தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – முதலறிவிப்பு

    நண்பர்களே, கணித்தமிழ்ச் சங்கம் சார்பில் வருகிற  புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 /அக்டோபர் 17 – 18  ஆகிய இரு நாளும்  சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் “தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – Tamil Typography Conference 2015’’ நடைபெறுகிறது. மாநாட்டுக்கான பதிவுகள் – விவரங்கள் கணித்தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளத்தில் 30–09–2015 அன்று வௌியிடப்படும். கணித்தமிழ்ச் சங்கம் / உத்தமம் / ஆசிரியர் / மாணவர்களுக்கு 50% சலுகைக் கட்டணம் உண்டு. மீண்டும் விரிவான தகவல்களுடன்……

பெருங்கவிக்கோ, தங்கர் பச்சான் ஆகியோருக்கு – சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசுகள்

‘  தினத்தந்தி’ நிறுவனர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் நினைவாக, ஆண்டு தோறும் அவருடைய பிறந்தநாளையொட்டி இலக்கியப்பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு  ‘சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழ்அறிஞர் விருது’, ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமனுக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு வெள்ளிப்பட்டயத்துடன்  உரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சி.பா. ஆதித்தனார் இலக்கியப்பரிசை ‘‘கலைமாமணி’’ தங்கர்பச்சான் பெறுகிறார்.  தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசு (உரூ.2 லட்சம்) இவருடைய ‘தங்கர்பச்சான் கதைகள்’ என்ற நூலுக்குவழங்கப்படுகிறது. புரட்டாசி 10,  2046 / செப். 27, 2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை…

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் நூலறிமுக விழா

புரட்டாசி 12, 2046 / செப். 29, 2015 மாலை 6.00 சென்னை முனைவர் சா.பாலுசாமி  பேரா.பழ.முத்துவீரப்பன்  முனைவர் மறைமலை இலக்குவனார்     மணிவாசகர் பதிப்பகம்

கண்ணியம் ஐம்பெரும் விழா

 மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டுவிழா கண்ணியம் 45 ஆவது ஆண்டுவிழா கவிதைப்போட்டி – பரிசு வழங்கும் விழா போட்டி நடுவர்களைச் சிறப்பிக்கும் விழா நூல் வெளியீட்டு விழா புரட்டாசி 09, 2046 / செப். 26, 2015 பிற்பகல் 3.00 மாம்பலம் ஆ.சந்திரசேகர் திருமண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை

“களவு போகும் நம் மண்ணும் மனிதமும் ” – சூழலியல் கருத்தரங்கம்

புரட்டாசி 10, 2046/ செப்.27, 2015  மாலை 5.30 மேற்குத் தாம்பரம் “களவு போகும் நம் மண்ணும் மனிதமும் ” – சூழலியல் கருத்தரங்கம்   இன்று தொடர்ச்சியாகச் சுரண்டப்பட்டு வரும் இயற்கை வளங்கள் குறித்து நாம் அறிந்தும் கவனம் செலுத்தாமலே இருக்கின்றோம். நாம், நமது அருகில் அன்றாடம் மணல் கொள்ளையால் சுரண்டப்பட்டும், வன்கவர்வுகளால்,   கொட்டப்படும் கழிவுகளால் மாசுபட்டும் வருகின்ற நீர் நிலைகளைப்பற்றிக் கவனத்தில் கொள்ள மறுக்கின்றோம். பணம் இருந்தால்தான் தண்ணீர்!, அதுவும் தூய்மையான நீரைப் பெற இயலாத நிலை! தொடர்ச்சியாகக் குறைந்துகொண்டு வரும்…

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்

புரட்டாசி 10, 2046 / செப்.27, 2015 காலை 11.00   இனப்படுகொலைக்கு நீதி கேட்டு இந்திய அலுவலகம் முற்றுகைப்போராட்டம்! இனப்படுகொலைகுற்றவாளி இந்திய அரசாங்கமே! தமிழர்களுக்கு இனியும் துரோகம் செய்தே! கலப்பு விசாரணை என்பது கயமைத்தனம்! பத்துக்கோடித் தமிழர்களின் ஒரே கோரிக்கை இனப்படுகொலாக்கான தன்னுரிமையுடைய பன்னாட்டு உசவாலும் பொதுவாக்கெடுப்புமே! தமிழ்இளைஞர்கள் – மாணவர்கள் கூட்டமைப்பு

‘மறுவாசிப்பில் சாவி’

இலக்கியவீதி  & பாரதிய வித்யாபவன் சிறப்புரை : திருவாட்டி சிவசங்கரி அன்புடையீர் வணக்கம்… நலனே விளைய வேண்டுகிறேன். இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில்  –   இந்த மாதம், ‘மறுவாசிப்பில் சாவி’.   புரட்டாசி 09, 2046/ 26.09.2015 – சனிக்கிழமை  மாலை 06.30 மணிக்கு,  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் சந்திப்போம்…    என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.

வேண்டும் பன்னாட்டு நீதிப் பொறிமுறை – த.தே.வி.இ.கருத்தரங்கம்

திலீபன் 28ஆவது நினைவுநாள் கருத்தரங்கம்   இருபத்தெட்டு ஆண்டு காலம் முன்பு தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் இந்தியத் தலையீட்டால் நெருக்கடிக்கு உள்ளான போது சொட்டு நீரும் அருந்தாத பட்டினிப் போராட்டத்தில் உயிர் தந்து தடை நீக்கிய ஈகச்சுடர் திலீபன் நினைவு நாளில் …. இன்று சிங்கள-அமெரிக்க-இந்தியக் கூட்டுச் சதியால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் தமிழீழ மக்களின் நீதிப் போராட்டத்தில் அடுத்துச் செய்ய வேண்டியது என்ன? என்ற வினாவிற்கு விடைதேடும் கருத்தரங்கினை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் நடத்துகின்றோம். திலீபன் நினைவை நெஞ்சில் சுமந்து……

சிலம்புச்செல்வர் ம.பொ.சி. 20 ஆம் ஆண்டு நினைவேந்தல்

மூன்றாமாண்டு சிலப்பதிகார விழா புரட்டாசி 16, 2046 /அக். 03, 2015 மாலை 4.00   அழைக்குநர்  : ம.பொ.சி.மாதவி பாசுகரன்