடங்கப்பட்டுள்ளது. பதிவுப்படிவம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பலாம் தமிழ் வரிவடிவ வரலாற்றில் நடைபெறும் முதல் கருத்தரங்கு இது. இதில் தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்துள்ள தொழில்நுட்ப வல்லுநர்களும், இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களின் (IIT) வடிவமைப்புப் பிரிவுகளில் பணிபுரியும் பேராசிரியர்கள்,…

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 அறிவிப்பு 2

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 அறிவிப்பு 2 புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17, 18 – 2015 தமிழ் இணையப் பல்கலைக் கழகம் கலையரங்கம், சென்னை–25. கருத்தரங்கம் பற்றி   ஒரு மொழியில் எழுதுவதற்கும், படிப்பதற்கும் உகந்த வகையிலும், அம்மொழியை எழுதும்போதும், அச்சிடும்போதும், காட்சிப்படுத்தும்போதும் கவரும் வகையிலும் அம்மொழியின் எழுத்துருக்களை ஒழுங்கமைக்கின்ற கலையாகவும் தொழில்நுட்பமாகவும் விளங்குவது எழுத்துருவியல் ஆகும். எழுத்துருக்களை ஒழுங்கமைப்பது என்பது, எழுத்துருவின் வடிவங்கள், புள்ளிக் கணக்கில் அவற்றின் உருவளவு, வரியின் நீளம், வரிகளுக்கு இடையேயான…

தமிழை மறவாதிருக்க உறுதி ஏற்பிர்! விவரம் அனுப்புவீர்! – தமிழ்க்காப்புக்கழகம்

நாம் தமிழரெனில் உறுதி ஏற்போம்! பெயர் விவரம் வெளியிடப்பெறும். உலகத் தமிழன்பர்களே! தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும். நம் எண்ணமும் சொல்லும் செயலும் தமிழாகத் திகழ வேண்டும். தமிழர் உலகெங்கும் முதன்மையிடம் பெற வேண்டும் எனில் தமிழ் எங்கெங்கும் தலைமையிடம் பெற வேண்டும். அதற்கு உழைப்பதே நம் ஒவ்வொருவரின் கடமை. இதற்கு உடன்படுபவர்கள், பின்வரும் உறுதிமொழிகளை ஏற்க வேண்டுகிறோம்.   தமிழில் பிற மொழிச் சொற்களைக் கலந்து பேசவோ பிற மொழி எழுத்துகளைக் கலந்து…